search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் போராட்டம்"

    • மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    • காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணிகள் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்காணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ரெயில் பெரிதும் பயன்உள்ளதாக உள்ளது. காலை நேரத்தில் குறித்த நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குசெல்ல ஏராளமான பயணிகள் திருமால்பூர் - சென்னை கடற்கரை ரெயிலில் பயணம் செய்வதால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    மேலும் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரெயில் நிலையங்களில் சரக்குகளை கையாள முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தென்னக ரெயில்வேக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இதனால் சரக்கு ரெயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பயணிகள் மின்சார ரெயில்களை நிறுத்தி தாமதமாக இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு காஞ்சிபுரம் ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தாமதமாக 6.45 மணிக்கு வந்தது. இதனால் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென அவர்கள் மின்சார ரெயில் முன்பு நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தினமும் தாமதமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார ரெயிலை குறித்த நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மின்சார ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தினமும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதனை தவிர்க்க காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

    • பயணிகள் ரெயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலர்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர்.
    • சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் அதிக அளவில் நிற்பதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

    செங்கல்பட்டு:

    விழுப்புரத்தில் இருந்து மதுராந்தகத்திற்கு இன்று காலை 6.40-க்கு வர வேண்டிய பயணிகள் ரெயில் 15 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், பயணிகள் ரெயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர். சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் அதிக அளவில் நிற்பதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினார்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெங்களூரில் இருந்து ஏ.சி. இயங்காததால் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.
    • அதிகாரிகள், கோவை போத்தனூர் சென்றதும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கு புறப்பட்டது. பெங்களூரு ரெயில் நிலையத்திற்கு வந்த போது அந்த ரெயிலின் ஏ1 குளிர்சாதன பெட்டியில் ஏ.சி.யில் பழுது ஏற்பட்டது.

    ஏ.சி. சரியாக இயங்காததால் அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் சரி செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் பழுதான ஏ.சி.யை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்தநிலையில் சேலம், ஈரோட்டை கடந்து நேற்றிரவு 11 மணிக்கு ரெயில் திருப்பூர் ரெயில் நிலையம் வந்தது. அங்கேயும் ஏ.சி.யை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏ1 பெட்டியில் பயணித்த பயணிகள் ரெயில் புறப்பட தயாரான போது அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர்.

    இதைப்பார்த்த திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார், குளிர்சாதன பெட்டியில் பயணித்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பயணிகள், நாங்கள் பணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். பெங்களூரில் இருந்து ஏ.சி. இயங்காததால் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. உடனே சரி செய்து தாருங்கள் என்று அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே அதிகாரிகள், கோவை போத்தனூர் சென்றதும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பின்னர் ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது. போத்தனூர் சென்றதும் அங்கு ஏ.சி. பழுதான ஏ1 பெட்டி மாற்றப்பட்டு மாற்றுப்பெட்டி இணைக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகள் நிம்மதியுடன் பயணித்தனர்.

    ஏ.சி.இயங்காததால் பயணிகள் ரெயிலை நிறுத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரை மணிநேரம் தாமதமாக கொச்சுவேலிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் சற்று சிரமம் அடைந்தனர்.

    • ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    மதுராந்தகம்:

    புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு பயணிகள் விரைவு ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வேலை பார்த்து வரும் மதுராந்தகம், செய்யூர், சூனாம் பேடு, பவுஞ்சூர், கூவத்தூர், தச்சூர், பெரும்பாக்கம், எண்டத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தினந்தோறும் பயணம் செய்வது வழக்கம்.

    மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து காலையில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட்டம் அதிகம் இருக்கும்போது பயணிகள் சிலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துவந்தனர்.

    இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 7.20 மணிக்கு வழக்கம்போல் புதுச்சேரி-சென்னை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்ததால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளால் அதில் ஏறமுடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏற முயன்றனர். ஆனால் அதில் ஏற்கனவே இருந்த பயணிகள் ரெயில் பெட்டியின் கதவுகளை மூடி இருந்ததாக தெரிகிறது. இதனால் பயணிகளால் ரெயிலில் ஏறமுடியாத சூழல் ஏற்பட்டது. ரெயிலும் புறப்பட தயாரானது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் மற்றும் சிக்னல் இயக்கும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ரெயில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பின்னால் தென்மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மேல்மருவத்தூர், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் சமாதானம் பேசி அதில் பயணிகளை ஏற அனுமதித்தனர். பயணிகள் அனைவரும் ரெயிலில் ஏறியதும் சுமார் 30 நிமிடம் தாமதமாக சென்னை நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

    பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.
    • பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள்.

    பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலை 7 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள் தவித்தனர். காலை 7.20 மணியளவில் முதல் பஸ் பணிமனையில் இருந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வரும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் இரவு 7:45 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டு செல்லும்.

    நேற்று அந்த விமானத்தில் சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்வதற்கு 182 பயணிகள் செல்ல இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 4:30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து பயணம் செய்ய தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தபோது சென்னை விமான நிலையப் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது பற்றி சென்னையில் உள்ள பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அது பற்றிய அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விமானத்தில் அபுதாபிக்கு வேலைக்காக செல்லும் 5 பெண்கள் உட்பட,35 பேர் ஒரு குழுவாக இருந்தனர். மற்ற பயணிகள் தனியாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நள்ளிரவு 12 மணி வரையும் அபுதாபி விமானம் பற்றி எதுவும் அறிவிக்காததால் தனியாக இருந்த பெண்கள் உள்பட 35 பயணிகளும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் கவுண்டரில் விபரம் கேட்டனர். அப்போது அவர்கள் செல்லக்கூடிய விமானம் மற்ற பயணிகளுடன் நள்ளிரவு 12:18 மணிக்கு சென்னையில் இருந்து, அபுதாபிக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். மேலும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் போர்டிங் கேன்சல் ஆகிவிட்டது. நீங்கள் முறைப்படி பணத்தை திரும்ப பெற்று புதிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வேறு விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று விமான நிறுவன ஊழியர்கள் கூறினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் இருந்து அபுதாபிக்கு இரவு 7:45-க்கு செல்ல வேண்டிய இந்த விமானம், நள்ளிரவு 12:18 மணிக்கு, 4½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் இந்த தாமதம் பற்றி பயணிகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. மேலும் போர்டிங் பாஸ் வாங்கிய 35 பயணிகள் விமானத்தில் ஏறாதது ஏன்? என்று, விமான ஊழியர்கள் முறையாக விசாரிக்காமல் இருந்து உள்ளனர். இதுபற்றி 35 பயணிகளும் விமான நிறுவன உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய அதிகாரிகள், மற்றும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்து உள்ளனர்.

    ×