search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகள்"

    • டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
    • அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது. அதில் உள்ள விலைக்கு தான் அனைத்து மதுபாட்டில்கள், பீர் வகைகள் விற்க வேண்டும், கூடுதலாக ரூ.10 வைத்து விற்றால் விற்பனையாளர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் விசாகன் உத்தரவிட்டு இருந்தார்.

    சமீபத்தில் காணொலி காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் கூட அதை உறுதிப்படுத்தி பேசியுள்ளார். கூடுதல் விலைக்கு விற்கப்படும் விற்பனையாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார், மேலும் விற்பனையை தடுக்க தவறிய சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கடை வேலை நேரத்தில் பணியில் இல்லாத மேற்பார்வையாளர்கள் விற்பனை குறைவான கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள 73 கடைகளில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 7 மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. டாஸ்மாக் பொது மேலாளர்கள் நடத்திய சோதனையில் இது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மீது நிரந்தர பணி நீக்க நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

    இதுவரையில் அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. இடமாற்றம், சஸ்பெண்டு போன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த முறை டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கும் என்பதால் கலக்கத்தில் உள்ளார்.

    மத்திய சென்னையை தொடர்ந்து வடசென்னையில் உள்ள 81 கடைகள், தென் சென்னையில் உள்ள 89 கடை பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மதுபிரியர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலித்தால் கண்டிப்பான நடவடிக்கை என்பது அமைச்சர் முத்துசாமி கட்டுப்பாட்டில் இத்துறை வந்த பிறகு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றின் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுப்பது என்பது இதுவே முதல் முறையாகும். அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையில் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 அல்லது 2 இடங்களில் மட்டும் இல்லை. 99 சதவீதம் மதுக்கடைகளில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

    அதையும் டாஸ்மாக் பொது மேலாளர் மூலமாக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்களை புகைப்படங்களாக எடுத்து அதை பட்டியலாக தயாரித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம்.

    இதுகுறித்து வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அது எங்களுக்கு ஊக்கமாக அமையும். பணிகளை விரைவுபடுத்த நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பயனுடையதாக இருக்கும். மது விற்பனை நேரம் குறைப்பதற்கும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைக்கப்பெற்றதும் அதை நடைமுறைப்படுத்த அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது நீதிமன்றம் உத்தரவு என்பதால் அதற்கு கீழ்படிந்து தான் ஆக வேண்டும்.

    வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன. துறை அதிகாரிகள் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு நினைவு சின்னம் சிறந்த திட்டமாக ஏற்படுத்தப்படும்.

    இவை கலைஞரின் நினைவை மட்டும் போற்றுவதாக மட்டுமல்லாமல் மக்களுக்கு 100 விழுக்காடு பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 15 ஆயிரம் பேருக்கு விற்பனை பத்திரங்கள் தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது.
    • டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலும், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுகிறது.

    இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியான நிலையில் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

    மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

    கணினி மயமாக்குவதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இருந்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடையில் மூடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் 11 கடைகள் மூடப்பட்டன.
    • டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தன.

    மேலும் மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது என அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைக்க வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இருந்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடையில் மூடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் 11 கடைகள் மூடப்பட்டன.

    கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா? கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி நேற்று மாலை கடலூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கோட்ட கலால் அலுவலர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது டாஸ்மாக் கடைகளில் மது விலை குறித்து விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா? அங்கு பணிபுரியும் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்களா? என்பதை அதிரடியாக சோதனை செய்தனர்.

    மேலும் அங்கு திரண்டு இருந்த மது பிரியர்கள் மற்றும் போதையில் இருந்த மது பிரியர்களிடம் அதிகாரிகள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த மதுபிரியர்கள், மது பாட்டில் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இது போன்ற சமயத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள் நாங்கள் மதுபாட்டில் உடனடியாக வாங்கிச் செல்ல வேண்டும். கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதை திருத்த போகிறீர்களா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினர். மீண்டும் அதிகாரிகள் விசாரணை தொடர முயன்றபோது நாங்கள் உடனடியாக மது பாட்டில்கள் வாங்க வேண்டும் எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என தெரிவித்தனர். அப்போது மனக்குமுறலுடன் அவர்கள் நலனுக்காக தானே விசாரணை செய்ய வந்தோம். ஆனால் இங்கு தலைகீழாக அனைத்து செயல்களும் உள்ளன என அதிகாரிகள் கூறிக் கொண்டு சென்றனர்.

    • டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது .
    • பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கடைகள் மூடப்பட்டது. தஞ்சை நகரில் மட்டும் 10 கடைகள் அடைக்கப்பட்டன.

    இந்த பட்டியலில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மாக் இடம் பெறவில்லை. எனவே இந்த டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இயக்கம், அமைப்புகள் சார்பில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இந்த நிலையில் மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி இன்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வசந்தி தலைமையில் மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது மூட வேண்டும்.. மூட வேண்டும்.. மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம், மாட்டு மேஸ்திரி சந்து மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இந்தக் கடையில் மது குடிப்பவர்கள் பலர் அந்த வழியை கடந்து வீட்டுக்கு செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோரும் இன்னலுக்கு ஆளாகினர். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது மூடப்பட்ட பட்டியலிலும் இந்த கடை இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் நிரந்தரமாக இந்த டாஸ்மாக்கை மூடும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தால் டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படவில்லை.

    டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது . பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாட்டு மேஸ்திரி சந்து, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    • தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவித்தபடி 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சேலம்:

    தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவித்தபடி 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வந்தது.சேலம் மாவட்டத்தில்

    17 டாஸ்மாக் கடைகள் மூடி சீல் வைப்பு

    அதன்படி, எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்தும், ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன என்பது பற்றியும் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மொத்தம் 59 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டது.

    சீல் வைப்பு

    சேலம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 17 கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கடைகளுக்கு இன்று காலை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த கடைகளின் இரும்பு ஷட்டர் கதவை பூட்டி சீல் வைத்தனர்.

    மாநகராட்சியில்

    8 கடைகள்

    மாவட்டத்தில் மூடப்பட்ட 17 டாஸ்மாக் கடைகள் விபரம் வருமாறு:-

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரட்ஸ் ரோடு முள்ளுவாடி கேட்-1, குகை அப்சரா இறக்கம்-1, லீ பஜார்-1, செவ்வாய்ப்பேட்டை வெங்கடப்பரோடு-1, நெத்திமேடு-1, திருச்சி மெயின்ரோடு வேலுநகர்-1, கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை மெயின்ரோடு-1, கந்தம்பட்டி-1 ஆகிய 8 கடைகள் மூடப்பட்டன.

    நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சிவதாபுரம் சித்தர் கோவில் மெயின் ரோடு-1, பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மேட்டூர் துருவாகாடு-1, மேச்சேரி டவுன் -2, எம்.காளிப் பட்டி-1, கொளத்தூர்-1, ஊராட்சிக்கு உட்பட்ட தங்காயூர்-1, தீவட்டிப் பட்டி-1, தலைவாசல் டவுன்-1 ஆகிய 9 கடைகள் மூடப்பட்டன.

    நாமக்கல்

    அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் 4 டாஸ்மாக் கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 18 கடைகளும் மூடப்பட்டது.

    • போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
    • கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் முடங்கி உள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போலீசாருக்கு விடுமுறை, சாதாரண காரணத்துக்காக மாற்றப்ப ட்டவர்களுக்கு மீண்டும் பழைய பணியிடம் ஒதுக்கீடு, மனு மற்றும் கோரிக்கைக்காக பார்க்க வருவோரை காக்க வைக்காமல் உடனுக்குடன் பார்ப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் அமலாகி உள்ளது.

    குறிப்பாக பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போக்கு வரத்து நெரிசலை தவிர்த்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப டுகிறது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ரவுடிகள் நடமாட்டம், தேவையற்ற வகையில் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்துதல் போன்ற வற்றுக்காக, தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதனை ஏற்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்களில் மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் நடமாட்டம் இல்லாத தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் போலீசார் ரோந்துப்பணி செல்கின்ற னர். குறிப்பிட்ட போலீசார், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்று குறிப்புகள் அனுப்பி வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில், விரைவாக போக்குவரத்தை சீர்செய்யவும், தேவை யானால் கூடுதல் போலீ சாரை பயன்படுத்த உத்தர விட்டதால் கடந்த ஒரு வாரமாக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    குறித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை கண்காணிக்கின்றனர். இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு ப்பின் தேவையற்ற கடை களை மூடவும், நடமா ட்டங்களை கட்டுப்படுத்த வம், அனுமதியற்ற சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடு வோர் முடங்கி உள்ளனர்.

    • டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
    • சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர் கூறியுள்ளார்.

    சென்னை:

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களுமே அந்த நோட்டை வாங்குவதற்கு மறுத்துவிடுகின்றன.

    அந்த வகையில் டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, 'சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை.

    இருப்பினும் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் யாராவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்தால் அதனை வாங்குவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
    • 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு இடத்தில் மூடினாலும் இன்னொரு இடத்தில் திறந்து விடுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
    • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

    அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    இதன் படி சட்டசபையில் கூட்டம் நடைபெற்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    50 மீட்டர் இடைவெளியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியலில் உள்ளது. அது போன்று குறைந்த இடைவெளியில் உள்ள கடைகளும் மூடப்பட உள்ளன.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கோவில்களின் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.

    இதையடுத்து அது போன்ற கடைகளும் மூடப்படவேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் போரூர் டோல்கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண்.9170), பள்ளிக்கூடம் அருகில் செயல்பட்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதேபோன்று போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையும் (எண்9043) பள்ளி எதிரில் உள்ளது.

    இந்த 2 கடைகளும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ பகுதியில் பெருமாள் கோவில் எதிரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்506), விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியில் பள்ளி எதிரில் உள்ள டாஸ்மாக் கடை (எண்8870) மற்றும் செங்குன்றம், அலமாதி ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவையும் மூடப்பட வேண்டிய கடைகளின் வரிசையில் இருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவுபெற்று பிரச்சினைக் குரிய கடைகள் மூடப்படும் என்று தெரிகிறது.

    • சித்திரை திருவிழாவின் போது டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
    • பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரையின் உலக புகழ்வாய்ந்த சித்திரை திருவிழாவில் மே 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி தலைவி மீனா, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது.
    • சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்தது. தினமும் ரூ.180 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். மதுபார்கள் முழுமையான அளவில் செயல்படாத நிலையிலும் மதுவிற்பனை குறையவில்லை.

    ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் மது விற்பனை குறைந்து உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் மதுவிற்பனை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 3 சதவீதம் மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் மது விற்பனை குறைந்துள்ளதால் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.

    மாவட்ட மேலாளர்கள் கடை பணியாளர்களிடம் விற்பனை குறைவுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் போலி மது விற்பனை நடைபெறுவதால் டாஸ்மாக் விற்பனை சரிவுக்கு காரணம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் மது விற்பனை குறைவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    ×