search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎல் ராகுல்"

    • டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    • ஜடேஜா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 4 விக்கெட் சாய்த்தார்.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் (80), கே.எல். ராகுல் (86) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது.

    ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் வெளியேறினார்.

    கடைசி விக்கெட்டுக்க அக்சர் பட்டேல் உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றபோதிலும் 44 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோடி ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
    • தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஐதராபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார். தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு மற்ற இரண்டு வீரர்களிடையே (கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல்) போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்கா அணி 2வது நாள் முடிவில் 11 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 5 ரன்னில் அவுட்டானார். சோர்சி 28 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு டீன் எலருடன் ஜோடி சேர்ந்த டேவட் பெடிங்காம் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சென்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார்.
    • கடந்த 2021-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 123 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கடுமையாக போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். -

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்தார்.

    அதை விட கடைசியாக இதே மைதானத்தில் கடந்த 2021-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் குவித்த அவர் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அந்த வரிசையில் தற்போது இப்போட்டியிலும் சதமடித்துள்ள அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சென்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அனைவரும் சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்சமாக தலா 1 டெஸ்ட் சதம் மட்டுமே அடித்துள்ளனர். தற்போது கேஎல் ராகுல் மட்டுமே 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரராக சாதனை படைத்துள்ளார்.

    • 101 ரன்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார்.
    • தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிராஜ் 5 ரன்னில் அவுட் ஆனார். சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கேஎல் ராகுலுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பிரசித் கிருஷ்ணா அவுட் ஆனால் கேஎல் ராகுல் சதத்தை தவறவிடுவார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா சந்தித்த 2-வது பந்து கீப்பரிடம் சென்றது. உடனே ராகுல் 1 ரன் எடுத்தார். அதே ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பி தனது அசத்தலான சதத்தை பதிவு செய்தார்.

    சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும்.
    • சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும்.

    தென் ஆப்பிரிக்கா -இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

    ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 200 ரன்களை கடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்த கேஎல் ராகுல் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 70* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.

    இந்நிலையில் கடினமான பிட்ச்சில் அடித்த இந்த 70 ரன்கள் சதத்திற்கு சமம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும். சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். ஆனால் சததத்திற்கு அவர் தகுதியானவர். ஒருவேளை அதை அடிக்காமல் போனாலும் என்னை பொறுத்த வரை இந்த ரன்கள் சதத்திற்கு சமமாகும்.

    முதல் பந்திலிருந்தே அவருடைய பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய தலை நேராக இருப்பதால் பந்தை எளிதாக விட முடிகிறது. தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி அவரால் பவுன்சரை அடிக்க முடிகிறது. தம்முடைய பேலன்ஸை பயன்படுத்தி அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடுவது அபாரமாக இருக்கிறது.

    அவருடைய திறமையை நாம் நீண்ட காலமாக அறிவோம். இருப்பினும் 8 - 9 மாதங்கள் காயத்தால் அவர் தடுமாற்றமாக செயல்பட்டார். தற்போது வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம். இத்தனை நாட்களாக நாம் பார்க்க ஆசைப்பட்ட ராகுலை தற்போது பார்ப்பது அருமையாக உள்ளது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் இந்திய அணி 208 ரன்கள் எடுத்துள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
    • தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பார்தீவ் படேல் கூறியதாவது:-

    இந்தியாவின் டெஸ்ட் போட்டி விக்கெட் கீப்பர், ரஞ்சி கோப்பை அல்லது முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து கீப்பிங் செய்பவராக இருக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    • லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.
    • ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்.

    செஞ்சூரியனில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பணிக்கு லோகேஷ் ராகுலை பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. இஷான்கிஷன், மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி இந்த தொடரில் இருந்து விலகி விடடார்.

    லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார். ஆனால் டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணி என்பது மிகவும் கடினம். அது குறித்து அவரிடம் ஆலோசித்து இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் டிராவிட் கூறுகையில், 'டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணியை சவாலான ஒன்றாக பார்க்கிறேன். இதுகுறித்து ராகுலிடம் பேசிய போது மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார். அந்த முயற்சிக்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை என்பது தெரியும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கீப்பிங் பணியை கவனிக்கிறார். இருப்பினும் கடந்த 5-6 மாதங்களாக விக்கெட் கீப்பராக நன்றாக செயல்படுகிறார். ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.

    • சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.
    • சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    பார்ல்:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் (108 ரன்) சதம் அடித்தார்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக டோனிபூ ஜோர்ஜி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-

    இளம் வீரர்களை கொண்ட அணியாக தொட ரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் மீண்டும் தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வீரர்களுடன் நான் ஐபிஎல்லில் நிறைய விளையாடியிருக்கிறேன்.தற்போது அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

    இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் கூறினேன். மகிழ்ச்சியுடன் உங்களது திறமையை களத்தில் வெளிப்படுத்துங்கள். முடிவுகளை பற்றி யோசிக்காமல் உங்களது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று கூறினேன். அந்த வகையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனால் சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை வீரர்களுடன் கொண்டாடிவிட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 10 விக்கெட் கைப்பற்றி அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிகாவும் வெற்றி பெற்றன.

    • ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ருதுராஜ் ஏமாற்றம்.
    • அறிமுக வீரர் சாய் சுதர்சன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்து வீரர்கள் ஓட்டல் அறைக்கு திரும்புவதற்காக பேருந்தில் ஏறிக் கொண்டிருந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் செல்போனை பார்த்தபடி பேருந்து அருகில் வந்து படிக்கட்டில் ஏற முயன்றார். அப்போது தானியங்கி கதவு மூடிக்கொண்டது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் அதிர்ச்சி அடைந்தார்.

    ருதுராஜ் போட்டியில் விளையாடியதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கேப்டன் கே.எல். ராகுல் கதவை மூடியிருப்பார். சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் டிரைவர் கதவை மூடியிருப்பார்என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். அதேவேளையில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    ×