search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார சீர்கேடு"

    • தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார்.
    • குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    உடுமலை:

    உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதிக்கு உட்பட்ட சேகர் புரம்,குமார் நகர்,சித் தாண்டீஸ்வரர் லே-அவுட், பெதப்பம்பட்டி ரோடு,ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபர் ஒருவர் காய்கறி கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது:- குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வருகின்ற கால்நடைகளுக்கு உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திர சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார். அதில் இருந்து எழும் துர்நாற்றம் சுற்றுப்புற வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள் குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சின்ன வீரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சின்ன வீரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமார் நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நபர்மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • ெபட்ரோலிய நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்தி்ற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவி்க்கின்றனர்.
    • பெட்ரோலிய கழிவுநீர் செல்லும் கால்வாயில் எதாவது ஒரு வகையில் தீ விபத்து ஏற்ப்பட்டால் பேராபத்து காத்திருக்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், சிவாடி கிராமத்தில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ளது. நான்கு நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் மழை பெய்தது, மழை நீரோடு சேர்ந்து பெட்ரோலிய சேமிப்பு கிடங்கிலிருந்நு வெளியேறிய பெட்ரோலிய கழிவுநீரானது அருகேவுள்ள ஊத்துப் பள்ளம் கிராமத் திலுள்ள விளை நிலங்கள், விவசாய கிணறுகளில் புகுந்திருக்கிறது. இதனால் கிணறுகளிலிருந்த மீன்கள் செத்து மிதந்து வருவதாகவும், விளை பயிர்கள் கருகி அழிந்து வருவதோடு சுற்றுவட்டார பகுதி முழுவதும் பெட்ரோலிய வாடை வீசி வருவதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கிணற்றிலிருந்து நிரம்பி கால்வாயில் வழிந்தோடும் தண்ணீருக்கு அருகே பற்ற வைத்த தீக்குச்சியை கொண்டு செல்லும் போது, பச்சையான செடி கொடிகளே தீப்பற்றி எரிவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு கிணற்று நீரில் பெட்ரோலிய கழிவுகள் கலந்திருப்பது உறுதியாகிறது.

    கிணறுகளிலும், விளைநிலங்களிலும் பெட்ரோலிய கழிவு நீர் புகுந்திருப்பது தொடர்பாக சம்மந்தபட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த ெபட்ரோலிய நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்தி்ற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவி்க்கின்றனர்.

    பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ள இடத்திற்கும் கழிவு நீர் வழிந்தோடும் இடத்திற்கும் நடுவே சேலம்-பெங்களூருவை இணைக்கும் ெரயில்பாதை அமைந்திருக்கிறது. தினசரி இந்த வழியாக ெரயில்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. பெட்ரோலிய கழிவுநீர் செல்லும் கால்வாயில் எதாவது ஒரு வகையில் தீ விபத்து ஏற்ப்பட்டால் பேராபத்து காத்திருக்கிறது. இதனை சரி செய்ய தருமபுரி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

    • காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது.
    • குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது. கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஏராளமான கடைகள் உள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையி ல் நாராயணநாயக்கம்புதூர் பிரிவு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள பழைய இரும்பு கடைகளில் அதிகாலை நேரத்தில் காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டும் வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொதுமக்களே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று எச்சரிக்கை செய்தும் அதையும் மீறி அவர்கள் வயர்களை எரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் பாராமு கமாக இருக்கிறா ர்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக அவர்க ளை எச்சரித்து அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
    • சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்லும் ரோட்டில், அம்மாபாளையம் பிரிவு அருகே ரோட்டோரங்களில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;- ரோட்டோரங்களில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை வெளியே உள்ளவர்கள் இங்கு வந்து கொட்டிச் செல்கின்றனர். இங்குள்ளவர்கள் யாரும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவது இல்லை, அருகே உள்ள புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் வாகனங்களில் வந்து இரவு நேரங்களில் குப்பைகளை வீசி செல்கிறார்கள். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது.

    சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.மேலும் கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.
    • 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகரின் நுழைவுப்பகுதியில் உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வர வில்லை. இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் காரணமாக ஓடை தூர்வாரப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி உள்ளது. அத்துடன் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வருகிறது. தூர்வார வேண்டும் இதனால் ஓடை முழுவதும் செடிகள், புற்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. அவை அருகில் வசித்து வருகின்ற பொதுமக்களை தாக்கியும் வருகிறது. ஏற்கனவே சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் சூழலில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அதில் தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இது குறித்து அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தங்கம்மாள் ஓடையை முழுமையாக தூர்வாரி அதன் மண்ணை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பொதுமக்கள் ஆங்காங்கே இந்த மக்காத குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர்.
    • எரிப்பதனால் மாசு கட்டுபாடு ஏற்பட்டு மனிதர்களுக்கு நுரையீரல் சார்ந்த நோய்கள் உருவாகின்றனர்

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, பொ.மல்லாபுரம் என பத்து பேரூராட்சிகளும், 251 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

    இந்த பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் என பல ஆயிரம் பேர் நியமித்து தூய்மையான நகர, கிராமப் பகுதிகளை உருவாக்குவதில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

