search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைப்பு"

    • மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி
    • மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையின் மேற்கூரை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், புகார் வந்ததால் கடையில் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்தக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோட்டார் பகுதி மிக முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை சரி செய்யும் வகையில் கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    தற்பொழுது சாலையில் மழை நீர் தேங்காமல் கழிவு நீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தற்பொழுது கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் கழிவு நீரோடையின் மேல் மூடிகள் அமைக்கப்படும். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    அகற்றப்பட்ட பிறகும் பொதுமக்கள், வியாபாரிகள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில்லா மாநகராட்சியாக நாகர்கோவில் மாநகராட்சி மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த வக்கீல் கைது
    • பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததினால் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார் இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

    இவர் 14.10.2022 அன்று மண்ணெண்ணை பாட்டிலுடன் தான் தீ குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இந்த மாதம் 30-ந் தேதி சாலையை செப்பனிட வில்லை என்றால் தான் 31-ந் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்தார்.

    அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் அவரிடம் சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை என்றும் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீ குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை நீரோடையின் மேல் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    • மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்படுத்தி வந்தது.

    கன்னியாகுமரி:

    கருங்கல் சந்திப்பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டோரம் அமைக்கப்பட்டு இருந்த மழை நீரோடைகள் ஆக்கிர மிக்கப்பட்டு இருந்ததோடு, சில பகுதிகள் சேதமடைந்தும் காணப்பட்டது.

    இதனால் மழைக்காலங் களில் மார்த்தாண்டம் சாலையிலிருந்தும் சந்திப் பில் இருந்தும் மழைநீர் ரோடு வழியாக ஓடி ஆர்.சி. தெருவில் ஆறுபோல் பெருக்கெ டுத்து ஓடி வந்தது. மட்டுமல்லாமல் சேதமடைந்து இருந்த பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்ப டுத்தி வந்தது.

    இதனால் அப்பகுதி மக்க ளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கு உள் ளாகி வந்தனர். எனவே கருங்கல் புதுக்கடை சாலை யில் உள்ள மழை நீரோடை களை சீரமைக்க வேண் டும் என பேரூராட்சி நிர்வா கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் இந்த மழை நீரோடையை சீர மைப்பதற்கு 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் தமிழக அரசு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்நிதியில் கருங்கல் சந்திப் பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டின் வலதுபுறம் கூனாலுமூடு வரை மழை நீரோடையின் மேல் அமைக் கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டு, மழை நீரோடை சீரமைக்கும் பணி தொடங்கியது.இப்பணியை கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத்தலைவர் மரிய செல்வம், பேரூராட்சி உறுப்பினர்கள் டெல்பின், ராஜசேகர், ஜெயக்குமார், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • நகராட்சி ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. மார்த்தாண்டத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களைச் சந்தித்து குறை களைக் கேட்டு பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

    அப்போது எம்.பி. அலுவ லகம் வருகை தந்த குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகத்திடம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வசதி வாரியம் சாலையின் ஒரு பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் பதித்து உள்ளன. பணிகள் முடிவடைந்த தும் சாலைகள் சரியாக மூடப்ப டாத காரணத்தினாலும் குண்டும் குழியுமாகப் போக்குவரத்துக்கும் மக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அதற்கான பணிகள் எப்போது முடியும் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விஜய்வசந்த் எம்.பி. ஆணை யரிடம் கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.

    மேலும் மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளது. அதனைச் சீரமைக்க வேண்டியும், மார்த்தாண்டம் மேம்பாலம் கீழே செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டியும், மற்றும் குழித்துறை நகராட்சி யிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மார்த்தாண்டம் மீன் சந்தை அருகே சேகரித்து வைக்கப்பட்டுள்ளதால் துர் நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகை யில் உள்ளதால் அந்த கூடத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த சந்திப்பின் போது தூய்மை அலுவலர் ஸ்டான்லி குமார், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரீகன், வட்டார தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.
    • பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.

