search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி"

    • பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்
    • ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது.

    அருமனை :

    குலசேகரம் கோட்டூர் கோணத்தை சேர்ந்தவர் ஜான்றோஸ் (வயது 65). இவர், குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த தோட்டம் திருவனந்த புரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்த மானதாகும். ஜான்ரோஸ் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு சென்று வருவார்.

    இந்நிலையில் அவரது மகன் கில்பர்ட்டின் நிச்சய தார்த்தம் இன்று நடைபெற இருந்தது. இதற்காக ஜான்ரோஸ் நேற்று வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார்.

    ஆனால் அவர் வர வில்லை. இதனை தொடர்ந்து மனைவி ராணி, மகனுடன் இன்று காலை அருமனை குஞ்சாலு விளையில் தனது கணவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவுகள் திறக்காமல் இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் ஜான் ரோஸ் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுனில் குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தோட்டத்தின் உரிமையாளர் பிரசாந்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜான் ரோசின் மரண செய்தி கேட்டு கோட்டூர் கோணம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    • தண்டவாளத்தை கடந்து வேலைக்குச் சென்று வருவது வழக்கம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல், ஆக.3-

    திருவட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 64). இவர் நெய்யூர் சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    தற்போது பரம்பை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் பணி நடந்து வருவதால், வில்சன் பரம்பை பஸ் நிறுத்தத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இன்று காலையும் அவர், தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த வில்சன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள், இரணியல் போலீஸ் நிலையம் மற்றும் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த ரெயில்வே போலீசார், வில்சன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவலாளி போலீசில் ஒப்படைத்தார்.
    • குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணுவ வீரர்-காவலாளி திடீரென இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலப்பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊருக்கு வந்தவர் செவல்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் இருந்து இறங்கியபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உறவிர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் மணக்கன். அரசு பணியாளர் நற்பணி சங்க கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மாடியில் இருந்து தவறி விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மணக்கன் மகள் மரகதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (வயது63). இவர் புது ராம்நாடு ரோட்டில் உள்ள வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

     உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காவலாளி திடீரென இறந்தார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் கருப்பாயூரணி வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து(33). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி நெடுகனேந்தலில் நடைபெற்ற மாமனாரின் இல்ல விழாவிற்காக சென்றார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயமுத்துவின் தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவலாளியை டிரைவர் தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் டி.டி.மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக இருப்பவர் ஜோசப் (வயது 68). இவர் பணியில் இருந்த போது ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். அவரிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தும்படி ஜோசப் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்து கரிமேடு போலீசில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    மதுரை நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (வயது 22). இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆண் நண்பர்களுடனும் அடிக்கடி பேசியுள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோபிதா அபிதாவையும், சகோதரி மற்றும் தாயையும் ஆபாசமாக பேசியள்ளார். அதனை சோபிதா அபிதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் சோபி ஆபிதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கரிமேடு போலீசில் சோபிதாஅபிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    • வேல்சாமி டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 90). இவர் டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    தகராறு

    அதேபகுதியை சேர்ந்த மற்றொரு கடையில் வேலைபார்த்து வரும் முத்து, விஜயன் ஆகியோர் அங்கிருந்த முட்செடிகளை அகற்றி வேல்சாமி வேலைபார்க்கும் கடையின் முன்பு கொட்டியுள்ளனர். இதனை அவர் தட்டிக்கேட்டு ள்ளார்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது வீசி தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வேல்சாமி தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக தாள முத்துநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்து, விஜயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியபோது நிலைதடுமாறி காவலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவ கத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு பணிக்கு சென்றிருந்த வீரணன் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு உறவி னர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீரணன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

    மறவன்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. அப்போது வீரணன் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டில் தவறி தலைகுப்புற விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வீரணன் சம்பவ இடத்திலயே பரிதாப மாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எனது மோட்டார் சைக்கிளை திருடியதால் தீர்த்து கட்டினேன்
    • கைதான வாலிபர் வாக்குமூலம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேச புரம் என்.பி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45), தனியார் நிறுவன காவலாளி.

    இவர் கடந்த17-ந்தேதி சொத்தவிளை கடற்கரையில் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முருகனை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வந்தது. இந்த நிலையில் அவரை கொலை செய்தது பீச் ரோட்டை சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் குமரகுருவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த குமரகுரு தலைமறை வானார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 19-ந் தேதி குமரகுரு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 23-ந்தேதி நாகர்கோவில் ஜெயிலுக்கு குமரகுரு கொண்டு வரப்பட்டார். குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த குமரகுருவிற்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கினார். குமரகுருவை போலீசார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது குமரகுரு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் முருகனும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போனது. அந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டேன். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தன்று காலையில் முருகன் என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது எனது மோட்டார் சைக்கிளை தருவதாக அவர் கூறினார். இதையடுத்து நான் அங்கு சென்றேன்.

    அப்போது முருகன் எனக்கு மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டார்.நான் என்னிடம் பணம் இல்லை. பீச் ரோட்டில் உள்ள வீட்டில் சென்று எடுத்து தருவதாக கூறினேன். உடனே முருகனும் நானும் பீச் ரோட்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்றோம். அங்கு பணத்தை எடுத்து விட்டு கத்தி ஒன்றை எடுத்து வந்தேன்.

    இந்த நிலையில் மது அருந்திய போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருப்பினும் எனது மோட்டார் சைக்கிள் குறித்து கேட்டபோது முருகன் சரியாக பதில் கூற வில்லை. இந்த நிலையில் மாலையில் இருவரும் மது வாங்கிவிட்டு சொத்தவிளை கடற்கரைக்கு சென்றோம்.அங்கு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது மோட்டார் சைக்கிளைப் பற்றி கேட்டதற்கு எனக்கு மோட்டார் சைக்கிளை பற்றி ஒன்றும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக கத்தி யால் குத்தினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட் டேன். இவ்வாறு அவர் கூறி னார்.

    கைது செய்யப்பட்ட குமரகுரு மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்குகளும் ஒரு கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குமரகுருவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள். கொலை நடந்த சொத்தவிளை கடற்கரைக்கு சென்று விசாரணை நடத்த வும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • கோர்ட்டில் சரண் அடைந்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
    • சுசீந்திரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருந்ததை கொலை வழக்காக மாற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). தனியார் நிறுவன காவலாளி.

    இவர் அவ்வப்போது புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன்,அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி ராதா, கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் சொத்தவிளை கடற்கரை சாலையில் முருகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக 17-ந் தேதி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ் பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்ப ள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முருகன் உடல் சற்று அழுகிய நிலையில் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பதில் சந்தேகம் இருந்தது. இதை அடுத்து சுசீந்திரம் போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முருகன் உடலில் மார்பு, கை, வயிறு என 5 இடங்களில் ஆழமான அளவில் கத்தி குத்துபட்டு முருகன் இறந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதை அடுத்து சுசீந்திரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருந்ததை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த முருகனை அவரது நண்பரான பீச் ரோட்டைச் சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) என்பவர் தான் கடைசியாக அழைத்துச் சென்றது தெரிய வந்தது. எனவே அவர் தான் கொலையாளியாக இருக்க லாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இந்நிலையில் குமரகுரு சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

    இந்த நிலையில் அவர் நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இது பற்றி சுசீந்தி ரம் போலீசாருக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே முருகன் கொலை செய்யப்பட்டது எப்படி? கொலைக்கான காரணம் என்ன? என்பதெல்லாம் தெரிய வரும் என போலீசார் கருதுகின்றனர்.

    ×