search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டிப்பு"

    • நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
    • வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.

    இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.

    பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.

    20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் வகையிலும் சாயப்பட்டறைகள் இயங்கு வதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம் தலை மையில் உதவி என்ஜினீ யர்கள் ஜாரி கொண்டலாம்பட்டி, சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, நெய்கா ரப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு செய்தனர்.

    அதில், சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    • கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.
    • நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்ற னர். இதில் 20,300 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 லிட்டர் வீதம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், சாக்கடை கட்டணம் உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி களை செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.

    இதனால் வரி செலுத்த முன்வராதவர்களின் வீடு களில் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி காட்டி வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

    • ராஜபாளையம் அருகே குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
    • செயல் அலுவலர் வெங்கடகோபு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி 16-வது வார்டு முகவூர் ரஸ்தா கீழ்புறம் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவதாக புகார் வந்தது.

    இதனையடுத்து செயல் அலுவலர் வெங்கடகோபு நேரடியாக களத்தில் இறங்கி முகவூர் ரஸ்தா பகுதியில் ஆய்வு செய்தார். அதில் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடி வருவது கண்டறியப்பட்டு பணியாளர்களால் உடனடியாக அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    மேலும் முறையற்ற குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒருவார காலத்திற்குள் தாங்களாக முன்வந்து தங்களது முறையற்ற குடிநீர் இணைப்பினை துண்டிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

    மேலும் இழப்பீட்டு தொகை பல மடங்காக உயர்த்தி வசுலிக்கப்படும் என்று செயல் அலுவலர் வெங்கடகோபு எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது குடிநீர் கட்டணம் செலுத்தாத 19 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    • வீட்டு உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 42 குடிநீா் இணைப்புகளை கண்டறிந்து அதிகாரிகள் துண்டிப்பு செய்யும் பணியை மேற்கொண்டனா்.

    காங்கயம்:

    காங்கயத்தில் அனுமதி பெறாமல் முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை கண்டறிவதற்காக நகராட்சி சாா்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    2 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் காங்கயம் நகரத்தில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த 42 குடிநீா் இணைப்புகளை கண்டறிந்து அதிகாரிகள் துண்டிப்பு செய்யும் பணியை மேற்கொண்டனா். மேலும் வீட்டு உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியபோது, முறைகேடாக குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கிய ஒப்பந்ததாரா் மீது காவல் துறையில் புகாா் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உரிய அனுமதி இன்றி குடிநீா் இணைப்பு வைத்துள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து, உரிய கட்டணங்களை நகராட்சிக்கு செலுத்தி இணைப்பை முறைப்படுத்தி கொள்ளவும் என்றாா்.

    • அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
    • இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சேலம்:

    சேலம், அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் வீடு பூட்டப்பட்டு காலியாக இருந்த காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை என்று மஞ்சுளா மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நிலுவை கட்டணம் ரூ.4,120 கட்டிதான் ஆகவேண்டும் என்றும், தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மஞ்சுளாவுக்கு உதவி பொறியாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.

    இதை தொடர்ந்து மஞ்சுளா மின்வாரியம் மீது சேவை குறைபாடு, மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலானய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் வழக்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.

    அதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம் வருகிற 6.1.2023 வரை மஞ்சுளா பெயரில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனவும், மேலும் மின் பகிர்மான கழக உதவி பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் அன்று ஆஜராகி தங்களது பதிலை தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார்.

    • வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் 2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கால அவகாசத்தை மீறியும் நிலுவை கட்டணத்தை செலுத்தாததால் காங்கயம் நகராட்சி வாா்டு 14 மற்றும் வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றாா்.

    • காங்கயம் நகராட்சியில் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது
    • நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சியில் 2020 -ம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொடுத்த கால அவகாசத்தைத் தாண்டியும் இன்னும் நிலுவை தொகை செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகரில் உடையாா் காலனி, பொன்னி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 7 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா்க் குழாய் துண்டிப்பு நடவடிக்கையைத் தவிா்த்துக் கொள்ளவும். குடிநீா்க் கட்டணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா். குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால், கடந்த ஒரு வாரத்தில் காங்கயம் நகரில் 40 வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம் நகராட்சி வாடகைதாரர், குத்தகைதாரர் நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட குத்தகை, வாடகை கடைக்காரராகிய நாங்கள் மாத மாதம் வாடகை செலுத்தி வரும் நிலையில், இப்போது வாடகை தாமதமானால் மாதம் 10-ந் தேதிக்குள் கட்டவில்லை எனில் தண்ட வட்டியாக 18 சதவீதம் வசூலிப்பதாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையின்படி எங்களால் வாடகை மட்டுமே செலுத்த முடியும் நிலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம். இந்நிலையில் 18 சதவீதம் தண்ட வட்டியை எங்களால் கட்ட இயலாது. எங்களுக்கு வாடகை செலுத்த 3 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது.எனவே பழைய முறையை பின்பற்றி வாடகை வசூலிக்க வேண்டும். புதிய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது.
    • இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது. நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடை மற்றும் குத்தகை தொகையை செலுத்தகோரி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரியினங்கள், கடை வாடகை ஆகியவற்றை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    • 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்

    • மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • ஆற்றில் தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் டிரைவருக்கு சிறிய காயம்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் சாலையில் பூக்கொல்லை அருகே பூனைக்குத்தி காட்டாறு செல்கிறது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.

    இது குறுகிய பாலமாக இருப்பதால் பருவ மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று வீரியங்கோட்டையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லோடுஆட்டோ பாலத்தில் வரும்போது எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்தது.

    ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.

    எனவே மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக தடுப்பு கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.
    • பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் நிலவரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், புது வரி விதிப்புக்குப் பின் பெறப்பட்ட வசூல் நிலவரம்,சொத்து வரி விதிப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டடங்கள் ஆகியன குறித்து விவரம் பெறப்பட்டது.

    தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டணம் நீண்ட நாள் உள்ள இணைப்புகளில் வசூல் தாமதமாகும் நிலையில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஏறத்தாழ 4 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளது. வரும் வாரத்தில் இதில் தீவிரம் காட்டி குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    ×