search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்மாய்கள்"

    • கண்மாய்கள், குளங்கள் வறண்டதால் அபிராமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பருவ மழை யை நம்பி நெல், மிளகாய் பருத்தி. மற்றும் சிறுதானி யங்கள் உள்பட சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்தனர் .

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுவதால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அபிராமம், கமுதி பகுதியை சுற்றியுள்ள நீர்வழித்தடங் களான மலட்டாறு, குண்டாறு.பரளையாறு கிருதுமால் நதி நீர்நிலை கால்வாய்களும் தண்ணீர் வராததால் வறண்டு காணப்படுவதால் அதனை சுற்றியுள்ள கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது.

    தற்போது உள்ள சூழ் நிலையே தொடருமானால் பருவமழை தொடங்குவதற்கு முன் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனவே தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகரில் கண்மாய்கள் மராமத்து பணிக்கு ஜே.சி.பி. எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்மாய்கள் மராமத்து, வரத்து கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் போன்ற பணி களை செய்வதற்கு ரூ72 லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் ஜெயசீலன் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டம் முன்னேற விழைகிற மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனடிப்படையில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கண்மாய்கள் மராமத்து, வரத்துக்கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகளை செய்வதற்கு ரூ.72லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி- பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்கங்கள் பிரதான் நிறுவனத்திற்கு, 115/5A-மாருதி நகர், கச்சேரி ரோடு, விருதுநகர் - 626,001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 94451-23288 வாட்ஸ்-அப் எண்ணுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதான் நிறுவன அணி தலைவர் சீனிவாசன், பொறியியல் ஒருங்கி ணைப்பாளர் கனகவள்ளி, வேளாண் ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
    • தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடாகியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாதநிலை இருந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 20 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக 4 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வைகை ஆற்றில் கடந்த 6 மாத காலமாக தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருப்பது வரலாற்று உண்மையாகும். கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இது போன்று வைகை ஆற்றில் தண்ணீர் சென்றது கிடையாது என்று பெரிய வர்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.

    தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடா கியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் சங்க பொறுப்பாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, செயலாளர் மோகன், மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, செயலாளர் முத்துராமலிங்கம், கீழமேல்குடி வெள்ளமுத்து, கீழமேல்குடி ஊராட்சி மன்றததலைவர் தர்மராமு மற்றும் கிராம பெரியவர்கள் வைகை ஆற்றில் வெள்ளமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போது கீழ்மேல் குடி கண்மாய், மானாமதுரை கண்மாய், கால்பிரவு கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய் ஆகிய 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லாத அவல நிலையை எடுத்து கூறி இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முயற்சியால் தற்போது அதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் செல்கிறது. தூர்ந்து போயுள்ள அந்த கால்வாயை சீரமைத்து அதன் வழியாக தற்போது தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது.

    இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காசிராஜன் நன்றி தெரிவித்தார்.

    • வைகை ஆற்று தண்ணீரை கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழமேல்குடி, கால்பிரவு கிருங்கா கோட்டை, நாட்டார் கால்வாய் மற்றும் இதர பாசன கால்வாய் விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கிருங்காக்கோட்டை கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயின் முகப்பு அன்னியநேந்தல் அருகில் மிளகனூர் கால்வாய்க்கு அருகில் உள்ளது. மேற்படி கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரும் கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் மேற்கண்ட கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.

    தற்சமயம் வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து அனைத்து கண்மாய்களும் நிரம்பிய நிலையில் அனைத்து கால்வாய் முகப்புகளும் அடைக்கப்பட்டு வைகை தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரவு கிருங்காகோட்டை, நாட்டார் கால்வாய் வழியாக நிரம்பாத கண்மாய்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் கால்வாயின் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்ய வந்த நிலையில் மிளகனூர் கிராமத்தினர் வாக்குவாதம் செய்து வேலை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்து கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் தாலுகாவில் கண்மாய்கள் நிரம்பின.
    • தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் மழை மற்றும் வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீ ரால் இந்ததாலுகாவில் அமைந்துள்ள பொன்னமங்கலம் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.

    பொன்னமங்கலம் கிராமத்திற்கு அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கண்மாய் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக கடந்த ஒருவாரகாலமாக பொன்னமங்கலம் கண்மாய்க்கு வந்து கொண்டிருந்தது.

