search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொப்பரை"

    • 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 50.37 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஏலம் நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 157 விவசாயிகள் தங்களுடைய 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 70 டன். காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி பகுதிகளைச் சோ்ந்த 11 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 79. கடந்த வார சராசரி விலை ரூ. 79.65. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 50.37லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
    • உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கொப்பரை சீசன் துவங்கியு ள்ளதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொப்பரை அனுப்ப ப்படுகின்றன.உடுமலை,பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசா யிகளிடம் கொப்பரை உற்பத்தி செய்ய உலர்களம் வசதி அதிகளவில் இல்லை. இதனால் 6 சதவீதம் ஈரப்பதத்துக்குள் இருக்கும் உலர் கொப்பரை (அரவை கொப்பரை) வாங்க காங்கேயம், வெள்ள கோவில், ஊத்துக்குளிக்கு விவசாயிகள் செல்கி ன்றனர். காங்கேயம் பகுதியில் கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கேரள மாநிலத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்துக்கு தேங்காய் வரத்து இல்லை. தமிழகத்தில் இருந்து தான் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.உலர் கொப்பரை இங்கு பற்றாக்குறையாக உள்ளதால் காங்கேயத்துக்கு செல்ல வேண்டியதுள்ளது.

    தற்போது மார்க்கெட்டில் உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை வி ற்பனை செய்யப்படுகிறது. அந்த விலைக்கு கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் கொள்முதல் மையங்களில் கிலோ 108.60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.தற்போது உலர் கொப்பரைக்கு தேவை அதிகரித்துள்ளதால் இதே விலை நீடிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை திறந்து விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
    • 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ள நிலையில் விவசாயிகள் கொப்பரை உற்பத்தி களங்கள் அமைத்து கொப்பரை உற்பத்தி செய்தும், தேங்காயை நேரடியாக விற்பனை செய்தும் வருகின்றனர்.மூன்று வட்டாரத்திலும் 300க்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் செயல்பட்ட நிலையில் விலை குறைந்ததால் பெரும்பாலான களங்கள் மூடப்பட்டும், தேங்காய்க்கு விலை இல்லாததால் தோப்புகளில் தேங்கியும் வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காதது, கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்து கிலோ 80 முதல் 85 வரை மட்டுமே விற்று வருவது, உப பொருட்களாக மட்டை, தொட்டி என அனைத்தும் விலை சரிவு ஏற்பட்டுள்ள தோடு நோய் தாக்குதல், இடு பொருட்கள் விலை உயர்வு என தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    அதிலும் வியாபாரிகள் சிண்டிகேட், உணவு எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களி னால் கொப்பரை விலை அபரிமிதமான சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் நேபட் நிறுவன த்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உடுமலை மற்றும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் இன்று முதல் செயல்படுகின்றன.

    உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 4 ஆயிரம் டன் சாதாரண கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடம், அரசு கொப்பரை கொள்முதல் மையத்தின் வாயிலாக 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளிடமிருந்து சாதாரண கொப்பரை கிலோ ரூ.108.60க்கும், பந்து கொப்பரை ரூ.117.50க்கும் கொள்முதல் செய்யப்படு கிறது.கொள்முதல் செய்ய ப்படும் கொப்பரைக்கு உரிய தொகையை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- உடுமலை, பெதப்ப ம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரசு கொப்பரை கொள்மு தல் மையங்கள் செயல்பட தொடங்கியு ள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்ப ரையை இம்மையங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இதற்கான பதிவு தொடங்கியு ள்ளது. போட்டோ, ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தகம் நகல், கூட்டுபட்டாவாக இருந்தால் வி.ஏ.ஓ., உரிமை சான்று இருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமாரை 94439 62834 என்ற எண்ணிலும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மாரியப்பனை 96772 24564 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரவை கொப்பரை அரசு கொள்முதல் மையங்கள் இன்று திறக்கப்பட்டது.
    • கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி வட்டார ங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. சமீப காலமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவு காரணமாக தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு கொள்முதல் கொப்பரை மையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை அரவை கொப்பரை ஒரு குவிண்டனுக்கு ரூ. 10 ஆயிரத்து 890 என்று குறைந்தபட்ச ஆதார விலையை அடிப்படையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அரவை கொப்பரைக்கான கொள்முதல் இலக்கு தலா 100 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது.கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்குரிய தொகையானது எவ்வித இடைத்தரகும் இன்றி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

    ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொப்பரையை விற்பனை செய்ய உள்ள விவசாயிகள் தங்களின் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களுடன் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சென்று இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்துள்ள இத்தருணத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கோடை வெயில் அதிகரித்துள்ளதால் கொப்பரை உற்பத்திக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
    • வெளிமாநில வியாபாரிகளுடன் போட்டி போட்டு தேங்காய்களை கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது.

