search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மையங்கள்"

    • சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது.
    • மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் யூனியன் ஆமத்தூர் கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், ரூ. 23.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களை விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பக வல்லி, யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், ஆமத்தூர் பஞ்சாயத்து தலைவர் குறிஞ்சி மலர், அழகர்சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறி வுரைப்படி வாக்குச்சாவடி சீரமைப்புக்கான ஆலோ சனைக்கூட்டம் அங்கீ கரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில், ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 68 மற்றவர்களும், 1696 வாக்காளர்கள் (ராணுவத்தில் பணிபுரிப வர்கள்) என மொத்தம் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர்.

    கிராமப் பகுதிகளில் 293 வாக்குச்சாவடி மையங் களும், நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

    பொதுவாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் என்பது 1500 வாக்குகளுக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அங்கு 2 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது என்பது ஆணை. அதன் அடிப்படையில் தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் 17 வாக்குச்சாவடி மையங்களில் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளார்கள்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 4 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட வாக்குச்சா வடிகளின் இறுதி பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுக ர்களுக்கு வழங்கி னார்.

    இந்த கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.

     திருப்பூர்:

    தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றில் 186 மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி கூறியதாவது:-

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும். எச்.ஐ.வி. நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகும். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது. இதனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மாத்திரைகளை பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.
    • வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது.

    உடுமலை :

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,வீடுகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். நாள்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு மின் வாரியத்தின் மூலமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக மின்கட்டண வசூல் மையத்திற்கு சென்றும் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். ஆனால் உடுமலை ஏரிப்பாளையத்தில் மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின் கட்டண வசூல் மையம் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-உடுமலை மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின்சார பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் ஆளுகைக்கு உட்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களை சேர்ந்த பொதுமக்கள் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.ஆனால் படிப்பறிவற்ற பொதுமக்கள் அலுவலகத்திற்கு சென்று செலுத்தி வருகின்றனர். இதற்காக செயல்பட்டு வந்த வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கால் கடுக்க மணிக்கணக்கில் காத்திருந்து கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அப்போது மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திருப்பதற்கு இயலாத நிலை உள்ளது.மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்கு ஏதுவாக குடிதண்ணீரும் வைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கூட்டத்திற்கு தகுந்தவாறு கூடுதல் மையங்களைத் திறந்து சேவையை அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.ஆனால் இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.எனவே மின் கட்டண வசூல் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து கூடுதல் வசூல் மையங்களை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது.
    • குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது. இதில் 3-4 வயது உள்ள குழந்தைகள் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் மதியம் வரை குழந்தை கள் மையத்தில் உள்ளனர். மதிய உணவு அங்கு இலவச மாக வழங்கப்படுகிறது.

    அதற்கு பிறகு குழந்தை களை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசி ரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது. தற்பொ ழுது கோடை காலத்தை முன்னிட்டு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பதை அரசு ஒத்திவைத்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படு கிறது. இந்த நிலையில் குழந்தைகள் மையத்தை மட்டும் முன்னதாகவே திறந்து உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்க ளுக்கு அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது. கோடை வெயில் இன்னமும் சுட்டெரிப்பதால் குழந்தை கள் வாடி வதங்கி மையத் துக்கு செல்வதை பார்த்து பெற்றோர் குமுறுகின்றனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் குழந்தைகள் மைய ஆசிரியரிடம் கேட்டபோது:-

    கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 25-ந் தேதி குழந்தைகள் மையம் திறக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட னர். அதற்குப் பிறகு மாற்று உத்தரவு எதுவும் வர வில்லை. அதனால் நாங்கள் வழக்கமாக கடந்த 25-ந் தேதி முதல் குழந்தைகள் மையம் திறந்து செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குழந்தை களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    சிறு வயது குழந்தைகளை எல்.கே.ஜி., வகுப்புகள் போல் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கிறோம். கோடைகால வெப்பத்தை தாங்க முடியாமல் இருக்கும்போது 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு தேதி மாற்றம் செய்துள்ளனர். ஆனால் குழந்தைகள் மையம் மட்டும் திறப்புக்கு அதிகாரிகள் உத்தரவிட்டது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரும்பாலான குழந்தைகள் மையம் மேற்கூரை சிமெண்ட் அட்டை போட்ட கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. குழந்தைகள் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் உடல் சோர்வு அடைகின்றனர்.

    மற்ற வகுப்புகளுக்கு தேதி மாற்றம் செய்தது போல் குழந்தைகள் மையகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு 7-ந் தேதி தொடங்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரவை கொப்பரை அரசு கொள்முதல் மையங்கள் இன்று திறக்கப்பட்டது.
    • கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி வட்டார ங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. சமீப காலமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவு காரணமாக தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு கொள்முதல் கொப்பரை மையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை அரவை கொப்பரை ஒரு குவிண்டனுக்கு ரூ. 10 ஆயிரத்து 890 என்று குறைந்தபட்ச ஆதார விலையை அடிப்படையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அரவை கொப்பரைக்கான கொள்முதல் இலக்கு தலா 100 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது.கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்குரிய தொகையானது எவ்வித இடைத்தரகும் இன்றி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

    ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொப்பரையை விற்பனை செய்ய உள்ள விவசாயிகள் தங்களின் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களுடன் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சென்று இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்துள்ள இத்தருணத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு-லேசர் சிகிச்சை மையங்கள் திறப்பு விழா நடந்தது.
    • தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக காரைக்குடி கே.எம்.சி. மருத்துவமனையில் தொடர்ச்சியான அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை சி.ஆர்.ஆர்.டி மற்றும் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இந்த தொடர்ச்சியான சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை முக்கியமாக கடுமையான சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த செயல்முறை மாற்றாக ஹீமோடியா பில்ட்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு 12 முதல் 24 மணி நேரம் நீடிக்கும்.தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.

