என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழித்துறை அரசு மருத்துவமனையில் ஆபரேசனுக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு
- வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
- மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட் டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வாரங்க ளுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென் றுள்ளார். அப்போது அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிற்றில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென் றுள்ளார். அங்கு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அப்போது டாக்டர் உடனடியாக ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து பார்த்து விடுவோம் என கூறி அந்த மருத்துவ மனையிலே ஸ்கேன் எடுக்க கூறியுள்ளார்.
மேலும் டாக்டர் பழைய ரிப்போர்ட்டுகளை அனுப்பு வதற்கு மொபைல் நம்ப ரையும் கொடுத்துள்ளார். இவரும் அந்த பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள் ளார். மருத்துவர் உங்களது வயிற்றில் இருக் கும் கட்டி எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டு மென கூறி உள்ளார். அதற்கு பாத்திமாவும் தயா ராகி உள்ளார்.
அந்த மருத்துவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் காலதாமதம் ஆகும் எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் நான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு பாத்திமாவும் எனக்கு அதற்கான வசதி இல்லை எனவும், அதற்கான அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் அது உங்களது இஷ்டம், இங்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால் காலதா மதமாகும் என கூறியுள்ளார்.
நான் பணிபுரியும் மருத் துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் உடனடி யாக செய்யலாம் எனவும், திரும்பவும் தெரிவித்துள் ளார். பின்னர் பாத்திமா மருத்துவரிடம் எனக்கு அதிக வலி எடுப்பதாகவும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போது அறுவை சிகிச்சை மருத்துவர் கடந்த வாரம் குழித்துறை அரசு மருத்துவமனையில் அட்மிஷன் ஆகும்படி கூறி யுள்ளார். உடனடியாக மருத்துவர் கூறிய தேதியில் பாத்திமா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளி யாக சேர்ந்துள்ளார்.
மருத்துவர் நாளை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய தேதியில் அறுவை சிகிச்சை செய்ய வில்லை. இது குறித்து பாத்திமா கேட்டவுடன் இது அரசு ஆஸ்பத்திரி உடனே செய்ய முடியாது. நாளை செய்யலாம், அடுத்த நாள் செய்யலாம், அதற்கு அடுத்த நாள் பண்ணலாம் என காலம் தாழ்த்திக்கொண்டே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு வலி அதிகமாகி உள்ளது.
இதனால் துடிதுடித்து போன பாத்திமா அழுது புலம்பி உள்ளார். இதை பார்த்த மருத்துவர் நீங்கள் வீட்டுக்குச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஏன் என கேட்டதற்கு இங்கு நிறைய நோயாளிகள் இருக் கிறார்கள் நீங்கள் சென்று விடுங்கள் கூறியுள்ளார். இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் அவர் வலியோடு வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவரது வீடியோ பதிவை பார்ப்பவர்களுக்கு மனதில் வேதனையை ஏற்ப டுத்துகிறது. ஏழைகள் பயன்பட வைத்திருக்கும் அரசு மருத்துவமனை இவ் வாறான மருத்துவர்களின் பிடியில் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது. இவ்வா றான அநியாயங்களை தட்டி கேட்டால், மருத்துவர்கள் தட்டிக்கேட்பவர் மீது, மருத்துவர்களை தாக்கி விட்டதாக கூறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து அவர்களை சிறை யில் தள்ளி விடுகின்றனர்.
இதனால் யாரும் தட்டிக் கேட்பதும் இல்லை, தமிழக மருத்துவத்துறையோ, அரசோ நடவடிக்கை எடுப் பதும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்ப டுத்தி வருகிறது. இவ்வாறான மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்