    இருந்த போதிலும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்காததாலும், மாசு கட்டுப்பாட்டை உருவாக்கும் மக்காத குப்பைகள் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள், பெருமளவு சட்ட விரோதமாக மாவட்டம் முழுவதும் கடைகளில் விற்பனைக்கு குவிந்து பயன்பாடு அதிகப்படுத்தியுள்ளதாலும், அரசுக்கு இந்த பணி பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

    மாவட்ட நிர்வாகம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்துச் செல்வதற்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்தினாலும் , நகரப் பகுதிகள், கடைவீதி, மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ெரயில் நிலையம், ஊர்களின் எல்லைப் பகுதிகள் மக்கள் வாழக்கூடிய இடங்களில் ஆங்காங்கே மழை போல மக்காத குப்பைகளான தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் பைகள், அட்டைகள், செராமிக்ஸ், பொருட்கள் உலோக குப்பைகள், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்கள் என்பன அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே மழை போல குவிக்கப்படுகிறது.

    தூய்மை பணியாளர்கள் வீடு தோறும் வந்து இந்த கழிவுகளை சேகரித்தாலும் மக்கள் ஆங்காங்கே தூக்கி வீசி விட்டு செல்வதால் அவைகள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே குவியலாக குவிந்து கிடக்கிறது. இவற்றை சேகரிப்பதில் தூய்மை பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    தூய்மை பணியாளர்களுக்கு குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள், மோட்டார் வாகனங்கள் மூலம் இயங்கும் வசதி உள்ள வண்டிகள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளதால் சேகரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே இந்த மக்காத குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர்.

    இதனால் மாசுக் கட்டுப்பாடு ஏற்பட்டு மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், விலங்குகள், தாவரங்கள், சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் இவற்றினால் மண் வளமானது பாதிக்கப்படுகிறது. இவற்றை எரிப்பதனால் மாசு கட்டுபாடு ஏற்பட்டு மனிதர்களுக்கு நுரையீரல் சார்ந்த நோய்கள் உருவாகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கிராமப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
    • சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டியில் இருந்து வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.

    பாதள சாக்கடை

    இந்த குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளிேயறுவதற்கு வசதியாக 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை கட்டி முடிக்கப்பட்டது.

    அவற்றை சரியாக கட்டி முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் காரணமாக சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வேட்டைக்காரன்புதூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ -மாணவிகள் மூக்கை அடைத்துக் கொண்டு கழிவுநீரை மிதித்துச் செல்வதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வெளியேறி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கழிவு நீரில் விழும் அபாயமும்

    ஏற்பட்டுள்ளது.

    சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை....
    • நோய் பரவும் அபாயம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணான் ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர் வாராததால் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றது. இந்நிலையில் ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது பன்றிகள் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. பன்றிகள் அதிக அளவில் இறந்து கிடப்பதால் நோய் ஏற்பட்டு பன்றிகள் இறந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த பன்றிகளால் துர்நாற்றம் வீசுவதாலும், நாய் மற்றும் பறவைகள் இதை உண்பதாலும் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஏரியில் உள்ள நீரை பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்து பன்றியை தண்ணீரில் வீசி உள்ளதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.மேலும் கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இறக்கும் பன்றிகளை புதைக்காமல் தூக்கி எறியும் சம்பவம் சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இறந்த பன்றிகளை அப்புற படுத்தி தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவ்வழியே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றமும் வீசுகிறது.
    • குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்ட தடை விதிக்க வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி - பண்ணந்தூர் புதிய பாலம் அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தென் ஈஸ்வர் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி ஆற்றங்கரையில் நீராடுவது, இயற்கை அழகை பார்த்து ரசிப்பது அருகாமையில் தடுப்பணை உள்ளது.

    இத்தடுப்பணையை காணவும், நீராடவும் மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசம்பட்டி ஊராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை ஆற்றங்கரையிலும், ஆற்றிலும் கொட்டுவதோடு, தீ வைக்கின்றனர்.

    இதனால் அப்பகுதி புகைமண்டலமாக உள்ளது. அத்துடன் அவ்வழியே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றமும் வீசுகிறது. இங்கு மாடுகள், ஆடுகள் போன்றவை மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன.

    ஆனால் தற்போது குப்பைகளை கொட்டப்படுவதால் கால்நடைகள் வளர்த்தல் மிகவும் சிரமமாக இருக்கிறது, பல்வேறு வகையான நோய்கள் பரவுகின்றன. எனவே குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்ட தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம்.
    • தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்களில், வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர்.
    • சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
    • ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ளது கொடுவாய். இங்கு சுமார் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் திருப்பூர் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகிறது. எனவே கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

    இதன் அருகே ஏராளமான பேக்கரிகள், உணவகங்கள், பள்ளிக்கூடம், மின்மயானம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் மின்மயானத்தின் அருகே ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரில் இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மின்மயானத்திற்கு வருபவர்கள் அங்கு சிறிது நேரம் கூட உள்ளே நிற்க முடியாத அளவிற்கு மின்மயானத்தை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி சார்பில் எடுக்கப்படாததால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி ஒரு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Add Comments

    ×