search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை"

    • இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.
    • மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை சேர்ந்த 60 வயதான பெண் ணுக்கு சூலகப் புற்றுநோய் (ஒவேரியன் கேன்சர்) இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில், திருவனந்த புரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

    வழக்கமான கீமோதெரபி செயல்முறை பயனேது மின்றி தோல்வியடைந்திருந்த நிலையில் சூலக புற்று நோய் முதிர்ச்சியடைந்த நிலையில் மூதாட்டிக்கு இருந்தது. எனவே, அவருக்கு சிகிச்சை யளிக்க கிம்ஸ் ஹெல்த்தின் அறுவை சிகிச்சை புற்றுநோ யியல் துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் ஒருங்கி ணைப்பாளரான டாக்டர் ஜெயானந்த் சுனில் தலைமை யின் கீழ் மருத்துவர்கள் குழு, பி.ஐ.பி.ஏ.சி. (பிரஷ ரைஸ்டு இன்ட்ராபெரிட் டோனியல் ஏரோசோ லைஸ்டு கீமோதெரபி) மருத்துவ செயல்முறையை தேர்வு செய்தது.

    சுவாச சிரமம் இருக்கும் போது நுரையீரல்களுக்குள் எப்படி நேரடியாக மருந்துப் பொருளை இன்ஹேலர்கள் உட்செலுத்துகின்றனவோ அதே போன்ற செயல் முறையே இது. இந்த மருத் துவமுறை அதிக பயனளிக்கும் திறன் கொண்டதா கவும், கூடுதல் பாதுகாப்பானதாகவும் செயல்படுகிறது. அத்துடன், வழக்கமான கீமோதெரபி சிகிச்சை முறையில் நிகழும் பக்க விளைவுகளை விட, இதில் மிக குறைவான பக்க விளைவுகளே ஏற்படக்கூடும் என்பது இதன் சிறப்பாகும்.

    மேலும் வயிறு, கருப்பை, பெருங்குடல் மற்றும் சூலக உறுப்புகளில் உருவாகியிருக்கும் முதிர்ச்சியடைந்த புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு மிகச்சிறிய துளை வழியாக அழுத்தப்பட்டிருக்கும் ஏரோசால் (மருந்தை உள்ள டக்கிய கூழ்மம்) வடிவில் கீமோதெரபியை இந்த மருத்துவ முறை வழங்கு கிறது. இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.

    இந்த புதுமையான மருத் துவ செயல்முறை வெற்றியடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பிறகு சிஸ்டமிக் கீமோ தெரபியோடு சேர்த்து மருத்துவ செயல்முறையின் அதிக அமர்வுகளில் பங்கேற்குமாறு இவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    புத்தாக்கமான பி.ஐ.பி. ஏ.சி. மருத்துவ செயல் முறையை மேற்கொள்வ தற்கு அங்கீகாரம் அளிக்கப் பட்ட மற்றும் இதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற ஒரே மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயானந்த் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள ஐ.எஸ்.எஸ்.பி.பி. மருத்துவமனையில் இந்த செயல் முறைக்கான நிபுணத்துவ பயிற்சியையும் டாக்டர் ஜெயானந்த் பெற்றிருக்கிறார்.

    • நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.
    • காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சின்ன தானங்குப்பம் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 28). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வருகின்றார்.

    நேற்று மணிவண்ணன் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
    • நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது 60 )கூலி தொழிலாளி.இவர் கடந்த 20-ந் தேதி சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சின்ன சேலம் சென்று மீண்டும் நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ரைஸ் மில் அருகே சென்று கொண்டிருந்த போது இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி யது. இதில் தங்கராசு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிப்பட்டு கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கராசு பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது குத்புதீன் மகன் முகமது வசிப் (வயது 14).

    இவர் காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது முகமதுவசிப்பை ஏதோ விஷப்பூச்சி கடித்து அலறி உள்ளார்.

    உடன் முகமதுவசிப் பெற்றோர் அவர் தூங்கி இடத்தை சுற்றி பார்த்துள்ளனர்.

    எதுவும் கண்ணில் படாததால் திரும்ப தூங்க சொல்லி உள்ளனர்.காலை முகமதுவசிப் சோர்வாகவும்,மயங்கி விழுந்துள்ளார்.

    உடன் முகமதுவசிப் அவரது பெற்றோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முகமதுவசிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி(30) செங்கல் சூளைதொழிலாளி.திருமணமானவர்.இவ ருக்கு மனைவி, 2மகள்கள் உள்ள னர். முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு 8 மணிக்கு விஷம்குடித்தார். ஆபத்தான நிலையில் உடனடியாக முரளியை முண்டியம்பாக் கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலை யில் நேற்று இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
    • மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட் டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வாரங்க ளுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென் றுள்ளார். அப்போது அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிற்றில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென் றுள்ளார். அங்கு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அப்போது டாக்டர் உடனடியாக ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து பார்த்து விடுவோம் என கூறி அந்த மருத்துவ மனையிலே ஸ்கேன் எடுக்க கூறியுள்ளார்.

