search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்க"

    • திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (85), பெங்களூரு விமான நிலையத்தில் அதிக ாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி வசந்தா (60) என்பவருடன் வசித்து வந்தார்.

    சாப்ட் வேர் என்ஜினீயர்

    இவர்களது மகன் திலக் (38), சாப்ட்வேர் என்ஜினீ யரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனாவுக்கு பின்னர் வீட்டில் இருந்த படியே பணிபுரிந்து வந்தார். மேலும்

    ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.இவரது மனைவி மகேஷ்வரி (33), இவர்களது மகன் சாய் கிரிஷாந்த் (6), இந்த சிறுவனுக்கு வாய்பேச முடியாது. இந்த நிலையில் பெங்க

    ளூருவில் உள்ள சகோதரர்

    சந்துருவுக்கு வாட்ஸ் அப் மூலம் குழந்தையை குணப்படுத்த முடியாததா லும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக திலக் தகவல் அனுப்பி இருந்தார். இதையடுத்து நேற்று காலை போலீசார் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    4 பேர் சாவு

    அப் போது திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். வசந்தா மட்டும் உயிருக்கு போராடிய படி கிடந்தார்.

    தொடர் சிகிச்சை

    இதனை பார்த்த போலீசார் வசந்தாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை மற்றும் தொழில் நஷ்டத்தால் திலக் 4 பேருக்கும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திைர கொடுத்து கொலை செய்து

    விட்டு தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×