    நாகர்கோவில், அக்.27-

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வரு

    கிறது.

    இணைப்பு துண்டிப்பு

    நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலையத்தை வந்த டைந்தது. இதையடுத்து ெரயிலில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். கன்னியா குமரிக்கு செல்லும் ெரயில் பயணிகள் மட்டும் ெரயிலில் அமர்ந்திருந்தனர்.

    நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து நீண்ட நேரம் ஆகியும் ெரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட வில்லை. ெரயிலில் இருந்த பயணிகள் ெரயிலை விட்டு இறங்கினர். இது குறித்து விசாரித்த போது என்ஜின் பெட்டிக்கும் அதனுடைய இணைப்பு பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    சரி செய்தனர்

    ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ெரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.

    பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.

    தாமதம்

    இதைத் தொடர்ந்து ெரயிலை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்கப்பட்டது. காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு கன்னியா குமரிக்கு சென்றது. சுமார் 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக சென்றது.

    ெரயிலில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்த னர். ெரயில் நிலையத்தில் இணைப்பு துண்டிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. நடுவழியில் இதே போன்று சம்பவம் நடந்திருந்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்த னர்.

    • சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும்.

    திருப்பூர்:

    சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டத்தை கையிலெடுக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளது.இதுகுறித்து பா.ஜ.க. ஆண்டிபாளையம் மண்டல் தலைவர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல உதவி கமிஷனர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்களிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இடுவம்பாளையத்திலிருந்து வித்யாலயம் மற்றும் பாரப்பாளையத்திலிருந்து முருகம்பாளையம் செல்லும் சாலைகளில், பாதாள சாக்கடை அமைப்பதற்காக ஓராண்டுக்குமுன் குழி தோண்டப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ரோட்டை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும். இல்லையெனில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    • தோட்டியோடு சந்திப்பில் இன்று நடந்தது
    • 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.

    நான்கு வழி சாலை பணிக்காக தனியாரிடமிருந்து அரசு விலைக்கு எடுத்த நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    தோட்டியோடு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமை தாங்கினார்.மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர் .கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
    • நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர், துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட நெல் முடிக்கரை குரூப் திருப்புவனம் கண்மாயில் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த கண்மாயில் 4 மடைகள் உள்ளன. இதில் 4-வது மடையிலிருந்து கலியாந்தூர் பாசனப்பகுதி ஒரு பிரிவாகவும், நயினார் பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் ஒரு பிரிவாகவும், 4-வது மடையின் பின்புற தொட்டியில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

    இதில் நயினார்பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் (கரிசல் வாய்க்கால், மேட்டு வாய்க்கால் மற்றும் மாவடி பச்சேரி வாய்க்கால்) மடையின் 440-வது மீட்டரில் 4 பிரிவாக பிரிந்து செல்கிறது. பாசன நீரை பங்கீடு செய்வதில் நைனார் பேட்டை கிராமத்தினருக்கும், திருப்புவனம் மற்றும் திருப்புவனம் புதூர் கிராமத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.அதன்பேரில் கலெக்டர் திருப்புவனம் கண்மாய் 4-வது மடையில், நயினார்பேட்டை மற்றும் திருப்புவனம் பாசன விவசாயிகள் முன்னிலையில் கள ஆய்வு செய்தார்.

