search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை"

    • சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன.
    • இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547) சனிக்கிழமை களில் காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணரா ஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங் கண்ணி சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்த டையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலம் தெரிவித்துள்ளது.

    • இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது‌ குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்:

    ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கி உபகரணங்களை ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால் ஏற்பாட்டில் மத்திய மண்டல தலைவர் செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ஆகியோர் முன்னி லையில் ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:- இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பணி மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வாகனம் மற்றும் உபக ரணங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ, பவுண்டேஷன் மற்றும் வங்கிக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். பாலாஜி நாதன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர். வரதராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிராந்திய தலைவர்கள் சீனிவாச யோகானந்த், கிருஷ்ண மூர்த்தி, பிராந்திய மேலா ளர்கள் ராதாகிருஷ்ணன், சிவராமன், கிளை மேலாளர் அரவிந்த், வளர்ச்சி அலுவலர் நவராஜா, ரெட்கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முகமதுரபி, ஜெயக்குமார், முனைவர் பிரகதீஷ், தஞ்சை ராமதாஸ், குருநாதன், அம்மாபேட்டை துணை கிளை சேர்மன் தர்ம புருஷோத்தமன், சுவாமி மலை துணை கிளை சேர்மன் இராகவ நாராயணன், பூதலூர் துணை கிளை சேர்மன் ரவிசங்கர், ஒரத்தநாடு துணை கிளை சேர்மன் நாராயணசாமி, சேதுபாவாசத்திரம் துணை கிளை தலைவர் ஷேக் அப்துல்லா, டாக்டர் சிங்காரவேலு, ஆர்க்கிடெக்ட் அருண் பாலாஜி, முனைவர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

    • பா.ஜ.க. தலைவர் சொந்த செலவில் பொது சேவை செய்தார்.
    • காளிதாசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம், இந்திரா நகர், 100-ம் வார்டில் உள்ள போக்கு வரத்து சாலைகளில், கழிவு நீர் குப்பைகள் கொட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன.

    எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள், இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

    இந்த விஷயம் பா.ஜனதா நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தது. அப்போது பா.ஜ.க. மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், சொந்த செலவில் போக்குவரத்து ரோட்டில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது என்று முடிவு செய்தார்.

    எனவே அங்கு உடனடியாக ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் அவனியாபுரம் சாலையில் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

    மதுரை அவனியாபுரத்தில் சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திரம் வைத்து போக்குவரத்து சாலையை சுத்தம் செய்த பா.ஜ.க. தலைவர் காளிதாசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பெருஞ்சேரி கிராமத்திலேயே ஆஸ்பத்திரி அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.
    • மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி தெற்குத் தெருவை சேர்ந்த சேஷாசலம் என்பவரின் பேரன்கள் கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர்.

    இவர்களில் கண்ணா லண்டனிலும், டாக்டர் ராமகிருஷ்ணன் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது சேவை செய்ய எண்ணிய கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணனுடன் ஆலோசித்து பெருஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் தற்போது, மருத்துவ அவசர தேவைகளுக்கு 7 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மங்கைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்தனர்.

    இதையடுத்து பெருஞ்சேரி கிராமத்திலேயே மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.

    இதற்காக தங்கள் தாத்தா தனசேஷன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்தனர். தாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருப்பதால், இந்தியாவில் வசிக்கும் தனசேஷனின் பேத்தி வனிதா ஜெயராமனை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராகவும், உறவினர்கள் ராஜதிலக், சுரேகா, தீபக் ஆகியோரை நிர்வாகிகளாகவும் நியமித்து, தங்கள் பூர்வீக வீட்டையே மருத்துவமனையாக மாற்றி உருவாக்கியுள்ளனர்.

    இந்த மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து, ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளனர்.

    எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவமனை திறப்பு விழாவில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா கலந்துகொண்டு, கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் வட்டாட்சியர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராமத்தை விட்டுச் சென்று பல வருடங்கள் கடந்த பின்னரும், சொந்த ஊரை மறக்காத கண்ணா, ராமகிருஷ்ணன் குடும்பத்தினரை கிராமமக்கள் மனமார வாழ்த்தினர்.

    • திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.
    • அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரெயில் சேவைகள் வருகிற 29-ந்தேதி இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாக இருந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அகஸ்தியம்பள்ளி.

    இங்கிருந்து அண்டை நாடான இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கடல் பாதை வழியாகும். மேலும் பாக் ஜலச்சந்தி என்று சொல்லக்கூடிய பாக் நீர் இணையும் இடம் இங்கு தான் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அகத்தியன் பள்ளிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 6.45 மணிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கும் திருத்துறைப்பூண்டியில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும்.

    மறுமார்க்கத்தில் அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 7.55 மணிக்கும் மாலை 4.40 மணிக்கும் புறப்படும்.

    வெள்ளிக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கும் மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவைகள் திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவைக்கு திருத்–துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இணைப்பாக அமையும். எனவே பொதுமக்கள் இந்த ரெயில் சேவை–களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னை பாத்திமா கல்லூரியின் உணவக மேலாண்மை மாணவர்கள் கத்தார் நாட்டில் சேவை புரிந்து திரும்பியுள்ளனர்.
    • இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது.

    மதுரை

    கத்தார் நாட்டில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் விருந்தோம்பல் துறை மாணவர்கள் சென்றனர்.

    அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் கத்தாரில் தங்கி சேவை புரிந்து திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது. இதில் 80 மாணவர்களுடன் துறைத் தலைவர் பால்ராஜ், உதவிப்பேராசிரியர்கள் கங்காதரன், ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர்.

