search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் குளத்தை சீரமைக்கும் பணி
    X

    அடிக்கல்நாட்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    கோவில் குளத்தை சீரமைக்கும் பணி

    • தேவதானம் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள தேவதானம் சொக்கநாதன்புத்தூர் முகவூர் போன்ற பல்வேறு கிராமமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பெரியகோவில் தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    இதையடுத்து தெப்பத்தை சீரமைக்க ரூ. 3.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் மற்றும் மிசா நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×