search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயர்கள்"

    • நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார்.
    • வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய் பேட்டை கந்தசாமி பிள்ளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கிச்சிப்பாளையம் சிவன் கரடு பகுதியில் லாரிக்கு பாடி கட்டும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார். அப்போது பட்ட றையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்தபோது வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரமேஷ், கிச்சிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது.
    • குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது. கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஏராளமான கடைகள் உள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையி ல் நாராயணநாயக்கம்புதூர் பிரிவு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள பழைய இரும்பு கடைகளில் அதிகாலை நேரத்தில் காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டும் வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொதுமக்களே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று எச்சரிக்கை செய்தும் அதையும் மீறி அவர்கள் வயர்களை எரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் பாராமு கமாக இருக்கிறா ர்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக அவர்க ளை எச்சரித்து அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.
    • கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

    இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார்.
    • ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார். அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து முருகையன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால், மின் வயர் திருட்டு தொடர்பாக புகார் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ஆன்லைன் மூலம் முருகையன் புகார் அளித்தார்.

    ×