என் மலர்
நீங்கள் தேடியது "flight service affected"
- டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்களின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
- டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காலநிலையில் தொடர்ந்து மாறுபாடுகள் காணப்படுகின்றன. கடும் பனி காரணமாக சாலைகள், கட்டிடங்கள் தெரியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் இன்றும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 7.6 ஆகவும் பதிவாகி இருக்கிறது.
டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் காலை 8 மணியளவில் 0 மீ தெரிவுநிலையையும், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையம் 50 மீட்டர் தெரிவுநிலையையும் தெரிவித்தது. இரண்டு விமான நிலையங்களும் வணிக விமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை.

லோதி சாலை நிலையத்தில் காற்றின் தரக்குறியீடு 309 ஆக உள்ளது, இது மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது
டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்களின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக அமிர்தசரஸ் மற்றும் கவுகாத்திக்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ள நிலையில், இண்டிகோ டெல்லி, அமிர்தசரஸ், லக்னோ, பெங்களூரு மற்றும் கவுகாத்தி வழித்தடங்களில் பயன்படுத்த ஆலோசனையை வழங்கி உள்ளது.
பயணிகளை தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது விமான அட்டவணையைச் சரிபார்க்குமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. அதே நேரத்தில் மோசமாக வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. சில வழித்தடங்களில் மாற்றப்பட்ட நேரத்துடன் இயக்கப்படுகிறது.
வானிலை காரணங்களால் டெல்லியில் இருந்து புறப்படும் குறைந்தது 24 ரெயில்கள் தாமதமாக வந்தன. பாதிக்கப்பட்ட ரெயில்களில், அயோத்தி எக்ஸ்பிரஸ் நான்கு மணி நேரம் தாமதமானது, கோரக்தாம் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டது, பீகார் கிராந்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தன.
டெல்லியில் ஜனவரி 8-ந்தேதி வரை பனிமூட்டம் காணப்படும் என்றும், ஜனவரி 6-ந்தேதி லேசான மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் குளிரால் தவிக்கும் மக்கள், ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து பனியின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றனர்.
#WATCH | Visibility affected as a thick blanket of fog descended over Delhi. Visuals from AIIMS and Safdarjung. pic.twitter.com/e9cSEHxiAw
— ANI (@ANI) January 3, 2025
- டெல்லி-சென்னை விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
- 7 விமானங்கள் நீண்டநேரம் வானில் வட்டமடித்தபடி பறந்தன.
ஆலந்தூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையடுத்து இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் நீண்டநேரம் வானில் வட்டமடித்தபடி பறந்தன. பின்னர் வானிலை ஓரளவு சீரானதும் பத்திரமாக தரையிறங்கியது.
இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு 152 பயணிகளுடன் விமானம் வந்த போது பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் வானிலை சீரடைந்த பின்னர்விமானம் திரும்பி வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் காலை 10:45 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப் பட்டு செல்லும் மற்றொரு விமானமும் மோசமான வானிலை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து டெல்லிக்கு 10.45 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய அந்த விமானம், இன்று பகல் ஒரு மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் டெல்லிக்கு செல்ல இருந்த 148 பயணி கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.
இதைப்போல் மங்களூ ரில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக, இன்று காலை 11:40 மணிக்கு சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
- நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
டெல்லி:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
- டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது.
- ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது. இது நேற்றிரவு 11 மணிக்கு பதிவான 452-வை விட குறைவு தான் என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக 283 விமானங்கள் தாமதமாகி இருக்கின்றன. மேலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமானம் மற்றும் ரெயில் சேவை பாதிப்பு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
- பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் திடீரென இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையங்களில் Check-in செய்ய தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்தால், பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயக்கு நிலைக்கு திரும்பும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.
- இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.
ஆலந்தூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதை போல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.
அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.
மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின.
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு 8 விமானங்கள், தாமதம் ஆகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.