search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரணம்"

    • சங்கராபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது70) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யம்பெருமாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இன்று காலை வீட்டில் தனியாக இருந்த செல்வ குமாரி புடவை துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்: 

    பண்ருட்டி அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளி கம்பட்டு காலனியை சேர்ந்தவர் முத்து கூலி தொழிலாளி, இவரது மனைவி செல்வகுமாரி (21) இவர்களுக்கு திருமணம் நடந்து ஓராண்டு ஆகிறது. தற்போது செல்வகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இன்று காலை வீட்டில் தனியாக இருந்த செல்வ குமாரி புடவை துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். செல்வகுமாரி தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (85), பெங்களூரு விமான நிலையத்தில் அதிக ாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி வசந்தா (60) என்பவருடன் வசித்து வந்தார்.

    சாப்ட் வேர் என்ஜினீயர்

    இவர்களது மகன் திலக் (38), சாப்ட்வேர் என்ஜினீ யரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனாவுக்கு பின்னர் வீட்டில் இருந்த படியே பணிபுரிந்து வந்தார். மேலும்

    ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.இவரது மனைவி மகேஷ்வரி (33), இவர்களது மகன் சாய் கிரிஷாந்த் (6), இந்த சிறுவனுக்கு வாய்பேச முடியாது. இந்த நிலையில் பெங்க

    ளூருவில் உள்ள சகோதரர்

    சந்துருவுக்கு வாட்ஸ் அப் மூலம் குழந்தையை குணப்படுத்த முடியாததா லும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக திலக் தகவல் அனுப்பி இருந்தார். இதையடுத்து நேற்று காலை போலீசார் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    4 பேர் சாவு

    அப் போது திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். வசந்தா மட்டும் உயிருக்கு போராடிய படி கிடந்தார்.

    தொடர் சிகிச்சை

    இதனை பார்த்த போலீசார் வசந்தாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை மற்றும் தொழில் நஷ்டத்தால் திலக் 4 பேருக்கும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திைர கொடுத்து கொலை செய்து

    விட்டு தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2 ஆயிரத்து 709 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
    • அடுத்து வரும் பிளஸ்-2 துணை தேர்வை எழுத மாணவர்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 324 பள்ளிகளை சேர்ந்த 17,500 மாணவர்கள், 19,661 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 161 பேர் பிளஸ்-2 தேர்வினை எழுதினர். இவர்களில் மாணவர்கள் 15,674 பேர், மாணவிகள் 18,778 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    13 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்பட ெமாத்தம் 105 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேசமயம், பிளஸ்-2 தேர்வு எழுதிய 2,709 பேர் தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    தேர்வில் தோல்விக்கு மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அன்றாடம் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை வீட்டில் வைத்து படிக்காமல் இருப்பது, படிப்பில் கவனத்தை செலுத்தாமல் அதிகமாக விடுமுறை எடுப்பது, பள்ளியில் கட் அடிப்பது, செல்போனில் உள்ள ஆன்லைன் விளையாட்டில் கவனத்தை செலுத்துவது, உடல் நல குறைவு, படிக்காமல் அஜாக்கிரதையாக செயல்படுவது என பல்வேறு காரணங்கள் உள்ளன.

    எனவே இனிவரும் காலங்களில் படிப்பில் மாணவர்கள் தங்களது கவனத்தை செலுத்தினால் தோல்வியை தவிர்க்க முடியும். ஆகவே தோல்வி அடைந்த மாணவர்கள், நம்பிக்கை தளராமல் அடுத்து வரும் துணை தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று விடலாம். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்வி தொடர எளிதாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×