search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்கள்"

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.
    • பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர்களில சுமார் 900 மதுபான கடைகள் உள்ளன. இதில் 850 மதுபான கடைகளின் உரிமம் 16 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதன் பிறகு பார் நடத்த அனுமதி வழங்கவில்லை.

    ஆனாலும் பல கடைகளில் சட்ட விரோதமாக ரகசியமாக பார்கள் செயல்படத்தான் செய்கின்றன. மிகவும் கெடுபிடியான இடங்களில் குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி ரோட்டோரங்களிலும், தெருக்களிலும் வைத்து குடிக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.

    இதனால் பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது. இதையடுத்து பார் உரிமம் கோருவதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. டெண்டர்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி நாளை ஆணையிடப்படும்.

    அதன் பிறகு உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தப்போகும் கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் ஆவணத்துடன் மதுபான கழகத்தில் அனுமதி பெற்றதும் பார் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

    புறநகர்களிலும் சேர்த்து 1200 மதுபான கடைகள் உள்ளன. எனவே, மீதமுள்ள சுமார் 350 பார்களுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிகிறது. அதன் பிறகு அந்த பார்களுக்கு டெண்டர் விடப்படும்.

    • போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
    • கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் முடங்கி உள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போலீசாருக்கு விடுமுறை, சாதாரண காரணத்துக்காக மாற்றப்ப ட்டவர்களுக்கு மீண்டும் பழைய பணியிடம் ஒதுக்கீடு, மனு மற்றும் கோரிக்கைக்காக பார்க்க வருவோரை காக்க வைக்காமல் உடனுக்குடன் பார்ப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் அமலாகி உள்ளது.

    குறிப்பாக பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போக்கு வரத்து நெரிசலை தவிர்த்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப டுகிறது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ரவுடிகள் நடமாட்டம், தேவையற்ற வகையில் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்துதல் போன்ற வற்றுக்காக, தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதனை ஏற்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்களில் மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் நடமாட்டம் இல்லாத தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் போலீசார் ரோந்துப்பணி செல்கின்ற னர். குறிப்பிட்ட போலீசார், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்று குறிப்புகள் அனுப்பி வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில், விரைவாக போக்குவரத்தை சீர்செய்யவும், தேவை யானால் கூடுதல் போலீ சாரை பயன்படுத்த உத்தர விட்டதால் கடந்த ஒரு வாரமாக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    குறித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை கண்காணிக்கின்றனர். இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு ப்பின் தேவையற்ற கடை களை மூடவும், நடமா ட்டங்களை கட்டுப்படுத்த வம், அனுமதியற்ற சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடு வோர் முடங்கி உள்ளனர்.

    • மாவட்டம் முழுவதும் 115 டாஸ்மாக் கடைகளில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்கியது
    • மது விற்பனை செய்ததாக 25-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    தஞ்சாவூர் மதுபான கடையில் மதுபானம் அருந்திய 2 பேர் பலியா னார்கள். விழுப்புரம் மாவட் டத்தில் விஷ சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்ட வரும் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அனுமதியின்றி மது விற்பனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியின்றி இயங்கும் பார்கள் மீதும் நடவ டிக்கையை மேற்கொள்ளப் பட்டது. குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். கடந்த 2 நாட்களில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 25-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில் களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட வர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி இயங்கும் பார்களை மூடுவதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 115 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்டு அனைத்து பார்களையும் மூட நடவடிக்கை மேற் கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் சுமார் 90 பார்கள் அனுமதி இன்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பார்களை அதிகாரிகள் மூடினார்கள்.

    • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.
    • அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது.

    இதையடுத்து உரிமைத்தொகை செலுத்தாமல், சட்ட விரோதமாக செயல்படும் பார்களை கண்காணித்து மூட, மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சட்ட விரோதமாக செயல்பட்டால், மதுவிலக்கு போலீசாருக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கோவை மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், நாச்சிபாளையம் ரோடு, வைசியாள் வீதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டன.

    இதுகுறித்து தொழிற சங்கத்தினர் கூறும்போது, 2 மாதத்துக்கு மட்டும் உரிமைத்தொகை செலுத்திவிட்டு, பார்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. விதிமுறைக்கு உட்பட்டு பார்களை நடத்த வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.

    ×