search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு காய்ச்சல்"

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,818 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.
    • கடந்த 18 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ்.-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,818 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.

    அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் கடந்த 18 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவ மனைகளில் 583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    மற்றொரு புறம், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளாட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு பாதிப்பு இருந்தால் 94443 40496, 87544 48477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

    மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள் தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ மனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களைச் சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, செயல் அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் ஆகி யோர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க உத்தர விட்டனர். அதன்படி கொசு புழு ஒழிப்பு பணியா ளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வார்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலை யில் பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இதில் சேலம் மெயின் ரோடு, பஸ் நிலையம், திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    • தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
    • இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் டெங்கு பாதிப்பு யாருக்கு அதிகம் ஏற்படுகிறது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன.

    இந்த ஆய்வு முடிவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் டெங்கு பாதிப்பு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதேபோல் அமெரிக்கன் சொசைட்டி ஆப் டிராபிக்கல் மெடிசின் மற்றும் ஹைஜின் வெளியிட்ட ஆய்வின்படி 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று முதல் அலையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பாதிக்காதவர்களை விட டெங்கு தாக்குவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெங்கு அதிக விகிதத்தில் தாக்கி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் முன்னிலையில், ஆய்வக செல்களை டெங்கு வைரஸ் எளிதில் தாக்கியதும் தெரிய வந்தது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் டெங்கு பரவல் வாய்ப்பு அதிகம் என்று முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இது 2017-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • திறந்த வெளிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
    • வடகிழக்கு பருவமழை சென்னையில் தீவிரமாக வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் முன்னரே சென்னை மக்களை டெங்கு காய்ச்சல் மிரட்டத் தொடங்கி இருக்கிறது. கடந்த மாதத்தில் இருந்தே டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறந்த வெளிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    வீடுகளை சுற்றியும் மொட்டை மாடிகளிலும் மழை நீர் தேங்கும் அளவுக்கு தேவையில்லாத பாத்திரங்களையோ சிரட்டைகளையோ போட்டு வைக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழையால் தேங்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு அதிக அளவில் கொசுக்களை உற்பத்தி செய்து அதன் மூலமாக டெங்கு காய்ச்சலை பரப்புவது அதிகரித்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை சென்னையில் தீவிரமாக வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

    இதையடுத்து மழைநீர் தேங்கும் பகுதிகளில் டெங்கு கொசுக்கள் புழுக்களாக இருக்கும்போதே விரட்டி கொல்லும் தன்மை கொண்ட ரசாயன பந்துகளை அதிகம் தயாரித்து சுத்தமான மழைநீர் தேங்கும் பகுதிகளில் வீசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் டெங்கு கொசுக்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வேலூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது
    • கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரம்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி மகள் பிரியதர்சினி (வயது 10). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

    காய்ச்சல் குணமாகாத நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் பரிசோதனையில் மாணவிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செம்மியமங்க லம் கிராமத்திற்கு மாணவியின் உடல் கொண்டு செல் லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

    மேலும் அந்த கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்ப ட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தண்ணீருக்கு பதிலாக இளநீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
    • உடலை முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பருவமழை காலமான செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.

    சென்னையில் டெங்கு பாதித்து பலர் சிகிச்சை பெறுகிறார்கள். போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந்தேதி அயப்பாக்கத்தை சேர்ந்த பூஜா (30) என்பவர் டெங்கு பாதித்து சிகிச்சையில் சேர்ந்தார். சர்க்கரை நோயாளியாக இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதே போல் பூந்தமல்லியை சேர்ந்த 15 வயது சிறுவனும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார்.

    தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் இறந்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கின்றன. எனவே உடலை முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    பகல் நேரங்களில் தூங்கினால் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது. கதவு, ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்துக் கொள்ள வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீருக்கு பதிலாக இளநீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான இபு புரூபன், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்வது ரத்தபோக்கு அபாயம் ஏற்படும்.

