search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் சூறைக்காற்றுடன் மழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
    X

    சென்னையில் சூறைக்காற்றுடன் மழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்

    • ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது
    • சென்னையில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

    சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் செனனை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 8 விமானங்கள் வானத்தில் வட்டமடித்தன. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.

    ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், பெங்களூருவில் இருந்து சென்னை வந்தது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமானங்கள் சுமார் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டன. தற்போது விமான சேவை சீராகியுள்ளது.

    Next Story
    ×