search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கேதாரகவுரி விரத பூஜை நிறுத்தம்
    X

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கேதாரகவுரி விரத பூஜை நிறுத்தம்

    • தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம்.
    • 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

    மறுநாள் 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது. எனவே கோவில் சுவாமிநாத குருக்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் அறிவுரையின் பேரில் கோவிலில் நடக்க இருந்த கேதார கவுரி விரத பூஜை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், எனக் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×