என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்பி"
- சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
- விதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை அபராதம் விதிக்க வேண்டும்.
ஊட்டி
ஊட்டி கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் மரக் காடு, பலநூறு ஆண்டுகள் பழமையான பைன் மரங்களின் தோப்பாகும்
இந்த இடம் திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
மேலும் காமராஜர் அணை உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் விதியை மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர் ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுப்பது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பாறையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க வனதுறை தடை விதிக்கும் அறிவிப்பு பலகைகளை வைப்பதோடு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
- ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார்.
- விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் காங்கேயத்தான் (வயது 22). பொறியியல் படித்துள்ளார். இவர் நேற்று பகல், தனது நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகியோருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சேலம்-விருத்தாசலம் ரெயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் ரெயில் வந்தது. இதைப்பார்த்த காங்கேயத்தான் ஓடும் ரெயில் முன்பாக சென்று செல்பி எடுக்க முயன்றார்.
இதனிடையே வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காங்கேயத்தான் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரெயில் அருகே சென்று செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த வழக்கம் விபரீதித்தில் முடிந்துள்ளதாக அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவித்தனர்.
- இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘செல்பி’.
- இப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகி வெளியான திரைப்படம் 'செல்பி'.
செல்பி
மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவான இப்படத்தை ராஜ் மேத்தா இயக்கினார். மேலும், இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
செல்பி
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'செல்பி' திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் கடந்ததையடுத்து தற்போது வரை உலக அளவில் ரூ.21.85 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ.16 கோடியை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்ஷய் குமார் படங்களில் முதல் நாள் வசூலில் மிக குறைந்த வசூலை பெற்ற திரைப்படமாக 'செல்பி' உள்ளது.
- உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் காந்தி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான வான்ஷ் சர்மா மற்றும் 20 வயதான மோனு ஆவர்.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் இருவரின் சடலங்கள் கிடப்பதாக ஷாஹ்தாரா காவல் நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை மாலை 4.35 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில், இறந்தவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்றும், இருவரும் ரெயில் தண்டவாளத்தில் வீடியோக்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது (ரீல்ஸ்), ரெயில் மோதி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் காந்தி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான வான்ஷ் சர்மா மற்றும் 20 வயதான மோனு ஆகியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில், ஷர்மா பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். விற்பனையாளராக பணிபுரிந்து வந்த மோனு, டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை கல்வியில் பி.ஏ படித்து வந்துள்ளார்.
தண்டவாளத்தில் நின்று மெய்மறந்து ரீல்ஸ் செய்துக் கொண்டிருந்தபோது இளைஞர்கள் மீது ரெயில் மோதி ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அருவியின் மேல் பகுதிக்கு சென்ற சந்தீப், அங்கிருந்தபடி இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தார்.
- அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், சந்தீப்பின் உடல் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது.
திருவனந்தபுரம்:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்தீப் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர்களுடன், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் மூணாறில் சுற்றிப்பார்த்து விட்டு இடுக்கி சென்றனர். அங்குள்ள சுனையம்மக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகை ரசித்தனர்.
பின்னர் அருவியில் குளித்த அவர்கள் அங்கிருந்து அருவியின் மேல் பகுதிக்கு சென்றனர். அருவியின் மேல் பகுதிக்கு சென்ற சந்தீப், அங்கிருந்தபடி இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தார். அருவியின் அருகே சென்று, அங்கிருந்தபடியே செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், சந்தீப்பின் உடல் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது.
இதற்கிடையே அருவியின் மேல்பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு மீட்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சந்தீப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தீப் பிணமாக மீட்கப்பட்டார்.
- போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
- விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 ‘மோஷன் டிடெக்டிங்’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாஷிங்டன் :
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 'மோஷன் டிடெக்டிங்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் விலங்குகள் கடந்து செல்லும் போது புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்களை பதிவு செய்யும். பொதுவாக விலங்குகள் உணவு மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களைத் தேடி செல்லும்போது கேமராக்களில் பதிவாகும்.
ஆனால் அங்குள்ள கரடி ஒன்று ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே கேமராவுக்கு அருகில் வந்து நின்று, மனிதர்கள் செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுப்பதுபோல விதவிதமான போஸ் கொடுத்து வருகிறது. ஒரு கேமராவில் பதிவான 580 படங்களில் கிட்டத்தட்ட 400 படங்கள் அந்த கரடியின் படங்கள் என பூங்கா ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும் கரடியின் 'செல்பி' படங்கள் சிலவற்றையும் டுவிட்டரில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அவை தற்போது வைரலாக பரவி வருகின்றன.
