காங்கயம் நகரில் முறைகேடாக அமைக்கப்பட்ட 42 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

வீட்டு உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.42 குடிநீா் இணைப்புகளை கண்டறிந்து அதிகாரிகள் துண்டிப்பு செய்யும் பணியை மேற்கொண்டனா்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

காங்கயம்:

காங்கயத்தில் அனுமதி பெறாமல் முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை கண்டறிவதற்காக நகராட்சி சாா்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் காங்கயம் நகரத்தில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த 42 குடிநீா் இணைப்புகளை கண்டறிந்து அதிகாரிகள் துண்டிப்பு செய்யும் பணியை மேற்கொண்டனா். மேலும் வீட்டு உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியபோது, முறைகேடாக குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கிய ஒப்பந்ததாரா் மீது காவல் துறையில் புகாா் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உரிய அனுமதி இன்றி குடிநீா் இணைப்பு வைத்துள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து, உரிய கட்டணங்களை நகராட்சிக்கு செலுத்தி இணைப்பை முறைப்படுத்தி கொள்ளவும் என்றாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com