search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை விமான நிலையம்"

    • சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை.

    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னை வாலிபர் ஒருவர் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அந்த கூடையில் சோதனை செய்தபோது, அரிய வகை பைத்தான் எனப்படும் 15 மலைப்பாம்பு பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்கா அணில் ஆகியவை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வகை பாம்புகள் விஷமற்றவை ஆனால் ஆபத்தானவை. வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர்பிரதேசங்களில் இருக்கக்கூடியவை ஆகும். அணில் குட்டி ஆப்பிரிக்க கண்டத்தில் அடர்ந்த காடுகளில் வசிக்கக்கூடியது. சுமார் ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடியது.

    பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மலைப்பாம்பு குட்டி, அணில் ஆகியவை எந்த நாட்டில் இருந்து வந்ததோ? அதே நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளனர். அவை நாளை அதிகாலை, சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் அதனை கடத்தி வந்த வாலிபரிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த வெளிநாட்டு முனையம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து முழு அளவில் விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதையடுத்து விமான நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்ட பழைய சர்வதேச விமான முனையம் மூடப்பட்டது.

    விமான நிலையத்தில் தற்போது உள்நாட்டு முனையத்தில் 2-வது தளத்தில் புறப்பாடு பகுதியும் கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பழைய சர்வதேச வெளிநாட்டு முனையத்தை, 2-வது உள்நாட்டு முனையமாக மாற்ற விமான நிலைய இயக்குனரகம் முடிவு செய்தது.

    அதன்படி பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இருந்த குடியுரிமை பரிசோதனை கவுண்டர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதேபோல் கன்வேயர் பெல்ட் அங்கு மாற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி முனையத்தை சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த 2-வது உள்நாட்டு முனையத்தின் பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்தில் (அக்டோபர்) திறக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். மேலும் பயணிகளும் வெகுநேரம் காத்திருக்காமல் எந்த முனையத்தில் எந்த விமானம் இயக்கப்படுகிறது என்று எளிதாக கண்டு பிடித்து செல்லலாம்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, சென்னை விமான நிலையத்தில் 2 உள்நாட்டு முனையம் செயல்பாட்டில் இருக்கும்போது உள்நாட்டு பயணிகளின் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கு எளிதில் செல்லலாம். தற்பொழுது டி-1 முனையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அடாஸ்கா போன்ற விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும். டி-4 முனையத்தில் இருந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும் என்றனர்.

    • பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த வெளிநாட்டு முனையம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து முழு அளவில் விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதையடுத்து விமான நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்ட பழைய சர்வதேச விமான முனையம் மூடப்பட்டது.

    விமானநிலையத்தில் தற்போது உள்நாட்டு முனையத்தில் 2-வது தளத்தில் புறப்பாடு பகுதியும் கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பழைய சர்வதேச வெளிநாட்டு முனையத்தை, 2-வது உள்நாட்டு முனையமாக மாற்ற விமான நிலைய இயக்குனரகம் முடிவு செய்தது.

    அதன்படி பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இருந்த குடியுரிமை பரிசோதனை கவுண்டர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதேபோல் கன்வேயர் பெல்ட் அங்கு மாற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி முனையத்தை சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த 2-வது உள்நாட்டு முனையத்தின் பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்தில் (அக்டோபர்) திறக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். மேலும் பயணிகளும் வெகு நேரம் காத்திருக்காமல் எந்த முனையத்தில் எந்த விமானம் இயக்கப்படுகிறது என்று எளிதாக கண்டு பிடித்து செல்லலாம்

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் 2 உள்நாட்டு முனையம் செயல்பாட்டில் இருக்கும்போது உள்நாட்டு பயணிகளின் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கு எளிதில் செல்லலாம். தற்பொழுது டி-1 முனையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அடாஸ்கா போன்ற விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும். டி-4 முனையத்தில் இருந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும் என்றனர்.

    • தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.
    • விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணி மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கம் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் ஸ்க்ரூ, கம்பி, பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இது போன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலைமுடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 264 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரமாகும்.

    கடந்த 2020 முதல் 2023 பிப்ரவரி வரையிலான மூன்றாண்டு காலத்தில் மட்டும் நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 8, 956.49 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப்படுவதில் கேரளம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.

    3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இவை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி வழங்கிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள். நமது பாரத தேசத்தின் தங்க தேவை ஆண்டொன்றுக்கு 800 டன் என்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் விமானம் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருவதாக கவலையுடன் குறிப்பிடுகிறது உலக தங்க கவுன்சில்.

    தங்கம் இறக்குமதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள், விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தற்போது இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. என 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.

    கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் தங்க கடத்தலின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.5% லிருந்து 7.5% ஆக குறைக்க மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    திருச்சி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அதிகம் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட நாடுகளில் தங்கத்தின் மச்சம் (தரம்) சரியாக இருக்கும் என்பதாலேயே அதிகளவில் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகிறது.

    முழுக்க முழுக்க இத்தகைய தங்கக்கடத்தல் என்பது உள்ளூர் மார்க்கெட்டை சார்ந்து தான் நடைபெறுகிறது.

    இதற்கென்று பாரம்பரியமான வலை பின்னலை மிகக்கச்சிதமாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

    ஒரு முறை தங்கக்கடத்தலுக்காக பயணிக்க குருவி (கடத்தல்காரர்) ஒருவருக்கு மிகக்குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.

    தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.

    இதில் தினமும் சிக்குவது சிறிய வியாபாரிகள். பெரிய திமிங்கலங்கள் சத்தம் இல்லாமல் தப்பி சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுவாக இருக்கிறது.

    கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக குருவிகளாக மாறி கடத்தலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்கள் கடத்தல் தங்கத்திற்கான முழு வரியையும் செலுத்தி தங்கத்தையும் மாணவனையும் மீட்டு விடுகிறார்கள்.

    இதனை சாதாரணமாக சில மாணவர்கள் பகுதி நேர வேலையாக தொடர்ச்சியாக பார்த்து வருகிறார்கள்.

    விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. விமான நிலையங்களில் பிடிபடும் தங்கத்தை விட கடத்தப்படும் தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகம் என சொல்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு சப்தமில்லாமல் நடக்கிறது. அதிகாரிகள் நேர்மையாக இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
    • 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

    தாம்பரம்:

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று ராமேசுவரம் செல்வதற்காக 63 பயணிகள் ரெயிலில் வந்தனர்.

    இந்த ரெயில் பெட்டியில் நேற்று அதிகாலை டீ தயாரிப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் உடல் கருகி பலியானார்கள். ஒரு சிலர் தாங்கள் படுத்திருந்த பெர்த் படுக்கையிலேயே பிணமாக கரிக்கட்டையாக கிடந்தனர்.

    அவர்கள் பெயர் ஹரிஷ்குமார் யாசின் (வயது 62), தீபக் கஸ்யாப் (21), அன்குல் (36), சத்ரு தமன் சிங் (65), பரமேஸ்வர் தயாள் சர்மா (57), மித்திலேஸ் (62), சாந்திதேவி வர்மா (70), குமார் ஹிமானி பன் சால் (27), மனோரமா அகல்வால் (81), இவர்கள் 9 பேரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களது உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு 9 பேரின் உடல்களும் ஆம்புலன்சில் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து உடல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று மதியம் 12 மணிக்கு சென்னை - லக்னோ விமானத்தில் 5 உடல்களும், மதியம் 2 மணிக்கு 4 உடல்கள் பெங்களூர் வழியாக செல்லும் மற்றொரு விமானத்தில் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.

    • லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.
    • இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதை போல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.

    அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின.

    அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.

    சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு 8 விமானங்கள், தாமதம் ஆகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    • விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 10.05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 147 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்தப் பயணிகள் அனைவரும் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.

    டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு வழக்கமாக வரும் ஏர் இந்தியா விமானம் மீண்டும் காலை 10:05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். அந்த விமானம் டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்பு, மீண்டும் விமானத்தை இயக்கும்படியும் குறிப்பு எழுது வைத்து விட்டார்.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகளையும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த விமானத்தில் எந்திர கோளாறு 12 மணி வரை சரி செய்யப்படவில்லை.

    147 பயணிகளையும் மாற்று விமானங்கள் மூலம், டெல்லிக்கு அனுப்பி வைக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர்.

    சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட எந்திரக் கோளாறு காரணமாக 147 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன.
    • சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

    ஆலந்தூர்:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாளை (15-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்தில் இந்த மாதல் முதலே பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு நடைமுறை 16-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன.

    சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்துவந்து கண்காணிக்கின்றனா். அதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய்களுடன் சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அதைப்போல் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாஸ்களிலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. அதைப்போல் விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

    • சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.
    • தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இடி மின்னலுடன் ஒரு சில பகுதிகளில் மழை கொட்டியது.

    நள்ளிரவு அதிகரித்த மழை அதிகாலை வரை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. அரபு நாடுகளில் இருந்து அதிகாலையில் தான் சென்னைக்கு விமானங்கள் வருவது வழக்கம்.

    அதுபோல இன்று அதிகாலை வந்த விமானங்கள் பலத்த மழை காரணமாக தரை இறங்க முடியவில்லை. ஜார்ஜாவில் இருந்து 168 பயணிகளுடன் சென்னைக்கு அதிகாலை 3.40 மணிக்கு வந்த விமானத்தை தரை இறக்க முடியவில்லை. துபாயில் இருந்து 238 பயணிகளுடன் 3.50 மணிக்கு வந்த விமானமும் தரை இறக்க முடியாமல் வட்டமிட்டன.

    சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பைலட்டுகளுக்கு இங்கு தரை இறக்க வேண்டாம் பெங்களூருக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 2 விமானங்கள் பெங்களூருக்கு சென்றன.

    இதே போல இரவு 11.45 மணிக்கு துருக்கியில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.

    தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்களை இயக்கக் கூடிய அளவுக்கு இயல்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

    • விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
    • சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம்:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர்.

    வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் உள்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் மேலும் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் பாஸ்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.

    விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் எடுத்து வரும் கைப்பைகளை 'ஸ்கேனிங்' மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பல கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றன.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் 3½ மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

    சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வரும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் இரவு 7:45 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டு செல்லும்.

    நேற்று அந்த விமானத்தில் சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்வதற்கு 182 பயணிகள் செல்ல இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 4:30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து பயணம் செய்ய தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தபோது சென்னை விமான நிலையப் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது பற்றி சென்னையில் உள்ள பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அது பற்றிய அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விமானத்தில் அபுதாபிக்கு வேலைக்காக செல்லும் 5 பெண்கள் உட்பட,35 பேர் ஒரு குழுவாக இருந்தனர். மற்ற பயணிகள் தனியாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நள்ளிரவு 12 மணி வரையும் அபுதாபி விமானம் பற்றி எதுவும் அறிவிக்காததால் தனியாக இருந்த பெண்கள் உள்பட 35 பயணிகளும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் கவுண்டரில் விபரம் கேட்டனர். அப்போது அவர்கள் செல்லக்கூடிய விமானம் மற்ற பயணிகளுடன் நள்ளிரவு 12:18 மணிக்கு சென்னையில் இருந்து, அபுதாபிக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். மேலும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் போர்டிங் கேன்சல் ஆகிவிட்டது. நீங்கள் முறைப்படி பணத்தை திரும்ப பெற்று புதிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வேறு விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று விமான நிறுவன ஊழியர்கள் கூறினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் இருந்து அபுதாபிக்கு இரவு 7:45-க்கு செல்ல வேண்டிய இந்த விமானம், நள்ளிரவு 12:18 மணிக்கு, 4½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் இந்த தாமதம் பற்றி பயணிகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. மேலும் போர்டிங் பாஸ் வாங்கிய 35 பயணிகள் விமானத்தில் ஏறாதது ஏன்? என்று, விமான ஊழியர்கள் முறையாக விசாரிக்காமல் இருந்து உள்ளனர். இதுபற்றி 35 பயணிகளும் விமான நிறுவன உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய அதிகாரிகள், மற்றும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்து உள்ளனர்.

    • ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது
    • சென்னையில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

    சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் செனனை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 8 விமானங்கள் வானத்தில் வட்டமடித்தன. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.

    ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், பெங்களூருவில் இருந்து சென்னை வந்தது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமானங்கள் சுமார் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டன. தற்போது விமான சேவை சீராகியுள்ளது.

    ×