search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Kalahasti Temple"

    • கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் புனிதம் கெடுகிறது.
    • சிலர் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு கூறியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துத் தரப்பு பக்தர்களும் சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் தடையை மீறி ஒருசிலர் செல்போனை கோவிலுக்குள் எடுத்துச் செல்கின்றனர். கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் புனிதம் கெடுகிறது. சிலர் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர். இது, தகாத செயலாகும். கோவிலின் புனிதத்தை காக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், பக்தர்களும் கோவில் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நகலை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
    • அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் காலத்தில் குரு தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    இந்த வருடம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதையொட்டி வருகிற 23-ந்தேதி உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.

    இந்த அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 13-ந்தேதி பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. 13-வது நாளான நேற்று முன்தினம் இரவு ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு ஏகாந்த சேவை நடந்தது.

    முன்னதாக உற்சவமூர்த்திகளை சிறிய பல்லக்குகளில் வைத்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் இருந்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

    கோவிலின் நடை சாத்தும் நேரத்தில் இரவு 9.30 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் உற்சவரை பல்லக்கில் வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உற்சவரை அதே பல்லக்கில் வைத்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரம் அருகில் கொண்டு வந்தனர்.

    அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊஞ்சலில் (படுக்கை) சாமி-அம்பாளை வைத்து தீப, தூப நெய்வேத்தியங்கள் சமர்பித்து வேத மந்திரங்கள் முழங்க கதவுகள் சாத்தப்பட்டதும் ஏகாந்த சேவை நடந்தது.

    இந்தநிலையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது. வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா பூஜை முறைகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள், வேத பண்டிதர்கள் யாரேனும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.

    கங்காதேவி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாா், விநாயகர், வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர், பக்த கண்ணப்பர், திரிசூலம் மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவர்களுக்கு வேதப் பண்டிதர்கள் பல்வேறு சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்து தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்.

    முன்னதாக அர்ச்சகர்கள் கலசம் ஏற்பாடு செய்து யாகம் வளர்த்தனர். அதைத்தொடர்ந்து அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    • திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர்.
    • அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கேடிக வாகனங்களில் திரிசூலத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஆதி தம்பதியர்களுக்கு நடந்த சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து ஜல விநாயகர் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் பிரதான அர்ச்சகர்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். அப்போது உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வசந்த உற்சவத்தை நடத்தினர்.

    மேலும் கோவில் வளாகத்தில் உள்ள திருமஞ்சன கோபுரம் அருகில் சூரிய புஷ்கரணியில் இருந்து புனித நீரை எடுத்து திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர். அப்போது கோவிலின் பிரதான அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இரவு சிம்மாசனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கைலாசகிரி மலையை அடைந்ததும் அங்கு சிறப்புப்பூஜைகள் நடந்தது.
    • உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கைலாசகிரி மலைக்கு ஊர்வலமாக கிரிவலம் ெசன்றனர்.

    திருக்கல்யாண உற்சவத்துக்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சிவன்-பார்வதி கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடப்பதாக ஐதீகம்.

    முன்னதாக கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் வெள்ளி அம்பாரிகளில் சாமி, அம்பாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கிரிவலம் புறப்பட்டது.

    கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக தொடங்கி கிருஷ்ணாரெட்டி மண்டபம், பேரிவாரி மண்டபம், வெலம மண்டபம் வழியாக 23 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர். வழிநெடுகிலும் ஆங்காங்ேக சாமி-அம்பாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து கிரிவலத்தைத் தொடர்ந்தனர். ஊர்வலத்துக்கு முன்னால் கலைஞர்கள் கோலாட்டம் ஆடினா். கேரள ெசண்டை மேளம் இசைக்கப்பட்டது. பக்தர்கள் சிவன், பார்வதி போல் வேடமிட்டு சென்றனர். பலர் 'அகோரி' வேடமணிந்து பங்கேற்றனர்.

