search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்
    X

    மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்

    • தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.
    • ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர்.

    குமரி மாவட்டம் ஆன்மிக களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சுசீந்திரத்தில் தான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    புராண காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் தவநெறியில் சிறந்து விளங்கிய அத்திரி-அனுசுயா தம்பதிகள் வசித்து வந்தனர். அனுசுயாவின் கற்பை சோதிக்கும் நோக்கில் மும் மூர்த்திகளும் வயோதிகர் வேடத்தில் வந்து யாசகம் கேட்டனர். நிர்வாணமாக உணவு பரிமாறினால்தான் உண்போம் என்றும் நிபந்தனை விதித்தனர். தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.

    பின்னர் ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர். அனுசுயாவின் கற்பின் மகிமையை போற்றிய மூம்மூர்த்திகளும் அத்திரி-அனுசுயா தம்பதியரின் வேண்டுதலை ஏற்று கிருதயுகத்தில் அரசமரமாகவும், திரேதா யுகத்தில் துளசியாகவும், துவாபர யுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் சரக்கொன்றை மரமாகவும் மாறி அருள்பாலித்து வருகின்றனர்.

    அதன்படி ஒன்றின் மேல் ஒன்றாக மும்மூர்த்திகள் சுயம்புலிங்க வடிவில் வீற்றிருப்பதை ஆதி மூலஸ்தானமாகிய கொன்றையடி சன்னதியில் தற்போதும் காணமுடிகிறது. ஆண்டுகள் ஈராயிரம் கடந்த பின்பும் சரக்கொன்றை மரமானது செதில் அரிக்காமல் கறுமை நிறத்தில் காட்சியளிப்பது எங்குமே காணமுடியாத தெய்வீக காட்சியாகும். இது இந்திரன் சாபம் தீர்த்த தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு இன்றளவும் இந்திரன் அர்த்தஜாம பூஜை நடத்தி வருவதாக நம்பப்பட்டு வருகிறது.

    சுசீந்திரம் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை பக்தர்கள் அனைவரும் தொட்டு வணங்கலாம் என்பது சிறப்பம்சம். மேலும், கோவிலில் உள்ள விக்னேஷ்வரி சிலையும் சிற்பியின் சிந்தனை வளத்தை எடுத்துக்கூறிக்கொண்டிருக்கிறது.

    Next Story
    ×