    வாந்தி, மூச்சுவிட சிரமம், தலைசுற்றல், மூக்கு, பல் ஈறுகளில் இருந்து ரத்தம் வழிவது தீவிர டெங்கு பாதிப்பாக இருக்கலாம். இந்த மாதிரி அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    • கிருமாம்பாக்கம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
    • புதுவையில் கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த மாதத்தில் தினந்தோறும் சராசரியாக 11 பேர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம், பனித்திட்டு, பிள்ளையார்குப்பம், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு ஆலடிமேடு கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பூங்காவேல் (வயது 53) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    அவர் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுபோல் நேற்று முன்தினம் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த ஜானகி (62), மற்றும் அவரது கணவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் ஜானகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருமாம்பாக்கம் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து கிருமாம்பாக்கம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

    புதுவையில் கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 1,724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும்.
    • நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வாலிபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த மையத்தில் உள்ள அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்ற 2½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து தனது மழலை குரலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது எனவும், கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும். நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    உடைந்து போன குடங்கள், டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை வீட்டை சுற்றி வைக்கக்கூடாது. நாம் குடிக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என சிறுவன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    மேலும் இதேபோல் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என செய்முறை விளக்கத்தோடு பேசும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகளில் தாமதம் கூடாது. மாதிரி எடுத்த 6 மணி நேரத்துக்குள் முடிவுகளை வழங்கி விட வேண்டும் என ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு தொடர்பவர்கள் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை பணிகளை வேகப்படுத்த வேண்டும். மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு விட்டால் அவர் குறித்த விபரங்களை உடனடியாக நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி, மாநகராட்சி நகர் நல அலுவலர், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பழைய குடியிருப்பு பகுதியில் 2 ஆசிரியைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் துரிதமாக செயல்பட்டு கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. தற்போது தாராபுரம் நகராட்சி முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது . இந்தநிலையில் 14வது வார்டு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பழைய குடியிருப்பு பகுதியில் 2 ஆசிரியைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து 14வது வார்டு பகுதி மக்கள் கூறுகையில்:-

    தாராபுரம் 14-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் மற்றும் கழிவுநீர்களை அகற்றாமல் இருந்த காரணத்தினால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஆகவே நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் துரிதமாக செயல்பட்டு கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர்.  

    • டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பெருங்குடி பகுதியில் மட்டும் சுமார் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மழைக்காலங்களில் ஏரியை ஒட்டியுள்ள சாலையில் தேங்கும் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏரியும் அசுத்தமாக மாறி வருகிறது.

    சென்னையில் ஏரிகளையொட்டியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு என்பது அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏரியும் சுகாதார கேட்டின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது.

    பெருங்குடி ஏரி 57 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஒரு காலத்தில் அந்த பகுதியில் இருந்த விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரி தற்போது அந்த பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் சமீப காலமாக பெருங்குடி ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் குப்பைமேடாக காட்சி அளித்து வருகின்றன. கிழக்கு மற்றும் வடக்கு பெருங்குடி பகுதிகளை இணைக்கும் ஏரியை ஒட்டியுள்ள சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறி இருக்கிறது.

    அந்த பகுதியில் கட்டுமான பொருட்கள், குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு இந்த சாலையின் ஒரு பகுதி சேதமானதையடுத்து அங்குள்ள மக்கள் ஏரியையொட்டிய சாலையை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இதன் பிறகே பெருங்குடி ஏரியை ஒட்டி உள்ள சாலை குப்பைமேடாக மாறி இருக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கடைகளில் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மழைக்காலங்களில் குப்பைகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி செய்யும் இடமாகவும் அந்த பகுதி திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பெருங்குடி பகுதியில் மட்டும் சுமார் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மழைக்காலங்களில் ஏரியை ஒட்டியுள்ள சாலையில் தேங்கும் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏரியும் அசுத்தமாக மாறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய பசுமை ஆணையம் கடந்த 2021-ம் ஆண்டு இந்த ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் இந்த பகுதியில் சேரும் குப்பைகளால் பெருங்குடி ஏரி மாசுபடுவது தொடர்கதையாகி இருப்பதாகவே அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    ஏரியை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும் என்பதே பெருங்குடி மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×