search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையால் பொதுமக்கள் பயனடைவர்
    X

    திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையால் பொதுமக்கள் பயனடைவர்

    • திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.
    • அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரெயில் சேவைகள் வருகிற 29-ந்தேதி இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாக இருந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அகஸ்தியம்பள்ளி.

    இங்கிருந்து அண்டை நாடான இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கடல் பாதை வழியாகும். மேலும் பாக் ஜலச்சந்தி என்று சொல்லக்கூடிய பாக் நீர் இணையும் இடம் இங்கு தான் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அகத்தியன் பள்ளிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 6.45 மணிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கும் திருத்துறைப்பூண்டியில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும்.

    மறுமார்க்கத்தில் அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 7.55 மணிக்கும் மாலை 4.40 மணிக்கும் புறப்படும்.

    வெள்ளிக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கும் மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவைகள் திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவைக்கு திருத்–துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இணைப்பாக அமையும். எனவே பொதுமக்கள் இந்த ரெயில் சேவை–களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×