- கடந்த 5-ந்தேதி கேரளாவைச் சேர்ந்த ஜெய்சங்கர்-கிரீஷ்மா தம்பதியர், ஒரு கோவிலுக்குச் சென்ற போது அங்கு பல இடங்களிலும் செல்பி எடுத்துள்ளனர்.
- கோவிலில் உள்ள சரவணன் என்ற பெயர் கொண்ட யானை முன்பு நின்று அவர்கள் செல்பி எடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
திருமண விழாக்களில் போட்டோ எடுத்து மகிழ்வது சிறப்பான ஒரு நிகழ்வாக உள்ளது. நாம் காலத்திற்கும் அந்தப் போட்டோக்களை பார்த்து வருவதும் உறவினர்களுக்கு காட்டி மகிழ்வதும் வாடிக்கை.
ஆனால் இன்றோ 'போட்டோ ஷுட்' என்பது விபரீத விளையாட்டாகி விட்டது. ஆம், இயற்கையை ரசிக்கிறோம் என பல இடங்களுக்கும் சென்று 'செல்பி' எடுப்பது, 'போட்டோ ஷுட்' நடத்துவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இது சில நேரங்களில் ஆபத்தில் மட்டுமல்ல... உயிருக்கு உலை வைக்கும் விதத்திலும் அமைந்து விடுகிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தம்பதியர் மீது தென்னை மட்டையை யானை வீசுவது போன்ற வீடியோ வைரலானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி விசாரித்த போது தான் கேரளாவில் உள்ள கோவிலில் யானை முன்பு போட்டோ ஷுட் நடத்திய தம்பதியர் மீது மட்டை வீசப்பட்ட சம்பவம் தான் இது என தெரியவந்தது.
கடந்த 5-ந்தேதி கேரளாவைச் சேர்ந்த ஜெய்சங்கர்-கிரீஷ்மா தம்பதியர், ஒரு கோவிலுக்குச் சென்ற போது அங்கு பல இடங்களிலும் செல்பி எடுத்துள்ளனர். அதன் பிறகு கோவிலில் உள்ள சரவணன் என்ற பெயர் கொண்ட யானை முன்பு நின்று அவர்கள் செல்பி எடுத்துள்ளனர்.
அதனை முடித்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்த போது, திடீரென யானைக்கு கோபம் வந்தது.
அதே வேகத்தில் தனது முன்புள்ள தென்னை மட்டையை தூக்கி தம்பதி மீது வீசியுள்ளது. அதிர்ஷ்டவசமாக தென்னை மட்டை, ஜெய்சங்கர் மீது விழாமல் அவரை கடந்து சென்று விழுந்துள்ளது. இதனை வீடியோ எடுத்த யாரோ சமூகவலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். இதற்கிடையில் சரவணன் யானைக்கு கிரீஷ்மா சிறு வயதில் இருந்தே பழக்கம் என்றும், எப்போதும் யானைக்கு உணவு கொடுக்கும் கிரீஷ்மா, சம்பவத்தன்று தராமல் சென்றதால் ஆத்திரமடைந்த யானை, தென்னை மட்டையை வீசியதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ செல்பி மோகத்தில் பலரும் ஆபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லம் சாத்தனூரில் சாண்ட்ரா என்ற பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் வினுவுடன் உயரமான பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தபோது, தவறி கல் குவாரி குட்டையில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவரை வினு காப்பாற்றினார்.
இதேபோல் கடந்த மாதம் 10-ந்தேதி குருவாயூரில் போட்டோ ஷுட் நடத்திய தம்பதியரை யானை தாக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது.
- உயிரை துச்சமென நினைத்து குட்டைக்குள் குதித்து அவரை மணமகன் காப்பாற்றினார்.
- இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
திருவனந்தபுரம் :
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இந்தநிலையில், திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் காலையில் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பகல் 11 மணியளவில் பாரிப் பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அந்த குவாரியில் 150 அடி உயரத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளித்தது.
அந்த இடத்தை பார்த்ததும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். இருவரும் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர். அப்போது திடீரென்று சாந்தி்ரா கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கிநின்ற தண்ணீருக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தார்.
இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட வினு கிருஷ்ணன் உடனடியாக குவாரியில் இருந்த தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த தனது வருங்கால மனைவி சாந்திராவை காப்பாற்றினார். சாந்திராவின் உடையை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு வினு கிருஷ்ணா கொண்டு வந்தார்.