    சாமி-அம்பாள் கைலாசகிரி மலையை அடைந்ததும் அங்கு சிறப்புப்பூஜைகள் நடந்தது. அங்கிருந்து சாமி-அம்பாள் புறப்பட்டு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலை அடைந்தனர். கிரிவலத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி 80-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கைலாசகிரி மலைக்கு கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    • இன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கிரிவலம் செல்கிறார்கள்.
    • இரவு 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதிஉலா வருகின்றனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் சூட்சமமாக வந்து பங்கேற்று புதுமணத் தம்பதியர் மீது அட்சதை தூவி ஆசிர்வதித்ததாகப் பக்தர்களின் நம்பிக்ைக.

    அதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் புதுமண தம்பதியர் அலங்காரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிைக தாயாரும் ருத்ராட்ச அம்பாரி வாகனங்களில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் நடராஜர் (சபாபதி) திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் பங்ேகற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 10-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலம் முடிந்ததும் இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    • சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தினர்.
    • நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை அதிகாரநந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் அதிகார நந்தி வாகனத்தில் கங்கா பவானி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தினர். வாகனத்துக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள், செண்டைமேளம் இசைக்கப்பட்டது. வாகன ஊர்வலம் சன்னதி வீதியில் தொடங்கி நேரு வீதி, நகர வீதி வழியாக சென்று பஜார் வீதி, கோவில் வரை நடந்தது. நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு நகரி வீதியில் உள்ள கோவில் திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தனர்.

    • அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
    • இன்று சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்த அவர்களை, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு ஆகியோர் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    ஊர்வலம் தொடங்கும் முன் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள தேவாங்குல மண்டபத்தில் அர்ச்சகர்கள் ஏ.வி.தர்மாரெட்டிக்கு தலைப்பாகை கட்டி, தலையில் ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரங்களை வைத்தனர். ஊர்வலமாக சென்ற அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர். அவர்களுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

    • சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர்.
    • நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது.

    இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க பெரிய தேரில் கங்காபவானி சமேத சோமசுந்தரமூர்த்தியும் சிறிய தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளினர்.

    தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில்காலை 11.30 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேர்கள் பவனி வந்தன. தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா, ஜெய் ஜெய் காளி ஜெய் பத்ர காளி எனப் பக்தி கோஷம் எழுப்பினர்.

    தேர்களுக்கு முன்னால் கேரள செண்டைமேளம், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர். பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டமும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    தேரோட்டத்தின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் உப்பு, மிளகினை தேர்கள் மீது வீசி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நிறைவாக இரவு நிகழ்ச்சியாக 8 மணியளவில் நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தேரில் எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    VLR0418022023: ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண

    ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவையொட்டி தினமும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுவதால் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆந்திர மாநில அரசு சார்பில் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, மதுசூதன் ரெட்டி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டுவந்து காளகஸ்தி கோவில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

    ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • லிங்கோத்பவ தரிசனத்தை எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனம் செய்யலாம்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த ஆண்டு மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அனைத்துப் பிரபலங்களுக்கும் சாதாரணப் பக்தர்களுக்கும் என அனைவருக்கும் 'மகா லகு' தரிசனம் (சற்று தூரத்தில் நின்று வழிபடுவது) அளிக்கப்படும். குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து வரிசையில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    குறிப்பாக, லிங்கோத்பவ தரிசனத்தைப் பக்தர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனத்தில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் மனதை கவரும் வகையில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி அன்று மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள 3-வது கோபுரமான திருமஞ்சன கோபுர வழி அடைக்கப்பட உள்ளது. மற்ற 3 கோபுர வாயில்கள் வழியாக வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனம் செய்ததும் பக்தர்கள் முருத்யுஞ்சய சாமி சன்னதி அருகில் இருந்து வெளியே வரலாம்.

    இல்லையேல், கோவிலின் மேல் பகுதியில் இருந்தும் வரலாம் அல்லது நுழைவு வாயில் பகுதியிலேயே ஒரு பகுதியில் இருந்தும் வெளி வரலாம்.

    பக்தர்களுக்கு குளியல் அறைகள், கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நிரந்தரமாக 80 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி அன்று 180 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்க 1½ லட்சம் லட்டுகள், வடைகள், புளியோதரை, ஜிலேபி ஆகியவை தயாரித்து வழங்கப்படும். சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச, யாளி வாகன வீதிஉலா நடந்தது.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க உற்சவர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காதேவியுடன் ஹம்ச வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

    வீதிஉலாவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருள்கிறார்கள்.

    ×