    காங்கயம் :

    தற்போது தேங்காய் சீசன் துவங்கியுள்ளது. கோடை வெயில் அதிகரி த்துள்ளதால் கொப்பரை உற்பத்திக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ கொப்பரை 76 ரூபாய்க்கு விலை போகிறது. வெளிச் சந்தையில் கொப்ப ரை மார்க்கெட் சரிந்துள்ள தாலும், அரசு கொள்முதல் துவங்க உள்ளதாலும் விவசாயிகள் தேங்காய்க ளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

    உணவு மற்றும் தேங்காய் பவுடர் தயாரிப்பு ஆகிய தேவைகளுக்கு தேங்காய் அதிக அளவில் விற்பனை ஆகிறது. எனவே கொப்ப ரை தயாரிப்பா ளர்கள் வாங்கும் விலையை விட வெளிமாநில வியாபாரிகள் தேங்காய்க்கு கூடுதல் விலை கொடுக்கின்றனர்.கொப்பரை தயாரிப்பா ளர்கள் வெளி மாநில வியாபாரிகளுடன் போட்டி போட்டு தேங்காய்களை கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் கொப்பரை உற்பத்தி தொழில் மந்தக தியில் நடக்கிறது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உலர்கள உரிமை யாளர்கள் கூறுகையில், கொப்பரை விலையுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு தேங்காயும் 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை ஆகிறது.தொழிலாள ர்களுக்கு வேலை கொடுத்து அவர்க ளை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிறிய அளவில் கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.இதே நிலை நீடித்தால் கொப்பரை உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்படும் என்றனர். 

    • 116 விவசாயிகள் தங்களுடைய 1,305 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 60 முதல் ரூ. 83.15 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 49.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அரியலூா், கரூா், அப்பியம்பட்டி, மாம்பாடி, தாராபுரம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 116 விவசாயிகள் தங்களுடைய 1,305 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 67 டன்.

    காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 வணிகா்கள் கொப்பரையை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 60 முதல் ரூ. 83.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 78.35. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 49.20 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம்போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.71 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நேற்று நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் பகுதியைச் சோ்ந்த 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 2, 123 கிலோ.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.82க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.71 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளர் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குன ரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமை யில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 20 விவசா யிகளும், சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட் சமாக 55 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்சமாக 82 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    • ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தபட்சமாக ரூ.68க்கும் ஏலம்போனது.

    காங்கேயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 569 கிலோ. இதில், கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தப ட்சமாக ரூ.68க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.40 ஆயிரம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்."

    • கொப்பரை தேங்காய் விலை உயந்துள்ளது
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

     கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க பரமத்தி, கரூர் ஆகிய வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பு, தேங்காய் ஆகியவற்றை அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். அப்படி கொண்டு சென்ற 165 மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.80, ஒரு கிலோ முதல் ரகம் அதிக விலையாக ரூ.82 ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட கிலோவிற்கு ரூ.4 அதிகமாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது
    • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது

    குடிமங்கலம் :

    ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இக்கொள்முதலுக்கான, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், 'ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதலுக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தாமதம் ஏற்படுகிறது. இந்த உடுமலை ஒன்றியத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய முடியாமல் நிலுவையில் உள்ளது. எனவே, விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, விண்ணப்பங்களை பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை மட்டும் கொள்முதல் செய்யப்படும்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் முத்தூர் களத்தில் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்திலும், கோவை மாவட்டம் சூலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் மற்றும் பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை மூலம் 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.இவற்றுள் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக் கொப்பரை 1000 மெட்ரிக் டன்அளவுக்கு கொள்முதல் செய்திட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிலோ ரூ.105.90 என்ற விலையில் 6 சதவிகிதத்திற்குள் ஈரப்பத்துடன் சீரான ,சராசரித் தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

    நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் வங்கி விவரங்களையும் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி பதிவு செய்து கொண்டு பின்னர் கொப்பரையைக் கொண்டு வந்து விற்பனை செய்திடலாம்.

    மேலும் திருப்பூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பொங்கலூர், உடுமலை, காங்கயம் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய மையங்கள் மூலம் 1.2.2022 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் 31.7.2022 வரை 4284.700 மெட்ரிக் டன் கொப்பரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3498 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சோ.சீனிவாசன், பல்லடம் வேளாண்மை உற்பத்தியர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர் சுரேஷ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் எஸ்.குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×