search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சலால் 5-ம் வகுப்பு மாணவி பலி
    X

    டெங்கு காய்ச்சலால் 5-ம் வகுப்பு மாணவி பலி

    • வேலூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது
    • கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரம்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி மகள் பிரியதர்சினி (வயது 10). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

    காய்ச்சல் குணமாகாத நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் பரிசோதனையில் மாணவிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செம்மியமங்க லம் கிராமத்திற்கு மாணவியின் உடல் கொண்டு செல் லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

    மேலும் அந்த கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்ப ட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×