search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுப்பன்றி"

    • நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.
    • காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சின்ன தானங்குப்பம் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 28). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வருகின்றார்.

    நேற்று மணிவண்ணன் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • காட்டுப் பன்றிக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
    • தற்போது காட்டுப்பன்றி இறந்துகிடந்த ஜானகிகாடு பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த பன்றி பண்ணைகளும் இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து அடுத்தடுத்து 2பேர் பலியான சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தொற்றுபாதிப்பு கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் ஜானகி காடு பகுதியில் ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்தது. அந்த பன்றியை மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    அதில் அந்த காட்டுப் பன்றிக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் உஷாரானார்கள். ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவினால், தொற்று பாதித்த பகுதிக்கு ஒருகிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பன்றிகளை அழிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

    ஆனால் தற்போது காட்டுப்பன்றி இறந்துகிடந்த ஜானகிகாடு பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த பன்றி பண்ணைகளும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வேறு பன்றிகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

    அதேநேரத்தில் கோழிக் கோடு மாவட்டதில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. மேலும் பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவாது என்று கூறியுள்ள சுகாதாரத்துறை, அதுபற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.

    • புளியங்குடி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுப்ரமணியன் காட்டு பன்றியை வேட்டையாடியது விசாரணையில் தெரியவந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் மகேந்திரன், குமார் தலைமையில் வனத்துறையினர் முருகேசன், அஜித் ராஜ், மணிகண்டன், தாசன் ஆசீர்வாதம், மாரியப்பன், திருமலை, சன்னாசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில், அவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், அவர் கொய்யாப்பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு பன்றியை கொன்று வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வேட்டையில் ஈடுபட்ட சுப்ரமணியனுக்கு ரூ.40 ஆயிரம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.  

    • தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
    • பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார ங்களில், அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றி களால் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். வன எல்லை மட்டுமல்லாது, வெகு தொலைவிலுள்ள கிராம ங்களிலும் காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது.

    நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. எண்ணிக்கை அதிகரிப்பால், விவசாயி களும் காட்டுப்ப ன்றிகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விளைநிலங்க ளுக்கும், கிராம இணைப்பு ரோடுகளில் செல்லவும் விவசாயிகள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுகாவிலும் பல 100 சதுர கி.மீ., பரப்பளவில் காட்டுப்பன்றிகள் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- காட்டுப்பன்றிகளால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. வரப்பு பயிர்களை அழித்தல், விளைபொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்பு களை சேதப்படுத்துதல் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.வனத்து றையினர் இப்பிரச்சினைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிக்கி ன்றனர். பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.சமவெளிப்பகுதியில் மட்டும் தங்கி பெருகும் காட்டுப்ப ன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.இதற்கான கருத்துருவை வனத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளுக்கு முன் உடுமலை பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய சூழலில் அனைத்து விவசாயிகளும் ஒருங்கி ணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி, மேலக் கோட்டை, ஆலம்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள், மயில்கள் காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான்கள் குடிநீருக்காக அடிக்கடி கிராமங்களுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் விலங்குகள் ரோட்டை கடக்கும்போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.

    இதுதொடர்பாக வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே தனியார் நிறுவனத்தின் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 வயதுடைய காட்டுப்பன்றி இறந்து கிடந்தது.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் இறந்த கிடந்த காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உசிலம்பட்டி வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • விளைநிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள்.

    தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். இதுதவிர குறுகிய கால பயிர்களான கீரை வகைகள், பூக்கள், மக்காசோளம் உள்பட பல்வேறு வகையான பயிர்களையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

    தற்போது தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 120 நாள் பயிரான மக்காசோளம் தை மாதம் அறுவடை செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டமாக புகுந்து மக்காசோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பலமுறை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கூறினர்.

    இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுவதை தடுக்கும் விதமாக விளை நிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள். இதன் மூலம் காட்டுப்பன்றி தொல்லை சற்று குறையும் என எதிர்பார்க்கிறார்கள். 

    • காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் மழை பெய்தும் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டனூர், சீனியேந்தல், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், மறையூர், நரிக்குடி உள்பட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பிய காரணத்தினால் விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.

    தற்போது நெல் பரிச்சல் ஏற்படும் தருவாயில் உள்ளது. இந்த நேரத்தில் நரிக்குடி அருகே உள்ள சீனியேந்தல், கட்டனூர் காரியாபட்டி அருகே உள்ள டி.வேப்பங்குளம், எஸ்.கடமங்குளம், உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ளவிவசாய நிலங்களில் நெற்கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். காட்டுப்பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதுகுறித்து காவிரி, வைகை, கிருமால் நதி, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மச்சேசுவரன் கூறியதாவது:-

    நரிக்குடி பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு கண்மாயும் நிரம்பாத நிலையில் இருந்து வந்தது. கடந்த 2,3 வருடங்களாக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதற்கு பின்பு வயல் பகுதியில் சீமைகருவேல் மரங்கள் அடர்ந்திருந்ததை அப்புறப்படுத்தி நெல் நடவு செய்து உள்ளனர்.

    விவசாயிகள் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. காட்டுப் பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்ணதாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது
    • மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40), விவசாயி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுப்பன்றியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.

    மேலும் மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.

    ×