search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராத்திரி"

    • மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.
    • ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும்.

    பிரதோஷ விரத நாட்கள்

    பட்சங்கள் அதாவது மாதத்தில் வளர்பிறை நாட்கள் 15 தேய்பிறை நாட்கள் 15 ஆகும். வளர்பிறைநாட்கள் சுக்கில பட்சம் என்றும் தேய்பிறைநாட்கள் கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படும்.

    இந்த ஒவ்வொரு பட்சத்திலும் திரயோதசி திதி 26 நாழிகைகளுக்கு மேல் 32 நாழிகை வரை வியாபித்திருக்கும் நாளே பிரதோஷ நாள் ஆகும் என்பதை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

    சதுர்த்தசி வியாபித்திருந்தால், கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி தினத்திலும், சுக்கில பட்சத்தில் துவாதசி தினத்திலும் பிரதோஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

    உதாரணமாக, விஜய வருடம் தை மாதம் 15ம் நாள் (28.01.2014) செவ்வாய் கிழமை துவாதசி திதி அன்று காலை 19 நாழிகை 14 வினாடியுடன் முடிந்து, அதன் பின்னர் திரயோதசி திதி தொடங்கி மறுநாள் காலை புதன் கிழமை 10 நாழிகை 26 வினாடி வரை வியாபித்து இருப்பதால், முதல் நாள் செவ்வாய் கிழமை அன்றுதான் பிரதோஷம் எனக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் திரயோதசி திதி 26 நாழிகை முதல் 32 முடிய இருப்பது தை மாதம் 15ம் தேதி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்:

    தேய்பிறை சதுர்த்தசி திதி 45 நாழிகை இருக்கும் நாளைத்தான் மாத சிவராத்திரி நாளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

    மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.

    உதாரணமாக விஜய வருடம் தை மாதம் 16ம் நாள் (29.01.2014) புதன் கிழமை அன்று காலை 10.26 நாழிகையுடன் திரயோதசி திதி முடிவடைந்து அதன் பின்னர் பகல் முழுவதும் சதுர்த்தசி திதி இருப்பதால் அன்றுதான் மாத சிவராத்திரி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    கார்த்திகை தீப நிர்ணயம் செய்வது:

    கார்த்திகை மாதம் பௌர்ணமி திதி பிரதானமாகும். இந்த பௌர்ணமி , பிரதோஷ காலத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

    பாஞ்சராத்திர தீபம்:

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரதானமாகும். இந்த நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரம் வேதையாகக் கூடாது. அதாவது பரணி நட்சத்திரம் சூரிய உதயத்பரம் ஒரு வினாடியும் இருக்கக்கூடாது. இப்படி வேதை ஏற்பட்டால் மறுதினத்தில்தான் தீபரோகணம்.

    கோகுலாஷ்டமி:

    சிரவண (ஆவணி மாதம்) -பகுள அஷ்டமி - இந்த அஷ்டமி அர்த்தராத்திரியில் வியாபித்திருக்கும் தினம்தான் கோகுலாஷ்டமி.

    கிருஷ்ண ஜெயந்தி பகுள அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும், ஹர்ஷநாம யோகமும், ரிஷப லக்னமும் சேர்ந்த நேரம்தான் கிருஷண் ஜெயந்தி ஆகும்.

    தீபாவளி நிர்ணயம்:

    ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும். இந்த சதுர்த்தசி திதி இரவு 4-வது ஜாமத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி.

    போதாயன அமாவாசை நிர்ணயம்:

    சதுர்த்தசி திதியன்று 4வது ஜாமத்தில் அமாவாசை தொடர்பு சிறிது நேரம் இருந்தாலும் அந்த நாள் போதாயன அமாவாசை நாளாகும்.

    முகூர்த்த நாள் குறிக்கும்போது கவனிக்க வேண்டிய முகூர்த்த தோஷங்கள்:

    பூகம்பம் ஏற்பட்ட மாதம் தவிர்க்க வேண்டும்.

    மல மாதம் (இரண்டு பௌர்ணமி, இரண்டுஅமாவாசை வரும் மாதம்) தவிர்க்க வேண்டும்.

