search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நமது வீட்டை சுற்றி இதெல்லாம் வைக்கக்கூடாது... டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள்
    X

     டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அங்கன்வாடி குழந்தைகள் - டெங்கு கொசு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நமது வீட்டை சுற்றி இதெல்லாம் வைக்கக்கூடாது... டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள்

    • கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும்.
    • நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வாலிபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த மையத்தில் உள்ள அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்ற 2½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து தனது மழலை குரலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது எனவும், கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும். நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    உடைந்து போன குடங்கள், டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை வீட்டை சுற்றி வைக்கக்கூடாது. நாம் குடிக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என சிறுவன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    மேலும் இதேபோல் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என செய்முறை விளக்கத்தோடு பேசும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×