search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பரம்"

    • குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பேட்டி
    • பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்ட மைப்பு நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. பின்னர் குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பாஸ்கரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் இல்லை என்ற கவர்ச்சிகரமான போலி யான விளம்பரத்தை அறிவித்து மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட நிறுவனத்தை கூட்டமைப்பின் சார்பாக பலமுறை கண்டித்தும் மிகபெரிய அளவில் பொது மக்களை ஏமாற்றி உள்ளனர்.

    மேலும், செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் எந்த ஒரு நகையும் செய்ய இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இது போன்ற போலி விளம்பரங்களால் பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்களின் தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக் கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    எனவே நியாயமற்ற போலி விளம்பரங்களை உடனடியாக தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி போலியான விளம் பரங்களை தடுத்திட வழிவகை செய்து பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு பாதுகாத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். மேலும் பொதுமக்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்குமாறும் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவர் மாணிக்கம், செய லாளர் முத்துகுமார், பொருளா ளர் நாகேஷ், வழக்கறிஞர் பால முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    • இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை ஏ.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நடைபெற்றது.


    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி


    இதில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், மயில்சாமியின் மகன் அன்பு, படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன.


    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தரும் கூட. ஆனால் அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். ஆனால் தான் இறக்கும் வகையில் எம்ஜிஆரின் உண்மை தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி. அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமித்தி அமரலாம்.


    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்" என்று கூறினார். 

    • மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.
    • கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

    இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையதள விளம்பரத்தை நம்பி பட்டதாரி பெண் ரூ.1.21 லட்சத்தை இழந்தார்.
    • இன்ஸ்டாகிராமில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் சல்லிமலை தெருவைச் சோ்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சரண்யா (வயது27). இவா் பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா்.

    இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராமிற்கு கடந்த ஜூலை 26-ந் தேதி, இணையதளம் மூலம் பகுதி நேர வேலையில் சேர்ந்தால் வீட்டில் இருந்தபடியே ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை படித்தவர் அதில் இருந்த லிங்கை கிளிக்கை செய்த போது சரண்யாவின் செல்ேபானுக்கு ஏஞ்சலா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது.

    அதில் வேலைக்கு சேர நுழைவுக்கட்டணமாக பணம் செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய சரண்யா குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 904 வரை செலுத்தியுள்ளாா்.

    அதன் பிறகு சரண்யாவின் இணையதள கணக்கில் ரூ.1.86 லட்சம் இருப்பு இருப்பதாக காட்டியுள்ளது. இதனை நம்பி அந்தப் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

    வேலைக்கு சேர நினைப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அந்த இருப்பு கணக்கை மோசடி நபர்கள் காட்டியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றதப்பட்டதை உணர்ந்த சரண்யா ராமநாதபுரம் சைபா் கிரைம் போலீசில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

    • காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது
    • போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி செய்யப்பட்டது

    அரியலுர்:

    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நேற்று தொடங்கியநிலையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி,செஸ் பலகை மற்றும் சாலை விதிகளை தொடர்புபடுத்தி, அரிலூர் மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ராணி உள்ளிட்ட சில காய்களுடன் கூடிய ஸெ் பலகையில், செஸ் பலகையோ அல்லது சாலையோ, தவறான சிறிய நகர்வும் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும், தவளான திசையில் வாகனங்களை இயக்ககூடாது என்று அச்சிடப்பட்டுள்ளது.

    ×