    கிரகண தோஷம் உடைய மாதங்கள், சந்திரன் 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் நாட்கள், பாபகிரகம் ஆட்சியற்று மற்ற ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலம், குருவும் சுக்கிரனும் சமசப்தம லக்கினங்களில் சஞ்சாரம் செய்யும் காலம், குரு சுக்கிரன் அஸ்தமன தினத்திற்கு முன், பின் 7 நாட்கள், குரு, சுக்கிரன் லக்கினமானபோது முன், பின் 3 நாட்கள், சாயன்ன காலம் (24 முதல் 30 நாழிகை வரை) அன்றைய தினம் சூரிய உதயம் 6 மணி என்று எடுத்துக்கொண்டால், அந்த 6 மணியை கூட்டிகொள்ளக் கிடைப்பது 15.36 மணி முதல் 18.00 மணி வரை, கரணங்களில் பவம், பாலவம், கரசை, பத்திரை நீக்கிய கரணங்கள், இஷ்டி தோஷம், இருத்தை, அஷ்டமி, இலாபம், ஏற்காளம், யோகங்களில் வைத்திருதி யோகம்,வியாதிபாத யோக பிற்பாதி ஆகுலம் முதலானவை முகூர்த்த தோஷம் உள்ளவையாகும். இவை முகூர்த்தம் குறிக்கும் போது தவிர்க்கப்படவேண்டிய காலங்கள் ஆகும்.

    சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) காலம் நிர்ணயம் செய்வது எப்படி?

    ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

    ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும். இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்) பிராத - ஸங்கல - மத்தியான்ன - அபரான்ன - சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஒரு திதியானது சாயன்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால், மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும்.

    ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது, அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும். அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும். சங்கரம தோஷமும் இருக்கக் கூடாது. மேற்கண்டவாறு முந்தின மாத திதி அமையவில்லையெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக்கலாம்.

    ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்.

    திதித்துவம்:

    மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு ஒரே நாளில் இரண்டு திதிகளையும் அனுஷ்டிக்க நேரிட்டால் அதற்கு திதித்துவம் என்று பெயர்.

    சூனிய திதி என்றால் என்ன?

    ஏதாவது ஒரு திதி அன்றைய தினத்தில் இருந்தும், அது அபரான்ன காலத்தில் அதிககாலம் இல்லாமல் குறைவாக இருப்பதனால் அந்த திதி மறுதினத்தில் சேர்ந்து, அதற்கு முந்தின திதி முந்திய தினத்தில் செல்லாகி விட்டால் அன்றைய தினம் சூனிய திதி என்று சொல்லப்படும்.

    • சனிப்பிரதோஷ முதல் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டும்.
    • 6 நாட்கள் சுப்பிரமணியரை நினைத்து அனுஷ்டிப்பது கந்தசஷ்டி விரதம்.

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத முதல் சோமவாரம் தொடங்கி சோமவாரம்தோறும் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் ஒரு பொழுது போசனஞ் செய்யக் கடவர். அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர்.

    இவ்விரதம் வாழ்நாள் முழுவதும், பன்னிரண்டு வருஷகாலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மாத்திரமேனும் அனுட்டிக்கக் கடவர். (உபவாசம் -உணவின்றியிருத்தல்.)

    திருவாதிரை விரதம்

    மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம்.

    உமாமகேஸ்வர விரதம்

    கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர். இரவிலே பணிகாரம் பழம் உட்கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்

    மாசி மாதத்து கிருஷ்ணபட்ஷ சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இதில் உபவாசஞ் செய்து நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் ப+சையும் அவ்வக் காலத்தில் செய்வது உத்தமம். ஒரு காலத்தில் சேர்த்துச் செய்வது மத்திமம்.

    பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி நானள்கு யாமப் ப+சையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமஸ்கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்க முதலிய மூல மூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்திற்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம்.

    சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும். சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் உண்ணல் மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம், சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங்கோற்பவ காலமாகும்.

    நான்கு யாமமும் நித்திரையழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரையழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் அவசியம் அனுட்டிக்கத்தக்கது.

    கேதார கவுரி விரதம்

    புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.

    இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு போசனஞ் செய்து இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.

    பிரதோஷ விரதம்

    சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுட்டித்தல் வேண்டும்.

    பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்நானஞ்செய்து சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டும் செய்யலாகாது.

    பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு உத்தமகாலம்.

    சுக்கிரவார விரதம்

    சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்ழிதூறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமியீறாகிய முதல் ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    விநாயக சதுர்த்தி

    ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ஷத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனஞ் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

    விநாயக சஷ்டி விரதம்

    கார்த்திகை மாத்தது கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    கார்த்திகை விரதம்

    கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக்கடவர். இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் அனுட்டித்தல் வேண்டும்.

    கந்த சஷ்டி விரதம்

    ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசஞ் செய்யக்கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுட்டித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே குப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

    • பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி.
    • மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும்.

    திருக்காளத்தி என்று இத்தலத்துக்கு பெயர் வந்தது மிகவும் சுவை ததும்பும் வரலாறு ஆகும். இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அருகே சிலந்தி ஒன்று வலையைப் பின்னி இருந்தது. இது சிவலிங்கத்திற்கு ஒரு பந்தலைப் போல காட்சியளித்தது.

    தீப்பட்டு அந்த பந்தலானது அறுந்துப் போகாத வகையில் அவ்வப்போது பந்தலினை அந்த சிலந்தி புதுப்பித்துக் கொண்டே அந்த சிலந்தி செய்து வந்தது.

    ஆனாலும் ஒரு சமயத்தில் சிலந்தி அமைத்திருந்த பந்தல் தீக்கு இரையாகியது. ஆனாலும் சிலந்தி அதிலிருந்து மீண்டது. பிறகு முக்தி பெற்றது.

    அதே காலக்கட்டத்தில் காளன் என்கிற நாகம் ஒன்று இருந்தது. இது யாரையும் கடிப்பது கிடையாது. இது நதமது நஞ்சினை வீணாகாது காத்து அதனை நாகமணியாக திரளச் செய்தது. இந்த நாகமணியை சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்துத் திருப்பணியை மேற்கொண்டு வந்தது.

    அங்கே அந்தி என்கின்ற சிவகணத் தலைவர் ஒருவன் யானையாக அவதாரம் செய்திருந்தான். இந்த யானை பொன் முகலியை கொண்டு வந்து திருக்காளத்தியப்பனுக்கு தம்முடைய துதிக்கையினால் திருமஞ்சனம் செய்து வந்தது. அதோடு பூவையும் சூட்டி மகிழ்ந்துது வந்தது. இது தூய வழிபாட்டு முறையாக காளன் என்கிற பாம்பிற்கு தோன்றவில்லை.

    இதனால் நாகத்திற்கு கோபம் உண்டானது. ஒருநாள் யானையின் துதிக்கையில் நுழைந்து அதற்கு துன்பத்தினை தந்தது. இதனால் கோபம் கொண்ட யானை பாம்பினை சுற்றி தரையிலே அடித்துக் கொன்றது. ஆனால் பாம்பு அதனை தீண்டியபோது இருந்த விஷமானது யானையையும் கொன்று போட்டது. இதையடுத்து அந்த யானை, பாம்பு இரண்டும் முக்தி அடைந்து பெருமை பெற்றன.

    சிலந்தி, யானை, பாம்பு ஆகிய மூன்றும் முக்தி பெற்ற தலம் என்பதினால் இது சீகாளத்தித் தலமானது சீ என்பது சிலந்தியையும் காளன் என்பது பாம்பையும், அந்தி என்பது யானையையும் குறித்து வரும் சொல்லாகும். இத்தலத்தின் பெயர் இவ்வகையிலேயே உருவானது. இதனால் இந்த தலத்தினை வணங்குகின்றவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள்.

    கோவில் அமைப்பு

    ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. இவற்றிலே கோவில் வரலாறு மற்றும் திருப்பணி செய்யப்பட்ட செய்திகளை காணலாம்.

    இங்குள்ள வாயில் மாடத்திலே கணபதியும், முருகனும் காட்சி தருகின்றார்கள். இதனையடுத்து விசுவநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும் காணப்படுகின்றது.

