search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்"

    • ஜடேஜா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 4 விக்கெட் சாய்த்தார்.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் (80), கே.எல். ராகுல் (86) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது.

    ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் வெளியேறினார்.

    கடைசி விக்கெட்டுக்க அக்சர் பட்டேல் உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றபோதிலும் 44 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோடி ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற 25-ந்தேதி தொடங்குகிறது.
    • இங்கிலாந்து பயிற்சி போட்டியில் விளையாடாமல் நேரடியாக களமிறங்க இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது.

    இங்கிலாந்து அணி பிரத்யேகமாக பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. வலைப்பயிற்சி மேற்கொண்டு நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லாம் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, இங்கிலாந்து பாஸ்பால் முறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் கையாண்டு வருகிறது.

    பாஸ்பால் என்றால் அச்சமின்றி முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான்.

    இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடி இங்கிலாந்து வீரர்களில் ஒருவர் அலைஸ்டர் குக். இந்திய மண்ணில் பாஸ்பால் ஆட்டம் இங்கிலாந்துக்கு கைக்கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து தொடர் குறித்து அலைஸ்டர் குக் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணியின் பிரச்சனை என்னவென்றால், போட்டிக்காக தயாராகுவதில் உள்ள குறைபாடுதான். பயிற்சி ஆட்டம் இல்லாமல் களம் இறங்குவது, நவீன சுற்றுப் பயணத்தின் இயல்புதான். 2012-ல் நாங்கள் இந்தியாவில் தொடரை வென்றபோது, நாங்கள் சிறந்த எதிரணிக்கு எதிராக மூன்று பயிற்சி ஆடடத்தில் விளையாடினோம்.

    யுவராஜ் சிங், ரகானே, முரளி விஜய் உள்ளிட்ட நான்கு முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியா "ஏ" அணியில் இடம் பிடித்திருந்தனர். மற்றொரு ஆட்டத்தில் புஜாரா விளையாடினார். அவர்கள் எதிர்த்து நாங்கள் விளையாடினோம்.

    வெளிநாட்டில் இருந்து வரும் அணிக்காக ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் சில பயிற்சி ஆட்டங்களில் இருந்தால் நன்றாக இருக்கும். தற்போது பெரும்பாலான தொடர்களில் உள்ளூர் அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆரோக்கியமானது என நான் நினைக்கவில்லை.

    பாஸ்பால் கிரிக்கெட்டை இந்தியாவில் செயல்படுத்த இங்கிலாந்து முயற்சிக்கும். இதில் சந்தேகமில்லை. வெற்றி பெற அவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு என நினைக்கிறேன். ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான பாரம்பரிய விதிகளை பின்பற்ற தேவையில்லை.

    இவ்வாறு குக் தெரிவித்துள்ளார்.

    • ஜனவரி 25-ந்தேதியில் இருந்து மார்ச் 11-ந்தேதி வரை இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியும் (முதல் இரண்டு போட்டி), இங்கிலாந்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது. ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து அணி எந்தவிதமான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருக்கிறது.

    2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ந்தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ந்தேதியும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவிலும் தொடங்குகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஹாரி ப்ரூக் கடைசி நேரத்தில் இந்திய தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலான லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ×