search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதல்
    X

    தி.மு.க நிர்வாகிகள் மோதலில் ஈடுப்பட்ட காட்சி.

    தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதல்

    • குமாரபாளையம் விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதலில் ஈடுப்பட்டனர்.
    • அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    குமாரபாளையம்:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 -2023-ன்படி குமார பாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1.92 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்த இடத்தில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் வந்தி ருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விஜய்கண்ணன், இது நகராட்சி சார்பில் நடத்தப்படும் பூமி பூஜை, இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க அனுமதி இல்லை, கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

    இதனால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இது பற்றி நகர செயலாளர் செல்வம் கூறியதாவது:-

    இது தமிழக அரசு ஒதுக்கிய நிதி, அதுவுமின்றி பொது நிகழ்ச்சி. நாங்கள் பங்கேற்போம்.

    அமைச்சர் நேரு 2 நாட்க ளுக்கு முன்பு வந்த போது, காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பாக பணி யாற்றியதற்காக, சால்வை அணிவித்து பாராட்டினார்.

    மேலும் நகராட்சி சார்பில் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி சென்றார். எனவே அரசு விழாக்களில் நாங்கள் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×