    இதனையடுத்து தேவிமாடம் ஒன்று காணப்படுகின்றது.இங்குள்ள மற்றொரு முக்கியமான சந்நிதி பால கணகம்பாள் சந்நிதியாகும். பாலா என்பது அம்பிகையின் பெயராகும். பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி ஆவாள். இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்தே பாலகணகம்பாள் என்று அழைக்கப்பட்டது.

    இவர் வாயிலிலேயே கொலுவீற்றிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இதற்கு காரணம் இவள் ஆவுடையாரிடம் கோபம் கொண்டு இவ்வாறு தவமியற்றுகின்றாள் என்று கூறுவார்கள்.

    இதையடுத்து பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. மேற்கு பகுதி இக்கோவிலிலே முடிகின்றது. இதனை அடுத்து மண்டபம் காணப்படுகின்றது.

    தெற்குப்புற பெருவழியில் ஒரு மேடைக் கோவில் உள்ளது. இந்த மேடைக் கோவிலில் சிவலிங்கம், கணபதி, பைரவர் உள்ளனர். இவை வலதுபுறமாக அமைந்துள்ளது.

    இடதுபுறமாக சுவற்றிலே துளை போட்டுள்ளனர். அந்த துளையில் நாம் பார்க்கின்றபோது நந்தி பெருமானை பார்க்க முடிகின்றது. இதற்கு பிறகு மேடைக் கோவிலில் நாம் சோமநாதர் மற்றும் மீனாட்சியம்மை சந்நிதிகளை பார்க்கலாம்.

    இதற்கு அடுத்தப்படியாக மயில்வாகனன் காணப்படுகின்றார். பிறகு நாம் பொன்முகலியை அடையக்கூடிய வாயிற்படியை பார்க்கலாம். இங்கு தமிழிலே அர்ச்சனை நடைபெறுகின்றது.

    ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த கோவிலுக்கு பல அறப்பணிகளைச் செய்துள்ளார். இவருடைய சிலையானது இங்கே வைக்கப்பட்டுள்ளது.

    இவருடைய இச்சந்நிதியை அடுத்து நாம் காண்பது சூரியநாராயண சுவாமி கோவில் ஆகும். இங்கு தலவிருட்சம் உள்ள பகுதியாக இது விளங்குகின்றது.

    இங்கு பாம்புப பிரதிஷ்டைகள் அதிகம் உள்ளன. இங்கு மகிழமரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கல்லால மரமும், வில்வ மரமும் ஆகும்.

    இதனையடுத்து நாம் பார்த்தால் பொன் முகலியாறு ஓடுவதைக் காணலாம். இது மற்றொரு பாலாறு எனக் கூறப்படுகின்றது. இந்த ஆற்றங்கரையில்தான் கண்ணப்பர் நடந்து வந்து இறைவனை வணங்கியதாக கூறுகின்றார்கள்.

    பொன்முகலி ஆற்றங்கரைக்கு நாம் வந்து விட்டால் கண்ணப்பரை வணங்காமல் போகக்கூடாது. இந்த பொன்முகலி ஆறே புனிதக் கங்கையாக ஆகியது. இங்கு பல ஈஸ்வர அருளாளர்கள் நீராடி மகிழ்ந்து பக்திப் பரவசத்திலே ஆழ்நடதுள்ளார்கள் எனக் கூறுவது பொருந்தும்.

    இந்த ஆற்று நீரினை எடுத்துத் தலையிலே தெளித்துக் கொள்வதால் நாம் புண்ணியம் அடைந்தவர்கள் ஆகின்றோம். ஈஸ்வரனின் பேரருளைப் பெற்றவர்கள் ஆகின்றோம்.

    இங்குள்ள மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும். லிங்கத்தினை வழிபட்டு 108 அர்ச்சனைகளை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து இந்த லிங்கங்களை வணங்கினால் அந்தப் பலனை நிச்சயமாக அடைந்தவர்கள் ஆகின்றனர்.

