search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
    X

    மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியபோது எடுத்தபடம்.

    மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

    • பிரகாஷ் என்ற மாணவன் நன்னிலம் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பித்திருந்தார்.
    • கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மாணவன் ஒருவன் தவித்துக்கொண்டிருந்தான்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள திருக்கண்ணமங்கையை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவன் பிளஸ் 2 முடிந்த நிலையில், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு, விண்ணப்பித்திருந்தார்.

    கல்லூரியில் சேர்வதற்கான அழைப்பானை வந்த நிலையில், கல்லூரி கட்டணம் செலுத்தாமல் தவித்திருந்த மாணவனுக்கு, நன்னிலம் ரோட்டரி சங்கம் சார்பில், கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத் தொகை செலுத்தப்பட்டது.

    மேலும் அம்மாணவனின் கல்லூரி படிப்புக்கான முழு செலவையும் நன்னிலம் ரோட்டரி சங்கம் ஏற்றுக்கொள்வதாக மாணவனின் பெற்றோரிடம், தெரிவிக்கப்பட்டது மாணவனுக்கான கல்லூரி செலவினை ரோட்டரி சங்க தலைவர் பாரி, முன்னாள் தலைவர் உத்தமன், ரோட்டரி சங்க உறுப்பினர் பரிமளா காந்தி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×