    இதனால் நேற்று முன்தினம் பொன்ன மங்கலம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து கண்மாய் உபரிநீர் கண்மாயின் கிழக்குப்பகுதி வழியாக மறுகால் பாய்ந்து வெளியேறி அருகேயுள்ள ஜோசியர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்லத் தொடங்கியுள்ளது.

    இதே போல் பொன்ன மங்கலம் கிராமத்தின் அருகேயுள்ள மேலேந்தல் கண்மாயும் நிரம்பி வழிகிறது. இந்த கண்மாய்க்கு பொன்னமங்கலம் கண்மாயின் மேற்குபகு தியிலுள்ள மறுகால் மூலமாக வெளியேறும் நீர் வருவதால் மேலேந்தல் கண்மாயும் நேற்று நிரம்பியது. இந்த கண்மாயின் உபரிநீர் மறுகால் வழியாக உரப்பனூர் கண்மாக்கு செல்கிறது. இது தவிர பொன்னமங்கலத்தினை அடுத்துள்ள திருமங்கலம் தாலுகாவின் கடைசி எல்லை கிராமமான வாகைகுளம் கிராமத்தில் உள்ள வாகைகுளம் கண்மாயும் நிரம்பியுள்ளது. தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
    • நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர், துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட நெல் முடிக்கரை குரூப் திருப்புவனம் கண்மாயில் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த கண்மாயில் 4 மடைகள் உள்ளன. இதில் 4-வது மடையிலிருந்து கலியாந்தூர் பாசனப்பகுதி ஒரு பிரிவாகவும், நயினார் பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் ஒரு பிரிவாகவும், 4-வது மடையின் பின்புற தொட்டியில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

    இதில் நயினார்பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் (கரிசல் வாய்க்கால், மேட்டு வாய்க்கால் மற்றும் மாவடி பச்சேரி வாய்க்கால்) மடையின் 440-வது மீட்டரில் 4 பிரிவாக பிரிந்து செல்கிறது. பாசன நீரை பங்கீடு செய்வதில் நைனார் பேட்டை கிராமத்தினருக்கும், திருப்புவனம் மற்றும் திருப்புவனம் புதூர் கிராமத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.அதன்பேரில் கலெக்டர் திருப்புவனம் கண்மாய் 4-வது மடையில், நயினார்பேட்டை மற்றும் திருப்புவனம் பாசன விவசாயிகள் முன்னிலையில் கள ஆய்வு செய்தார்.

    மேலும் தட்டான்குளம் படுகை அணைக்கு கீழ் வலது பிரதான கால்வாயில் பழையனூர், பிரமனூர் மற்றும் 19 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் வைகை ஆற்றுக்கும் வலது பிரதான கால்வாய்க்கும் இடையில் உள்ள தடுப்புச்சுவர் வைகை ஆற்றில் ஏற்பட்ட ெவள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதையும், கலெக்டர் ஆய்வு செய்து சேதம் அடைந்த சுவற்றை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, பாசன நீர் வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, பார்த்திபனூர் மதகணை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பாசன வசதி அளிக்கும் இடது பிரதான கால்வாயில் கலெக்டர் ஆய்வு செய்து முட்செடிகள் மற்றும் கருவேலை மரங்களை அகற்றும் பணிகளை, மழைக்காலத்திற்கு முன்பு தொடங்கவும், பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீரை முறையாக சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது கீழ்வைகை வடிநில கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் கிறிஸ்டர் நேசகுமார், நீர்வளத்துறை (சருகனியாறு, வடிநில கோட்டம்) செயற்பொறி யாளர் பாரதிதாசன், உதவிப்பொறியாளர்கள் பூமிநாதன், செந்தில்குமார், முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளார் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தனியார் பங்களிப்புடன் 7 கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.


    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுகோட்டையில் 7 கண்மாய்களை நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை கலெக்டர்    மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் வகையில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரித நடவடிக்கைஎடுத்து வருகிறார்.  