    பயிற்சியில் பங்கேற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 கல்லூரிகளுள் அன்னை பாத்திமா கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு பாராட்டிற்குரியதாக இருந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்றனர் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • முகாமில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
    • மருத்துவ சேவைகளை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கத்தார் ஜமாத் அமைப்பு சார்பாக நாகையில் இலவசசிறப்பு மருத்துவ முகாம் நடை–பெற்றது.முகாமை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    குறிப்பாக பேச்சுதிறன் குறைபாடு, பாத நரம்பியல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவையை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை தந்து இருந்தனர்.

    மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.

    மருத்துவ முகாமிற்கு கத்தார் ஜமாத் நாகை மாவட்ட தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட துணைச் செயலாளருமான நாகை சாதிக் தலைமை வகித்தார்.

    இதில் பொருளாளர் அப்துல் ரகுமான், செயலாளர் சையது யூசுப், துணைச் செயலாளர் கரீம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
    • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    தமிழக அரசின் அவ்வையார் விருது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற டிச 10க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உலக மகளிர் தின விழா 8.3.2023-ம் அன்று நடைபெறவுள்ளது.

    இவ்விழாவின் போது பெண்களின் முன்னே ற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் தொடர்பான இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்விருதுகள் தொடர்பான கூடுதல் விபரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்ப படிவங்கள் ஆகியவை திருவாரூர் மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் இணையதளம் வாயிலாக 10.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டு க்கொண்டுள்ளார்.

    • குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனு
    • 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்;

    திருப்பூர்

    தபால்நிலையங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள், அனைத்து வகையான பரிவர்த்தனையையும், வரிசையில் நிற்காமல் பெறலாம். இதற்கு தங்கள் வயது சான்றிதழை சமர்ப்பித்தால் போதும் என தபால்துறை தெரிவித்திருந்தது.

    ஆனால் பெரும்பாலான தபால்நிலையங்கள், இந்த நடைமுறையை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால் முதியவர்களுக்கு இப்படி ஒருநடைமுறை இருப்பதேதெரியவில்லை. இந்நிலையில் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனுக்கள்தபால்துறைக்கு அதிகம் வருகின்றன.

    இதைத்தொடர்ந்து 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்; இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வகையில், அனைத்து தபால்நிலையங்களிலும் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்று தமிழக தபால் வட்டம் அறிவுறுத்தியுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசிய தாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றலாத்தலங்களை மேம்படுத்துவது, இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில் களையும் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளை தமிழக அரசு சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள், அருவிகள், மற்றும் பூங்காக்கள்,இயற்கை சூழல் நிறைந்த பகுதிகள், அரிய வகை மூலிகைகள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்ட த்திற்குட்பட்ட சுற்றுலா தலங்கள் , கோவில்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் , பத்மநாப புரம் உதவி கலெக்டர் கவுசிக், பயிற்சி உதவி கலெக்டர் குணால் யாதவ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் பாண்டியராஜன், இணைய தளத்தினை உரு வாக்கிய கேப்காம் சொலியூ சன்ஸ் நிறுவனர்அன்பு ராஜா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    • குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. எனவே வேறு ஒரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதி யில் திருமண மண்டபம் காலியாக இல்லை.
    • எனவே முன்பணத் தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் அய்யப்பன் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.

    நாகர்கோவில்,

    குமரி மாவட்டம் கோட்டாரைச் சேர்ந்த அய்யப்பன், கோட்டாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரூ. 19 ஆயிரம் முன்பணம்செலுத்தி திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.

    ஆனால் சில காரணங்க ளால் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. எனவே வேறு ஒரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதி யில் திருமண மண்டபம் காலியாக இல்லை.

    எனவே முன்பணத் தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் அய்யப்பன் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.

    எனவே மன உளைச்சலுக்கு ஆளான அய்யப்பன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலை வர் சுரேஷ், உறுப்பினர் ஆ. சங்கர் ஆகியோர் விசாரித்த னர்.

    தொடர்ந்து திருமண மண்டபத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட அய்யப்ப னுக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 ஆயிரம், முன்பணத் தொகை ரூ. 19 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 2 ஆயிரத்து 500 ஆக மொத்தம் ரூ. 26 ஆயிரத்து 500-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.

    • பிரகாஷ் என்ற மாணவன் நன்னிலம் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பித்திருந்தார்.
    • கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மாணவன் ஒருவன் தவித்துக்கொண்டிருந்தான்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள திருக்கண்ணமங்கையை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவன் பிளஸ் 2 முடிந்த நிலையில், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு, விண்ணப்பித்திருந்தார்.

    கல்லூரியில் சேர்வதற்கான அழைப்பானை வந்த நிலையில், கல்லூரி கட்டணம் செலுத்தாமல் தவித்திருந்த மாணவனுக்கு, நன்னிலம் ரோட்டரி சங்கம் சார்பில், கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத் தொகை செலுத்தப்பட்டது.

    மேலும் அம்மாணவனின் கல்லூரி படிப்புக்கான முழு செலவையும் நன்னிலம் ரோட்டரி சங்கம் ஏற்றுக்கொள்வதாக மாணவனின் பெற்றோரிடம், தெரிவிக்கப்பட்டது மாணவனுக்கான கல்லூரி செலவினை ரோட்டரி சங்க தலைவர் பாரி, முன்னாள் தலைவர் உத்தமன், ரோட்டரி சங்க உறுப்பினர் பரிமளா காந்தி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

    ×