    சிவகங்கை மாவட்டத்தில் முதன் முறையாக கே.எம்.சி.மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் சிகிச்சை முறையில் மருத்துவம் செய்யும் துறையும் தொடங்கப்பட்டுள்ளது.வெரிகோஸ் வெயின் உலகளவில் வயது வந்தோரில் 23 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. வெரிகோஸ் வெயின் பொதுவாக கால்களை பாதிக்கிறது.

    நீண்டநேரம் நின்று கொண்டிருப்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கால்கள் இந்த நோயால் பாதிப்பு ஏற்படும். கே.எம்.சி.மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் சிகிச்சைகளை வழங்குகி றார்கள். வெரிகோஸ் வெயினை குணப்படுத்துவதற்கு தொந்தரவில்லாத அனுபவத்தையும், சிறந்த வகையில் லேசர் அறுவை சிகிச்சையையும் வழங்க கே.எம்.சி. குழு தயாராக இருக்கிறது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு உயர்தர சிகிச்சையை காரைக்குடி பகுதியில் வழங்க முடியும் என்று கே.எம்.சி. மருத்துவமனை தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கே.எம்.சி மருத்துவமனை தலைமை மருத்துவர் சலீம் ஆர்த்தோ மற்றும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • 15 பள்ளிகளில் மையம் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆர்வம் தெரி–வித்து விண்ணப்பித்து உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில பயிற்சி அளிக்–கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 26-ந் தேதி முதல் தொடங்கி சனிக்கிழமைதோறும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக 15 பள்ளிகளில் மையம் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

    திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்–கும் மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு சிறப்பு பயிற்சி பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் மட்டும் கூடுதலாக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 2 மையங்களும், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆர்வம் தெரி–வித்து விண்ணப்பித்து உள்ளனர். இதையொட்டி புதிய பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி பங்கேற்று, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். நீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உடனிருந்தார். நாளை (சனிக்கிழமை) முதல் மாவட்டத்தில் 19 மையங்களில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

    • குரூப் 4 தேர்வுக்காக 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 30,646 பேர் எழுத உள்ளனர்

    கரூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 4 தேர்வுகளை கரூர் மாவட்டத்தில் 110 மையங்களில் 30,646 பேர் எழுதுகின்றனர் என கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் -4 தேர்வுகள் வரும் 24-ந் தேதி கரூர் மாவட்டத்தில் 110 மையங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 30,646 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வர்கள் அமர்ந்து தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் நாற்காலி வசதிகள், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நாளில் தேர்வு கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் 6, பறக்கும்படை குழுக்கள் 15 மற்றும் வினாத்தாள், விடைத் தாள்களை வழங்க ஏதுவாக 26 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்ப டமாட்டார்கள்.

    மேலும், தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர்கள் மின்னணு கடிகாரம் (எலெக்ட்ரானிக் வாட்ச்) போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • 5 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
    • ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராமநாதபுரம்

    மத்திய அரசு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நடத்தி வருகிறது. தொடக்க காலகட்டத்தில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.

    தற்போது முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இன்று (17-ந் தேதி) நீட் தேர்வு நடக்கிறது.ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் 864 பேரும், தேவிப்பட்டினம் ரோடு கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 288 பேரும், தேவிப்பட்டினம் அருகே சிபான் நூர் குளோபல் பள்ளியில் 216 பேரும், மண்டபம் கேந்திரிய வித்யாலயாவில் 288 பேரும், முகம்மது சதக் பள்ளியில் 307 பேரும் தேர்வு எழுதினர். மொத்தம் 1,963 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர்.

    இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளை சேர்ந்த 329 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 120 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 449 பேர் சிறப்பு பயிற்சிகள் பெற்று தேர்வு எழுதினர்.

    தேர்வு மைய ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு மையங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 110 உதவி மையங்களில் நேற்று தொடங்கியது.
    • அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 2 -வது நாளான இன்று பி.இ.படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் குவிந்தனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 110 உதவி மையங்களில் நேற்று தொடங்கியது.

    சேலம் மாவட்டத்தில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாக முதலாம் நுழைவுவாயில் பகுதியில் உள்ள நூலக கட்டிட வளாகத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை ெதாடர்ந்து நேற்று முதல் நாளில் இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். இங்கு அதிவேக இணையசேவையுடன் 50 கணினிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரே நேரத்தில் 50 மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

    இதனால் 2-வது நாளான இன்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க தங்களது பெற்றோருடன் உதவி மையத்திற்கு வந்தனர்.

    விண்ணப்பம் பதிவு செய்ய மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், எமிஸ் எண் விபரங்களை கொண்டு வரவேண்டும். பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
    • இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளா தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ×