search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eyeballs"

    • வைகை ஆற்று தண்ணீரை கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழமேல்குடி, கால்பிரவு கிருங்கா கோட்டை, நாட்டார் கால்வாய் மற்றும் இதர பாசன கால்வாய் விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கிருங்காக்கோட்டை கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயின் முகப்பு அன்னியநேந்தல் அருகில் மிளகனூர் கால்வாய்க்கு அருகில் உள்ளது. மேற்படி கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரும் கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் மேற்கண்ட கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.

    தற்சமயம் வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து அனைத்து கண்மாய்களும் நிரம்பிய நிலையில் அனைத்து கால்வாய் முகப்புகளும் அடைக்கப்பட்டு வைகை தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரவு கிருங்காகோட்டை, நாட்டார் கால்வாய் வழியாக நிரம்பாத கண்மாய்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் கால்வாயின் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்ய வந்த நிலையில் மிளகனூர் கிராமத்தினர் வாக்குவாதம் செய்து வேலை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்து கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×