காற்றுமாசு கலந்த பனிமூட்டம்: டெல்லியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது. ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
காற்றுமாசு கலந்த பனிமூட்டம்: டெல்லியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது. இது நேற்றிரவு 11 மணிக்கு பதிவான 452-வை விட குறைவு தான் என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக 283 விமானங்கள் தாமதமாகி இருக்கின்றன. மேலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமானம் மற்றும் ரெயில் சேவை பாதிப்பு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com