search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reason"

    • இன்று காலை வீட்டில் தனியாக இருந்த செல்வ குமாரி புடவை துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்: 

    பண்ருட்டி அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளி கம்பட்டு காலனியை சேர்ந்தவர் முத்து கூலி தொழிலாளி, இவரது மனைவி செல்வகுமாரி (21) இவர்களுக்கு திருமணம் நடந்து ஓராண்டு ஆகிறது. தற்போது செல்வகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இன்று காலை வீட்டில் தனியாக இருந்த செல்வ குமாரி புடவை துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். செல்வகுமாரி தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×