    மேலும் தட்டான்குளம் படுகை அணைக்கு கீழ் வலது பிரதான கால்வாயில் பழையனூர், பிரமனூர் மற்றும் 19 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் வைகை ஆற்றுக்கும் வலது பிரதான கால்வாய்க்கும் இடையில் உள்ள தடுப்புச்சுவர் வைகை ஆற்றில் ஏற்பட்ட ெவள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதையும், கலெக்டர் ஆய்வு செய்து சேதம் அடைந்த சுவற்றை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, பாசன நீர் வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, பார்த்திபனூர் மதகணை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பாசன வசதி அளிக்கும் இடது பிரதான கால்வாயில் கலெக்டர் ஆய்வு செய்து முட்செடிகள் மற்றும் கருவேலை மரங்களை அகற்றும் பணிகளை, மழைக்காலத்திற்கு முன்பு தொடங்கவும், பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீரை முறையாக சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது கீழ்வைகை வடிநில கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் கிறிஸ்டர் நேசகுமார், நீர்வளத்துறை (சருகனியாறு, வடிநில கோட்டம்) செயற்பொறி யாளர் பாரதிதாசன், உதவிப்பொறியாளர்கள் பூமிநாதன், செந்தில்குமார், முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளார் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது.
    • மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மணப்பாக்கம் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு நத்தம் ஏரியிலுள்ள 10 அடி கலங்கில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இந்த தண்ணீர் வரும் வழியில் தற்போது 2 அடி உயரத்திற்கு தார்சாலை அமைத்தும் கலங்கல் பகுதியில் செங்கல்சூளை கற்கள் பெருமளவுக்கு குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தகலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது. மணப்பாக்கம் ஏரி நிரம்பினால் தண்ணீர்வரும் வழியில் உள்ள நத்தம், மேல்அருங்குணம், மனம் தவழ்ந்தபுத்தூர், ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    மேலும் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீர் சென்று சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பண்ருட்டி நகரம், திருவதிகை வரையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    எனவே தற்போது வரையில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரால் ஏரியை நிரப்பி மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்று மணப்பாக்கம் விவசாயி ஜானகிராமன் கடலூர் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தார்

    இந்த செய்தி மாலைமலரில் வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் கலெக்டர்அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.மணப்பாக்கம் ஏரிக்குதண்ணீர் செல்லும்கலங்கல் வாய்க்காலை தற்காலிகமாக சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து தற்போது மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.இதனால்விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிரந்தர ஏற்பாடாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தேவதானம் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள தேவதானம் சொக்கநாதன்புத்தூர் முகவூர் போன்ற பல்வேறு கிராமமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பெரியகோவில் தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    இதையடுத்து தெப்பத்தை சீரமைக்க ரூ. 3.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் மற்றும் மிசா நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
    • வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி கமிஷனர் ஆனந்த மோகன் மற்றும் நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதி வாரியம் ,குடிநீர் வடிகால் வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அஞ்சு கிராமம், புளியடி பகுதியில் தற்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. அஞ்சுகிராமத்தில் 480 வீடுகள் உள்ளதில் 50 வீடுகள் தற்போது காலியாக உள்ளது. அதில் பயனாளிகளை அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் புளியடி பகுதியில் 30 வீடுகள் காலியாக உள்ளது. அந்த வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக புதுகுளம் பகுதியில் 384 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும். வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியா குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சாலை பிரச்சினை தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத காண்ட்ராக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை, 2011, 2012 ல், இருந்து போதிய அளவு பெய்யவில்லை. அதிகரித்த வறட்சி காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.போதிய தண்ணீர் இல்லாமல் உடுமலை சுற்றுப்பகுதியில், மட்டும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகியுள்ளன.

    மேலும் பருவமழை காலத்திலும் பலத்த காற்றுக்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்வது தொடர்கதையாகியுள்ளது. கருகிய மரங்கள் தவிர்த்து, பல்வேறு நோய்த்தாக்குதலால் காய்ப்புத்திறன் இல்லாமல் பல மரங்கள் வெறுமையாக காட்சியளிக்கின்றன. இத்தகைய தென்னை மரங்களை அப்புறப்படுத்த கூட வழியில்லாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் முன்பு தென்னந்தோப்பு சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மரத்துக்கு 1,700 ரூபாய் வரை விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கும் தென்னை வளர்ச்சி வாரியம், சீரமைப்பு நிதி ஒதுக்கப்பட்டது.தென்னை விவசாயிகள் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சீரமைப்பு நிதியை தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக பெற்றுத்தர வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×