search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டாற்று பாலத்தில் கவிழ்ந்த லோடு ஆட்டோ
    X

    கவிழ்ந்து கிடக்கும் லோடு ஆட்டோ.

    காட்டாற்று பாலத்தில் கவிழ்ந்த லோடு ஆட்டோ

    • மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • ஆற்றில் தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் டிரைவருக்கு சிறிய காயம்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் சாலையில் பூக்கொல்லை அருகே பூனைக்குத்தி காட்டாறு செல்கிறது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.

    இது குறுகிய பாலமாக இருப்பதால் பருவ மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று வீரியங்கோட்டையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லோடுஆட்டோ பாலத்தில் வரும்போது எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்தது.

    ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.

    எனவே மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக தடுப்பு கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×