அதனைத்தொடர்ந்து இருவரும் குவாரி பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணி செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கயிற்றை இறக்கி பாதுகாப்பாக பிடித்து கொள்ளுமாறு கூறினர்.
பின்னர் குழாய் மூலம் கட்டப்பட்ட சிறு தோணியில் தொழிலாளர்கள் இறங்கி இருவரின் அருகே சென்று முதலுதவி செய்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
லேசான காயங்களுடன் இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
துபாயில் பணி செய்துவரும் வினு கிருஷ்ணன் திருமணத்திற்காக 2 வாரங்களுக்கு முன்னர் தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான்.
- கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை :
விரல் நுனியில் உலகம்... இதுதான் இப்போதைய இளைஞர்களின் நிலை. நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்து பரிமாற்றம் உள்பட அனைத்துக்கும் அவர்களுக்கு உதவும் முக்கிய பொருளாக செல்போன் ஆகிவிட்டது. அந்த செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான். ஆனால் அவர்களுக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விபரீத விளைவுகளுக்கும் திடீரென ஆளாகிவிடுகின்றனர்.
குறிப்பாக ஓடும் ரெயில் அருகே, ஓடும் பஸ்சின் படிக்கட்டில், வெள்ளம் ஓடும் நீர்நிலைகளின் அருகில், வனவிலங்குகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற அபாயகரமான செயலில் ஈடுபடுபவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். இது அவர்களுக்கு சாகசமாக தெரிகிறது. ஆனால் பிரச்சினை ஏற்படும் போதுதான் அவர்களின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.
இளைஞர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இளம்பெண்களும் ஓடும் பஸ், ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம் , காரமடை, மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு அதிகளவில் வந்து செல்கிறார்கள். அதுபோன்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பலரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
நேற்று மதியம் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி ரெயில் சென்றது. அந்த ரெயில் கோவை -அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை தாண்டி சென்றபோது, அந்த ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் அமர்ந்திருந்த 3 கல்லூரி மாணவிகள், திடீரென படிக்கட்டு பகுதிக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் ஒற்றை கையில் அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செல்பி எடுத்தது மட்டுமல்லாமல், ஒரு மாணவி தனது செல்போன் மூலம் மற்ற 2 மாணவிகளை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கோவை -அவினாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் மெதுவாகதான் செல்லும். இருந்தபோதிலும் ஒற்றை கையில் கம்பியை பிடித்துக்கொண்டு செல்பி என்ற பெயரில் சாகசம் செய்யும்போது, கை நழுவினால் என்ன ஆவது?. கரணம் தப்பினால் மரணம் என்பதை இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடுபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய கல்லூரி மாணவிகளே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா?. எனவே அவர்கள் இனியாவது இதை உணர்ந்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
- போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.
ராமேசுவரம் :
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்று வீசும், கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது. பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு சீறி எழுந்து வருகின்றன.
பாதுகாப்பு கருதி துறைமுக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்பு கம்புகளும் வைக்கப்பட்டு உள்ளன.
ஆனால் நேற்று வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு துறைமுக பகுதிக்குள் உள்ளே சென்று கடல் அலை சீறி எழுவதை மிக அருகில் நின்று செல்பி எடுத்தபடி ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்தனர். போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.
- மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை பொதுமக்கள் செல்பி எடுக்கின்றனர்.
பரமத்திவேலூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.
இதனால் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலத்தின் வழியாக இரு கரைகளையும் மூழ்கடித்தப்படி வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்லும் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி குடும்பத்தினருடன் பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்க்கிறார்கள்.
அதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்று பாலத்திற்கு வந்து வெள்ளப்பெருக்கை அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை செல்பி எடுக்கின்றனர்.
இந்நிலையில் பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி கலையரசன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காவிரி ஆற்று பாலத்தில் நெடுகிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு அதிக நேரம் வாகன ஓட்டிகள் பார்வையிட கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று நீண்ட நேரம் பார்வையிடவும் அனுமதிக்கவில்லை.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் சோதனை சாவடி அருகே ஆங்காங்கே புதிய கடைகள் முளைத்துள்ளது. வியாபாரம் களை கட்டுகிறது.
கோவா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா நேற்று முன் தினம் மாலை பனாஜி கடற்கரைக்கு சென்றார். கடலை பின்னணியாக கொண்டு அவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடினர். சற்று நேரத்தில் ரம்யா கிருஷ்ணா கடலுக்குள் மூழ்கினார். அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்