search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூளை தொழிலாளி"

    • பண்ருட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி(30) செங்கல் சூளைதொழிலாளி.திருமணமானவர்.இவ ருக்கு மனைவி, 2மகள்கள் உள்ள னர். முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு 8 மணிக்கு விஷம்குடித்தார். ஆபத்தான நிலையில் உடனடியாக முரளியை முண்டியம்பாக் கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலை யில் நேற்று இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆறுமுகம் செங்கல் சூளை தொழிலாளி.
    • வேலைக்கு போகாமல் வீட்டிலேயே குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர், திடீர்குப்பம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). செங்கல் சூளை தொழிலாளி.திருமணமான இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டுக் கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்ல ப்பட்டார். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×