    இந்தக் கோவிலின் கிழக்குப் பகுதியிலே கொடிமரமும் பலிபீட லிங்கமும் உள்ளன. இங்கு விளக்குத் தூண் ஒன்று இருக்கின்றது. இது கொடி மரத்தினையும் விட மிகவும் உயரமாகக் காணப்படுகின்றது.

    இங்கு ஒரு மேடை உள்ளது. எட்டுத் திசை யானைகள், பைரவர்கள், திக்குப் பாலகர்கள் ஆகியோரை இந்த மேடையிலே காணலாம். இந்த எட்டுத் திசைகளிலும் நந்தித் தேவர் இருப்பார். இவரை வணங்கிய பின்னரே நாம் காளத்தியப்பரை வணங்க வேண்டும்.

    நந்தி பெருமானை திசைக் காவலர்களே சுமக்கின்றார்கள். எனவே இவரோடு நாம் இவர்களையும் சேர்த்து வணங்குதல் வேண்டும். இந்தத் திருத்தலமானது யோகத்திற்குரிய சிறப்புத் தலமாக பேசப்படுகின்றது. இங்கு ஆங்காங்கே பல மாடங்கள் இருக்கின்றன. இவ்விடங்களில் பெரிய யானைலிங்கங்களை காணலாம்.

    கருவறையில் உள்ள சிவலிங்கமே காளத்திப்பர் எனப்படுகின்றர். இந்தக் கருவறையின் வாயிலிலே நாம் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். இந்தக் கோவிலுக்கு காளிதேவியின் அருள் அதிகமாகவே உள்ளது. இவை பழைமை, சிறப்பு, தலைமை, சித்தி முதலிய பெருமையை பெற்று விளக்குகின்றன.

    இங்கு மேலும் மணிகண்டேசர் கோவில் தனியாக உள்ளது. இங்கு இறந்தவர்களை எழுப்பி அவர்கள் காதுகளிலே மந்திரம் ஓதி அனுப்புகின்றார் இவர். இங்குள்ள பொன் முகலியாறு மணிக் கங்கை யெனவும், மணிகர்ணிகை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் உட்கோவிலான காசி விஸ்வநாதர் சந்நிதி பூட்டியே உள்ளது.

    கண்ணப்பர் ஈஸ்வரருக்குக் கண்களைத் தந்த இடம் இந்த மலையின் உச்சியிலே உள்ளது. கண்ணப்பர் ஆலயத்தினை யடுத்து நாம் சித்தீஸ்வரம் காணுகின்றோம்.இதனையடுத்து ஒற்றை மண்டபக் கோவில் காணப்படுகின்றது.

    இங்குள்ள யோக மூர்த்தம் அய்யப்பனின் உருவத்தினை போன்று விளங்குகின்றது. மேலும் தட்சிணாமூர்த்தி செங்கல்வராயர் சந்நிதிகள் உள்ளன.

    இங்கு செப்பு நந்தி, சலவைக் கல் நந்தி ஆகியன உள்ளன.இங்குள்ள நந்திகள் முகம் பன்றியைப் போல காணப்படுகின்றது. இது பல்லவர்களின் சின்னமாகிய பன்றியை உணர்த்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. இங்கு பஞ்சமுகமான லிங்கம் உள்ளது.

    இங்கு நமது மனத்தினை கவர்வது காளத்தியார் மூர்த்தம் ஆகும். இங்குள்ள பாணம் மிகவும் முக்கியமானது ஆகும். இது உலோகத்தினால் ஆன கலசத்தினைக் கொண்டு விளங்குகின்றது.

    இங்கு கணபதி, பெருமாள், சப்தமுனிவர், சனிபகவான் போன்றோர் ஸ்தாபித்த பல லிங்கங்கள் உள்ளன. கனகதுர்க்க, கார்த்தியாயினி, உடுப்பி பாலசுப்பிரமணியம் ஆலயங்களும் உள்ளன.

    இக்கோவில் ஆதிசங்கரர் விஜயம் செய்த தலமாகும். இங்கு காணப்படுகின்ற சண்டிகேசுவரர் சந்நிதி மிகவும் வெளிச்சமாகக் காணப்படுகின்றது.

    தேவாரம், திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், திருவருட்பா, திருப்புகழ், ஞானப்பூங்கோதையார் துதி போன்ற பாடல்கள் பெற்றது இத்திருத்தலம்.

    • சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீரும்.
    • தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு.

    மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.

    விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவ ராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

    1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.

    2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

    3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.

    4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

    5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

    6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

    8. கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

    9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

    10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

    11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.

    12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    • சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
    • சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு.

    சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.

    1. நித்திய சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    2. பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.

    3. மாத சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    4. யோக சிவராத்திரி:

    சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    5. மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.

    மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

    • வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.
    • இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரிகள் சகலபாக்கியங்களையும் தரும்.

    அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும்.

    இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம்.

    உடலும் தீபமும்

    விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி! கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம்.

    தொடர்பு ஏற்படுத்தும் தீபம்

    ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன! விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மாவாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் திகழ்கின்றன! விளக்கின் சுடரை ஏற்றும் மற்றொரு சுடர் இறையருள் ஒளியாக உள்ளது.

    எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவை.

    அதைப் போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது.

    இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

    குத்துவிளக்கில் பெண்மை!

    குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன. அவை, அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியனவாகும்.

    விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்!

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தைச் செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும்.

    வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்!

    பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச் சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்துச் சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்துச் சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்துச் சிறப்புடையது. அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம்.

    மண் அகல் விளக்குகளை மாடத்தில் வைக்கவும். இவை அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன. மாக்கல் விளக்கை தெய்வமாடத்தில் ஏற்றலாம்.

    ஆனால் எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது.

    தீபங்களும் திரிகளும்!

    பருத்தி பஞ்சினால் ஆன திரிகள் நல்லவை அனைத்தும் செய்யும்.

    இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரிகள் சகலபாக்கியங்களையும் தரும்.

    தாமரைத்தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரியானது. முன் வினைப் பாவத்தை போக்கும். செல்வம் நிலைத்து இருக்கும்.

    வாழைத் தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால், குழந்தைச் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம், குடும்ப சாபம் முதலியவை நீங்கி அமைதி உண்டாகும். குல தெய்வ குறைபாடு நீங்கும்.

    வெள்ளை எருக்கம் பட்டையில் திரித்த திரியால், பெருத்த செல்வம் தரும். பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லைகள் நீங்கும். பிள்ளையார் அருள் கிட்டும்.

    புதுமஞ்சள் சேலை திரி:

    அம்மன் அருள் கிட்டும், வியாதிகள் குணமாகும், காற்று, கருப்பு சேட்டைகள் நீங்கும்.

    சிகப்பு நிற சேலைத் திரி:

    திருமணத் தடை நீங்கும், மலட்டுத்தன்மை செய்வினை தோஷங்கள் முதலானவை விலகும்.

    பன்னீர் விட்டு காய வைத்த புது வெள்ளைத் துணியினால் திரிக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால் உத்தம பலன்கள் அத்தனையும் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஆகாத எண்ணை!

    கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.

    இறைவனுக்கு உகந்த எண்ணை விபரம் வருமாறு:-

    மகாலட்சுமிக்கு- நெய்

    திருமால், சர்வதேவதைகளுக்கு- நல்லெண்ணை

    விநாயகருக்கு- தேங்காய் எண்ணெய்

    சிவபெருமானுக்கு- இலுப்பை எண்ணெய்

    அம்பாளுக்கு- நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஏற்ற எண்ணை

    பசு நெய்: லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.

    நல்லெண்ணை: பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.

    தேங்காய் எண்ணெய்: லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.

    இலுப்பை எண்ணை: எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.

    விளக்கெண்ணை: தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.

    வேப்ப எண்ணை: குலதெய்வ அருள் கிடைக்கும்.

    மூவகை எண்ணை: நெய், வேப்பஎண்ணெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

    தீபம் ஏற்றுவதின் பலன்கள்

    ஒருமுக தீபம்: சாதாரணமாக வீடுகளில், குத்து விளக்கில் ஒற்றைத் திரியுள்ள தீபம் ஏற்றக்கூடாது.

