search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம்"

    • தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.
    • ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர்.

    குமரி மாவட்டம் ஆன்மிக களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சுசீந்திரத்தில் தான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    புராண காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் தவநெறியில் சிறந்து விளங்கிய அத்திரி-அனுசுயா தம்பதிகள் வசித்து வந்தனர். அனுசுயாவின் கற்பை சோதிக்கும் நோக்கில் மும் மூர்த்திகளும் வயோதிகர் வேடத்தில் வந்து யாசகம் கேட்டனர். நிர்வாணமாக உணவு பரிமாறினால்தான் உண்போம் என்றும் நிபந்தனை விதித்தனர். தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.

    பின்னர் ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர். அனுசுயாவின் கற்பின் மகிமையை போற்றிய மூம்மூர்த்திகளும் அத்திரி-அனுசுயா தம்பதியரின் வேண்டுதலை ஏற்று கிருதயுகத்தில் அரசமரமாகவும், திரேதா யுகத்தில் துளசியாகவும், துவாபர யுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் சரக்கொன்றை மரமாகவும் மாறி அருள்பாலித்து வருகின்றனர்.

    அதன்படி ஒன்றின் மேல் ஒன்றாக மும்மூர்த்திகள் சுயம்புலிங்க வடிவில் வீற்றிருப்பதை ஆதி மூலஸ்தானமாகிய கொன்றையடி சன்னதியில் தற்போதும் காணமுடிகிறது. ஆண்டுகள் ஈராயிரம் கடந்த பின்பும் சரக்கொன்றை மரமானது செதில் அரிக்காமல் கறுமை நிறத்தில் காட்சியளிப்பது எங்குமே காணமுடியாத தெய்வீக காட்சியாகும். இது இந்திரன் சாபம் தீர்த்த தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு இன்றளவும் இந்திரன் அர்த்தஜாம பூஜை நடத்தி வருவதாக நம்பப்பட்டு வருகிறது.

    சுசீந்திரம் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை பக்தர்கள் அனைவரும் தொட்டு வணங்கலாம் என்பது சிறப்பம்சம். மேலும், கோவிலில் உள்ள விக்னேஷ்வரி சிலையும் சிற்பியின் சிந்தனை வளத்தை எடுத்துக்கூறிக்கொண்டிருக்கிறது.

    • பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும்.
    • புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.

    புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசுயாவும், பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்த அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும் என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.

    அதிலும் பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடை உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.

    செண்பகராமன் மண்டபத்தில் ராமாயண காட்சிகள்

    இந்தியாவின் இதிகாசங்களில் முக்கியமானது ராமாயணம். ராமா என்றால் ராமன் என்றும் யணம் என்பதற்கு வரலாறு என்றும் பொருள் ஆகும். இன்றும் ராமாயணம் இந்திய மக்களின் வாழ்வில் மிகவும் ஆழமான தாக்கம் செலுத்துகிறது.

    இதனால் பல கோவில்களில் ராமாயணம் ஓவியங்களாக தீட்டப்பட்டு உள்ளது. சுசீந்திரம் கோவில் மண்டபங்களில் செண்பகராமன் மண்டபம் மிகவும் பெரியது. இந்த மண்டப சுவர்களில் ராமாயண காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது.

    • பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.
    • முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.

    குமரி மாவட்டத்திலேயே மிக புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகள் முன்னாலேயே தொடங்குகிறது.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.

    மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், விஜயநகர மன்னர்கள், திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள் பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

    கல்வெட்டுகள்

    கொன்றையடி மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.

    வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவேங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக கல்வெட்டுகள் சாட்சியம் அளிக்கிறது.

    மணிமண்டபம்

    1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும்.

    வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    ராஜகோபுரம்

    1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ்தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார்.

    அதனால் அது "நீலகண்ட விநாயகர்" என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

    பெண் உருவில் விக்னேஸ்வரி விநாயகர்

    கோவிலின் நவக்கிரக மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள நீலகண்ட விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த விநாயகர் மகா கணபதி, முக்குறுணி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சுமார் 6 அடி உயரமுடைய இந்த விநாயகரின் சிலையமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. தெற்குமண்மடம் ஸ்தானிகராக விளங்கிய நீலகண்டரு என்பவர் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்ததால் அவரது பெயராலேயே நீலகண்ட விநாயகர் அழைக்கப்படுகிறார். இதேபோல் செண்பகராமன் மண்டபத்தில் விநாயகர் பெண் உருவில் காட்சி அளிக்கிறார். மண்டப தூணில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண் உருவில் இருப்பதால் இவரை விக்னேஸ்வரி விநாயகர் என அழைக்கிறார்கள். பெண் உருவில் உள்ள விநாயகரை வழிபடுவது நன்மையை கொடுக்கும்.

    • தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.
    • அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவையொட்டி தினமும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் அறம் வளர்த்தநாயகியும் விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.

    பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுவாமி பத்மேந்திரா, இணை ஆணையர் ஞான சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. தேரோட்ட விழாவில் புதுமணத் தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர் சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர் திருவிழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இசை, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாசப்பர்வத வாகன நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வந்த போது பேரம்பலம் திருக்கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.

    மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவரும் நிகழ்ச்சியும், சுவாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகியும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள்.

    அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரதி வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும். அதன் பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வருவார்கள்.

    இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்திஇசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்தநிைலயில், 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுடன் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். பிறகு வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர். அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கினர். இந்த கருட தரிசனம் நிகழ்ச்சியை காண திரண்டிருந்த திரளான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.

    விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது.
    • இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, அலங்கார தீபாராதனை, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் 3-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும், இரவு 11 மணிக்கு சாமி கற்பக விருட்ச வாகனத்தில் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வடக்கு தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை முருகன் ஆகிய மூவரும் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவை காண வருகின்றனர்.

    உமா மகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை விநாயகரும், சுப்ரமணியரும் மூன்று முறை சுற்றி வலம் வந்து ஆசி பெறுவார்கள். பின்னர் இரு புறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். அப்போது தீபாராதனை நடைபெறும். இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது. இந்த தரிசனத்தை "மக்கள் மார் சந்திப்பு" என்றும் "மக்கள் மார் சுற்று" என்றும் கூறுவர்.

    இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர். பின்னர் 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும் தாய் தந்தையரின் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதியுலா வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • திருவிழா ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்தி ருவிழா ஆண்டுதோறும் சிறப் பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திரு விழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கி றது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத் தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சித்திரை சபை மண்டபத் தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபா ராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகை கள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிர சாத், தெற்கு மண்மடம் நித் திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரி யார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம், தாளம், வெடிமுழக்கத்துடன், முத்துக் குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட் டத்திற்கு வரவேற்பு கொடுக் கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    தொடர்ந்து நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதி யின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர்கொடி யேற்றி வைக்கிறார். வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கி றார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவி லில் இருந்து எடுத்துவரப் பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலைய ரங்கத்தில் சமய சொற்பொ ழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல் வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

    விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசு வாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா வும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன.

    தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதி காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • எனது மோட்டார் சைக்கிளை திருடியதால் தீர்த்து கட்டினேன்
    • கைதான வாலிபர் வாக்குமூலம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேச புரம் என்.பி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45), தனியார் நிறுவன காவலாளி.

    இவர் கடந்த17-ந்தேதி சொத்தவிளை கடற்கரையில் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முருகனை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வந்தது. இந்த நிலையில் அவரை கொலை செய்தது பீச் ரோட்டை சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் குமரகுருவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த குமரகுரு தலைமறை வானார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 19-ந் தேதி குமரகுரு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 23-ந்தேதி நாகர்கோவில் ஜெயிலுக்கு குமரகுரு கொண்டு வரப்பட்டார். குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த குமரகுருவிற்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கினார். குமரகுருவை போலீசார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது குமரகுரு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் முருகனும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போனது. அந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டேன். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தன்று காலையில் முருகன் என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது எனது மோட்டார் சைக்கிளை தருவதாக அவர் கூறினார். இதையடுத்து நான் அங்கு சென்றேன்.

    அப்போது முருகன் எனக்கு மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டார்.நான் என்னிடம் பணம் இல்லை. பீச் ரோட்டில் உள்ள வீட்டில் சென்று எடுத்து தருவதாக கூறினேன். உடனே முருகனும் நானும் பீச் ரோட்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்றோம். அங்கு பணத்தை எடுத்து விட்டு கத்தி ஒன்றை எடுத்து வந்தேன்.

    இந்த நிலையில் மது அருந்திய போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருப்பினும் எனது மோட்டார் சைக்கிள் குறித்து கேட்டபோது முருகன் சரியாக பதில் கூற வில்லை. இந்த நிலையில் மாலையில் இருவரும் மது வாங்கிவிட்டு சொத்தவிளை கடற்கரைக்கு சென்றோம்.அங்கு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது மோட்டார் சைக்கிளைப் பற்றி கேட்டதற்கு எனக்கு மோட்டார் சைக்கிளை பற்றி ஒன்றும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக கத்தி யால் குத்தினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட் டேன். இவ்வாறு அவர் கூறி னார்.

    கைது செய்யப்பட்ட குமரகுரு மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்குகளும் ஒரு கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குமரகுருவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள். கொலை நடந்த சொத்தவிளை கடற்கரைக்கு சென்று விசாரணை நடத்த வும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சித்திரை சபை மண்டபத்தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகைகள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிரசாத், தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேளம், தாளம், வெடி முழக்கத்துடன், முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    தொடர்நது நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

    இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளவரான மார்கண்டேயன் மாணவியை அழைத்துக்கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு தலைமறைவானார்.
    • கடந்த 7-ந்தேதி மார்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியை கடத்திச் சென்று இருக்கிறார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டே யன் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தை கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மார்க்கண்டேயனுக்கும் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி

    10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவியை அழைத்துக்கொண்டு மார்கண்டேயன் கடந்த 2021-ம் ஆண்டு தலைமறை வானார்.

    இதுகுறித்து கன்னியா குமரி மகளிர் போலீசார் மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மாணவி யையும் மீட்டனர். இதை யடுத்து மார்க்கண்டே யன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.

    இது தொடர்பான வழக்கு தற்பொழுது கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவி கடந்த 7-ந்தேதி மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது மார்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியை கடத்திச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    செல்போன் டவர் உதவி யுடன் மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. மார்க்கண்டேயன் ஓசூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கன்னியா குமரி மகளிர் போலீசார் ஓசூருக்கு விரைந்து சென்ற னர். அங்கு வாடகை வீட்டில் குடும்பம் நடத்திய மார்க்கண்டேயனையும் மாணவியையும் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட இருவ ரையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மீட்கப் பட்ட மாணவியிடம் விசா ரணை நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். பிடிபட்ட மார்க்கண்டேயன் மீது மீண்டும் போஸ்கோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே குலசே கரன் புதூர் அத்திகுளம் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 63). இவர் நீதிமன்றத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஏஞ்சல் லதா குமாரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நாகேந்திரன் படுக்கை அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது மனைவி அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது நாகேந்திரன் தூக்கில் தொங்கினார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரன் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×