    நீர்நிலைகளை பாதுகாத்திட தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்  பங்களிப்பை அளித்திட முன்வந்துள்ளனர். அதன்படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுக்கோட்டை ஊராட்சியில் உள்ள 7 கண்மாய்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் பங்களிப்புடன்  புனரமைக்கப்பட உள்ளன. 

    இதன் மூலம் மழைக்காலங்களில் பெறப்படும் நீர்விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையிலும்; சேமிக்கப்படவுள்ளன.
     
    நாலுகோட்டையில் உள்ள சங்கிலித்தொடர் கண்மாய்களான பில்லாணி, பன்னியன், சிறுகுடி, தாமணி, பொட்டல்குளம், கருங்குளம் மற்றும் செங்குளம் ஆகிய 7 கண்மாய்களை ரூ.55 லட்சத்து 34 ஆயிரத்து 847 மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

    அனைத்துத் திட்டப்பணிகளையும் செப்படம்பர் 2022-க்குள் நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிராமத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை கிராம மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சின்ஜெண்டா இந்தியா நிறுனத்தின்  தேசிய தலைவர் வைத்தியநாதன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் கண்ணன், தலைமை இயக்க அலுவலர் கொண்டா ராதாகிருஷ்ணன், நாலுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், பாசன விவசாயிகள் நாராயணன், பாலகிருஷ்ணன், மணிமுத்து செட்டியார், சிவராமன், கணேசன், அர்ச்சுனன் ராஜ்குமார் துணை தலைவர் சக்தி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி கிராம மக்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் அனந்தராமன் நேத்ரா, தமிழரசி, காளியம்மை, மீனாட்சி, கனிமொழி, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ராஜபாளையம் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவி வந்தது. கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் இதில் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி விடுபட்டுப்போனது. ஆனால் தற்போது இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சில தினங்களாக பெய்த மழையினால் வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு நீர்வரத் தொடங்கியது. இந்த தாலுகாவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 51 கண்மாய் உள்பட 116 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் 14 கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

    மருங்கூர், புதுக்குளம், பிரண்டங்குளம், ஆதியூர், புளியங்குளம், கொண்டனேரி, கடம்பங்குளம், பெரியாதிகுளம், கருங்குளம், மேல இலுப்பைகுளம், ஆப்பனேரி, முதுகுடி, வாகைக்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்ற கண்மாய்களுக்கும் கணிசமான நீர்வரத்து இருக்கிறது.

    ராஜபாளையம் நகரின் குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த் தேக்கத்துக்கு அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 22 அடியாகும். இதில் 18 அடி வரை தண்ணீர் சேமிக்கலாம். தற்போது 15 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் முழு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜபாளையம் பகுதியை வளம் கொழிக்கச்செய்யும் சாஸ்தா கோவில் அணைஏற்கனவே நிரம்பி விட்டது. அதன் உபரி நீர் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருகிறது. அந்த அணையை உடனடியாக பாசனத்துக்கு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த பகுதியில் கண்மாய்களை தொடர்ந்து கண்காணிக்க வருவாய்த்துறையினருக்கு தாசில்தார் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.

    இதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. பிளவக்கல் அணை நிரம்பிய நிலையில் வினாடிக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொன்டு இருக்கிறது. இதில் 400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் அந்த பகுதிகளில் உள்ள ஓடை வழியாக கண்மாய்களுக்கு செல்கிறது.

    இந்த தாலுகாவில் மொத்தம் 153 கண்மாய்கள் உள்ளன. இதில் வாழைக்குளம் கண்மாய் ஏற்கனவே நிரம்பி விட்டது. பெரிய குளம் கண்மாய், அழுத நீராற்று குளம், மறவன்குளம், கமலாகுளம், வராகசமுத்திரம் கண்மாய், மொட்டவத்தான் கண்மாய் உள்பட 66 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. ஆண்டாள் நீராடியதாக கூறப்படும் திருமுக்குளத்துக்கும் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

    இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் ஆணையாளர் வெள்ளைச்சாமி கூறுகையில், நீர்வரத்து பகுதிகளையும் கண்மாய்களையும் மராமத்து செய்திருந்ததால் தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. கண்மாய்களை வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளன. அலுவலர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும். சுகாதார பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன இவ்வாறு கூறினார்.

    தொடர்மழையால் கிணறுகளிலும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
    ×