கொப்பரைகள் வாங்க காங்கயத்திற்கு படையெடுக்கும் விவசாயிகள்

அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

தமிழகம் முழுவதும் கொப்பரை சீசன் துவங்கியு ள்ளதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொப்பரை அனுப்ப ப்படுகின்றன.உடுமலை,பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசா யிகளிடம் கொப்பரை உற்பத்தி செய்ய உலர்களம் வசதி அதிகளவில் இல்லை. இதனால் 6 சதவீதம் ஈரப்பதத்துக்குள் இருக்கும் உலர் கொப்பரை (அரவை கொப்பரை) வாங்க காங்கேயம், வெள்ள கோவில், ஊத்துக்குளிக்கு விவசாயிகள் செல்கி ன்றனர். காங்கேயம் பகுதியில் கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கேரள மாநிலத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்துக்கு தேங்காய் வரத்து இல்லை. தமிழகத்தில் இருந்து தான் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.உலர் கொப்பரை இங்கு பற்றாக்குறையாக உள்ளதால் காங்கேயத்துக்கு செல்ல வேண்டியதுள்ளது.

தற்போது மார்க்கெட்டில் உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை வி ற்பனை செய்யப்படுகிறது. அந்த விலைக்கு கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் கொள்முதல் மையங்களில் கிலோ 108.60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.தற்போது உலர் கொப்பரைக்கு தேவை அதிகரித்துள்ளதால் இதே விலை நீடிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை திறந்து விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com