search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீகாளஹஸ்தி
    X
    ஸ்ரீகாளஹஸ்தி

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை, குங்கும லட்சார்ச்சனை இன்று தொடங்குகிறது

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு (உற்சவ மூர்த்திகளுக்கு) குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது. அதையொட்டி தினமும் காலை, முதல் கால அபிஷேகம், 2-வது கால அபிஷேகம், 3-வது கால அபிஷேகத்துக்கு பின்னர் மற்றும் மாலை 4-வது கால பிரதோஷ கால அபிஷேகத்துக்கு பின்னர் வில்வார்ச்சனை நடக்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 3-ந்தேதி காலை அஷ்டோத்திர கலசாபிஷேகம், மாலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வெள்ளி அம்பாரிகளில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×