    மேலும் டாக்டர் பழைய ரிப்போர்ட்டுகளை அனுப்பு வதற்கு மொபைல் நம்ப ரையும் கொடுத்துள்ளார். இவரும் அந்த பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள் ளார். மருத்துவர் உங்களது வயிற்றில் இருக் கும் கட்டி எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டு மென கூறி உள்ளார். அதற்கு பாத்திமாவும் தயா ராகி உள்ளார்.

    அந்த மருத்துவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் காலதாமதம் ஆகும் எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் நான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு பாத்திமாவும் எனக்கு அதற்கான வசதி இல்லை எனவும், அதற்கான அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் அது உங்களது இஷ்டம், இங்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால் காலதா மதமாகும் என கூறியுள்ளார்.

    நான் பணிபுரியும் மருத் துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் உடனடி யாக செய்யலாம் எனவும், திரும்பவும் தெரிவித்துள் ளார். பின்னர் பாத்திமா மருத்துவரிடம் எனக்கு அதிக வலி எடுப்பதாகவும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    அப்போது அறுவை சிகிச்சை மருத்துவர் கடந்த வாரம் குழித்துறை அரசு மருத்துவமனையில் அட்மிஷன் ஆகும்படி கூறி யுள்ளார். உடனடியாக மருத்துவர் கூறிய தேதியில் பாத்திமா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளி யாக சேர்ந்துள்ளார்.

    மருத்துவர் நாளை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய தேதியில் அறுவை சிகிச்சை செய்ய வில்லை. இது குறித்து பாத்திமா கேட்டவுடன் இது அரசு ஆஸ்பத்திரி உடனே செய்ய முடியாது. நாளை செய்யலாம், அடுத்த நாள் செய்யலாம், அதற்கு அடுத்த நாள் பண்ணலாம் என காலம் தாழ்த்திக்கொண்டே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு வலி அதிகமாகி உள்ளது.

    இதனால் துடிதுடித்து போன பாத்திமா அழுது புலம்பி உள்ளார். இதை பார்த்த மருத்துவர் நீங்கள் வீட்டுக்குச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஏன் என கேட்டதற்கு இங்கு நிறைய நோயாளிகள் இருக் கிறார்கள் நீங்கள் சென்று விடுங்கள் கூறியுள்ளார். இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் அவர் வலியோடு வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவரது வீடியோ பதிவை பார்ப்பவர்களுக்கு மனதில் வேதனையை ஏற்ப டுத்துகிறது. ஏழைகள் பயன்பட வைத்திருக்கும் அரசு மருத்துவமனை இவ் வாறான மருத்துவர்களின் பிடியில் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது. இவ்வா றான அநியாயங்களை தட்டி கேட்டால், மருத்துவர்கள் தட்டிக்கேட்பவர் மீது, மருத்துவர்களை தாக்கி விட்டதாக கூறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து அவர்களை சிறை யில் தள்ளி விடுகின்றனர்.

    இதனால் யாரும் தட்டிக் கேட்பதும் இல்லை, தமிழக மருத்துவத்துறையோ, அரசோ நடவடிக்கை எடுப் பதும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்ப டுத்தி வருகிறது. இவ்வாறான மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.

    • நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார்.
    • சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் . இவரது மனைவி ஜெய ரஞ்சனி (வயது 31). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது திடீரென கட்டு விரியன் பாம்பு கடித்தது.

    இதில் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார்.
    • குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மதுரையை சேர்ந்த குமார் (வயது50) என்பவர், பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளிலிருந்து எடுத்து விற்று, அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 23-ந் தேதி, குமார், திரு.பட்டினம் கீழவாஞ்சூர் சாலையில் குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, காரைக்கால், நாகை சாலையில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாகக சென்ற மோட்டார் சைக்கிள், குமார் மீது மோதியது. இதில், குமார் பலத்த காயமுற்றார். தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகம் ஆம்புலன்ஸ் மூலம் குமார் காரைக்கால் அரசு ஆஸ்பதிரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, சாராயக்கடையில் வேலை செய்யும் தங்கபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது70) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யம்பெருமாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது.
    • அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளி மற்றும் அவரது உறவினரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது. இதனை செந்தில் (38) என்பவர் ஓட்டி சென்றார். இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரைக்கால் அருகே மேலகாசாக்குடி சாலை வளைவில் ஆம்புலன்ஸை திருப்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது. மது போதையில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த நோயாளியையும், அவரது உறவினரையும் மீட்டு, வேறொரு வாகனத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காரகை்கால் நகர போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் செந்திலை தேடி வருகின்றனர்.

    • லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி போக்குவரத்து கழக பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் திருநாகேஸ்வரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன் பக்கம் நசுங்கியது.

    லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் காரைக்கால் சேத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38). கண்டக்டர் புதுச்சேரி திருப்புவனம் பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (47), கூத்தகுடியை சேர்ந்த சிவசக்தி (17), காரைக்கால் கணபதி நகரை சேர்ந்த சிராஜ் நிஷா (58), விருதுநகர் சொக்கநாதபுத்தூர் பகுதியை சேர்ந்த சித்ரா (30), குடவாசலை சேர்ந்த ரவி (57) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் ராஜசேகர் (வயது 32). இவர் கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது தந்தை சிகாமணி இவருக்கு டீ வாங்கி வருவதற்காக எதிரே உள்ள டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்தார்.

    திரும்பி வந்து பார்த்தபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகனை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜசேகரை தேடி வருகிறார்.

    ×