search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
    X

    காட்டுப்பன்றிகளால் சேதமடைந்துள்ள நெற்கதிர்கள்.

    நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

    • காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் மழை பெய்தும் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டனூர், சீனியேந்தல், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், மறையூர், நரிக்குடி உள்பட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பிய காரணத்தினால் விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.

    தற்போது நெல் பரிச்சல் ஏற்படும் தருவாயில் உள்ளது. இந்த நேரத்தில் நரிக்குடி அருகே உள்ள சீனியேந்தல், கட்டனூர் காரியாபட்டி அருகே உள்ள டி.வேப்பங்குளம், எஸ்.கடமங்குளம், உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ளவிவசாய நிலங்களில் நெற்கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். காட்டுப்பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதுகுறித்து காவிரி, வைகை, கிருமால் நதி, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மச்சேசுவரன் கூறியதாவது:-

    நரிக்குடி பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு கண்மாயும் நிரம்பாத நிலையில் இருந்து வந்தது. கடந்த 2,3 வருடங்களாக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதற்கு பின்பு வயல் பகுதியில் சீமைகருவேல் மரங்கள் அடர்ந்திருந்ததை அப்புறப்படுத்தி நெல் நடவு செய்து உள்ளனர்.

    விவசாயிகள் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. காட்டுப் பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×