    இருமுக தீபம்: பிரிந்தவர் கூடுவர், குடும்ப ஒற்றுமை வளரும்.

    மூன்றுமுக தீபம்: புத்திர சுகம் ஏற்படும். குழந்தைகளுக்கு படிப்பில் ஏற்படும் மறதி குறையும்.

    நான்முக தீபம்: பால்பாக்கியம் கிட்டும், பூமியின் அருள் கூடி நிலம் கிடைக்கும்.

    ஐந்துமுக தீபம்: அனைத்து நலன்களுடன் அம்பிகையின் பூரண அருளும் கிட்டும்.

    தீபம் ஏற்ற வேண்டிய திசைகள்!

    கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்ற, துன்பங்கள் நீங்கும்.

    மேற்கு திசை நோக்கி விளக்கேற்ற கடன் தொல்லை நீங்கும், பகை நீங்கும்.

    வடக்கு திசை நோக்கி விளக்கேற்ற திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கும். திரவியம் கிட்டும். சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

    தீபம் ஏற்றக் கூடாத திசை!

    தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.

    விளக்கிற்கு பொட்டு இடுதல்!

    விளக்கிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் கீழ் இரண்டும், அதற்கு அடியில் இரண்டுமாக, ஆக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும் அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தீ என்கிற சூரியன், சந்திரன், அக்கினி என்று கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுகள் கைகள் எனவும், கீழே இடும் பொட்டு இரு திருவடிகளாகவும் கருதி, இந்த எட்டு இடங்களிலும் பொட்டிட்டு வழிபட வேண்டும்.

    விளக்கிற்கு ஏற்ற ஆசனம்!

    விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.

    விளக்கை அலங்கரிக்கும் முறை!

    ஐந்து முகக் குத்து விளக்கைப் பளிச்சென்று துலக்கி ஈரம் போகத் துடைத்து, ஐந்து முகங்களிலும் குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும். பிறகு பீடத்திற்கும் குங்குமம், மஞ்சள், சந்தனப் பொட்டு வைக்க வேண்டும். பிறகு நல்ல வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.

    குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் பூச்சூட்டும் போது ஈன்ற தாயை, பிறந்த வீட்டை, அவர்கள் நலனை வேண்டி பூச்சூட வேண்டும். நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது, கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டை நினைத்து, இல்லறம் நல்லறமாய் இருக்க பிரார்த்தனை செய்து பூச்சூட வேண்டும்.

    உச்சிப் பகுதியில் பூச்சூட்டும் போது, தீப லட்சுமியே! உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டி பூச்சூட வேண்டும்.

    இவ்வாறு திருவிளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    தீபம் ஏற்றும் நேரம்!

    தினமும் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்ற சர்வமங்கல யோகத்தை தரும்.

    காலையில் வாசலில் சாணம் தெளித்து, கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

    மாலை 6 மணி அளவில் வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை தேடி வரும்.

    மாலையில், விளக்கேற்றும் போது வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

    காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லப்புறக்கதவை சாத்திவிட வேண்டும். கொல்லைப்புற கதவு இல்லாதவர்கள் பின்பக்கமுள்ள சன்னல் கதவை சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கேற்றும் போது விளக்கிற்குப் பால், கல்கண்டு நிவேதம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    விளக்குப் பாடல்!

    வீட்டில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட பாடலை ஆறு முறை கூறி, ஒவ்வொரு முறையும் விளக்கிற்கு பூ போட்டு, பூமியைத் தொட்டு வணங்கி வழிபட எல்லா சுகங்களும் கிட்டும்!

    தீப ஜோதியானவளே நமஸ்காரம்

    திருவாகி வந்தவளே நமஸ்காரம்

    ஆபத்பாந்தவியே நமஸ்காரம்

    அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்

    • சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது.
    • அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.

    மூலவர் - சங்கரலிங்கம்

    அம்மன் - கோமதி அம்மன்

    தல விருட்சம் - புன்னை

    தீர்த்தம் - நாகசுனை தீர்த்தம்

    ஊர் - சங்கரன்கோவில்

    மாவட்டம் - திருநெல்வேலி

    அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பாள் பார்வதி, "கோமதி" என்னும் பெயரில் பூலோகம் வந்து தவமிருந்த இடமே சங்கரன்கோவில். சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது.

    தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு காட்ட, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். அவளுடன் தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து வணங்கி வந்தனர். பசுவை ''கோ" என்பர். தவக்காலத்தில் அம்பாளின் முகம் "மதி" போல் பிரகாசித்தது. எனவே அவள் "கோமதி" எனப்பட்டாள். "ஆவுடையம்மாள்" என்றும் இவளை அழைத்தனர்.

    "ஆ" என்றால் "பசு". "பசுக்களை உடையவள்" என்று பொருள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். திங்கள் கிழமைகளில் கோமதி அம்பாளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிப்பர்.

    திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுவர். அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ''ஆக்ஞா சக்ரம்" என்கின்றனர்.

    கோவில் அமைப்பு...

    சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

    திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும்.

    மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.

    இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இதன் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள் ஆடித்தபசு விழா, 12 நாட்கள் நடக்கும்.

    அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார்.

    கோவில் நடை திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் - 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் - இரவு 9 மணி வரை. 

    • நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது.
    • நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை வந்தால், மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது. உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்ந்தாலும் பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது. எனவே மறக்காமல் நடராஜர் சன்னதியிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    • திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர்.
    • அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கேடிக வாகனங்களில் திரிசூலத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஆதி தம்பதியர்களுக்கு நடந்த சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து ஜல விநாயகர் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் பிரதான அர்ச்சகர்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். அப்போது உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வசந்த உற்சவத்தை நடத்தினர்.

    மேலும் கோவில் வளாகத்தில் உள்ள திருமஞ்சன கோபுரம் அருகில் சூரிய புஷ்கரணியில் இருந்து புனித நீரை எடுத்து திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர். அப்போது கோவிலின் பிரதான அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இரவு சிம்மாசனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவராத்திரி விழாவில் நடந்த குல தெய்வ வழிபாட்டில் அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர்.
    • இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் ஆண்டி முனீசுவரர் கோவில் வீட்டில் சிவராத்திரியின் 3-ம் நாளில் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். ஆண்டி முனீசுவரர் கோவிலில் பக்தர்கள் தட்ட பயறு, மொச்சை, சுண்டல், பச்சரிசி, தேங்காய், பழம், அவல், மாவிளக்கு உள்ளிட்டவைகள் வேகவைத்து சாமிக்கு படையலிட்டனர். மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களான சின்ன கருப்பர், வெள்ளாளங்கருப்பர், முனீசுவரர், சன்னாசி உள்ளிட்ட சாமியாடிகளின் சாமியாட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கருங்காலி கம்பு, சாட்டை எடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பெண்கள் குலவையிட சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறினர்.இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து அருள்வாக்கு கேட்டு சென்றனர். பின்பு அவித்த பயறு வகைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. பிறகு கோவில் வீட்டு வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
    • இன்று சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்த அவர்களை, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு ஆகியோர் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    ஊர்வலம் தொடங்கும் முன் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள தேவாங்குல மண்டபத்தில் அர்ச்சகர்கள் ஏ.வி.தர்மாரெட்டிக்கு தலைப்பாகை கட்டி, தலையில் ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரங்களை வைத்தனர். ஊர்வலமாக சென்ற அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர். அவர்களுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

    • சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர்.
    • நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது.

    இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க பெரிய தேரில் கங்காபவானி சமேத சோமசுந்தரமூர்த்தியும் சிறிய தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளினர்.

    தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில்காலை 11.30 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேர்கள் பவனி வந்தன. தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா, ஜெய் ஜெய் காளி ஜெய் பத்ர காளி எனப் பக்தி கோஷம் எழுப்பினர்.

    தேர்களுக்கு முன்னால் கேரள செண்டைமேளம், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர். பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டமும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    தேரோட்டத்தின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் உப்பு, மிளகினை தேர்கள் மீது வீசி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நிறைவாக இரவு நிகழ்ச்சியாக 8 மணியளவில் நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தேரில் எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ×