search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ"

    • திட்டக்குடி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
    • மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழு தூரில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தொழு தூர், ராமநத்தம், வேப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வருவர். வேப்பூரில் இருந்து பிளஸ்-2 மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் பிளஸ்-2 மாணவியை பின்தொடர்ந்து 2 வாலி பர்கள் வந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் மாணவி யிடம் காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அந்த மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்ட மாணவியின் தாய் வாலிபரிடம் சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.

    ஆனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவியிடம் மது போதையில் அதே வாலி பர்கள் சில்மிஷம் செய்த னர். இதுகுறித்து மாணவியின் தாய் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராமநத்தத்தை சேர்ந்த விஜய் (வயது 26), பிரவீன்குமார் (22) ஆகிய 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளவரான மார்கண்டேயன் மாணவியை அழைத்துக்கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு தலைமறைவானார்.
    • கடந்த 7-ந்தேதி மார்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியை கடத்திச் சென்று இருக்கிறார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டே யன் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தை கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மார்க்கண்டேயனுக்கும் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி

    10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவியை அழைத்துக்கொண்டு மார்கண்டேயன் கடந்த 2021-ம் ஆண்டு தலைமறை வானார்.

    இதுகுறித்து கன்னியா குமரி மகளிர் போலீசார் மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மாணவி யையும் மீட்டனர். இதை யடுத்து மார்க்கண்டே யன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.

    இது தொடர்பான வழக்கு தற்பொழுது கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவி கடந்த 7-ந்தேதி மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது மார்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியை கடத்திச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    செல்போன் டவர் உதவி யுடன் மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. மார்க்கண்டேயன் ஓசூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கன்னியா குமரி மகளிர் போலீசார் ஓசூருக்கு விரைந்து சென்ற னர். அங்கு வாடகை வீட்டில் குடும்பம் நடத்திய மார்க்கண்டேயனையும் மாணவியையும் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட இருவ ரையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மீட்கப் பட்ட மாணவியிடம் விசா ரணை நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். பிடிபட்ட மார்க்கண்டேயன் மீது மீண்டும் போஸ்கோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×