search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை கடத்தல்"

    • முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார்.
    • போலீசாரின் தொடர் விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட பெண் தேனி பகுதிக்கு சென்றதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்செந்தூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ். இவரது மனைவி ரதி. இவர்களது 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ்.

    முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர்களுடன் 40 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். பின்னர் அதனை பயன்படுத்தி அந்த பெண், கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை கடத்தி சென்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரதி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண்ணுடன், ஒரு வாலிபரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை திருடிச் சென்றது தெரியவந்தது. அந்தக் காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்டது யார்? என விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் தொடர் விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட பெண் தேனி பகுதிக்கு சென்றதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேனிக்கு விரைந்து உள்ளனர். அங்கு அந்த பெண் மற்றும் வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களை பிடித்தால் தான் அவர்கள் யார்? பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த 5-ந் தேதி முத்துராஜ் தனது மனைவி, குழந்தையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார்.
    • கண்காணிப்பு கேமிராவில் கிடைத்த காட்சிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருச்செந்தூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ்.

    இவர் தனது மனைவி ரதி மற்றும் 1½ வயது குழந்தை ஸ்ரீஹரிஷ் ஆகியோருடன் கடந்த 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து தங்கி விரதம் இருந்து வந்தார்.

    அங்கு இவர்களுடன் தங்கியிருந்த 40 வயது பெண் ஒருவர் இவர்களுடன் நன்றாக பழகி நட்பாக இருந்துள்ளனர். கடந்த 5-ந் தேதி முத்துராஜ் தனது மனைவி, குழந்தையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அவர்களுடன் அந்த பெண்ணும் வந்தார்.

    அந்த நேரத்தில் அந்த பெண், குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறி நைசாக குழந்தையை கடத்தி சென்று விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இவர்கள் தங்கியிருந்த குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர்.

    அதில் இவர்களுடன் அறிமுகமான பெண் மற்றும் ஒரு வாலிபர் இருவரும் திருச்செந்தூர் வந்து அங்கிருந்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்லும் காட்சிகள் தெரியவந்தது.

    மேலும் அந்த நபர் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கசாவடியை தாண்டி மோட்டார் சைக்கிளில் குழந்தையை கடத்தி செல்லும் காட்சி பதிவானதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து 3-வது நாளாக தேடி வருகின்றனர்.

    குழந்தையை கடத்திய பெண்ணும், அவருடன் இருந்த வாலிபரும் தம்பதியா? அல்லது குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்காணிப்பு கேமிராவில் கிடைத்த காட்சிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • சிறிது நேரத்தில் கண்விழித்த மீனா அருகில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.
    • ர்மநபர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தபடி தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மீனா. இவர்களது மகன் அருள்முருகன் (வயது 2). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

    கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 நாட்கள் தங்கி இருந்து நேற்று சாமி தரிசனம் செய்தனர். இரவு சென்னை திரும்புவதற்காக திருப்பதி மலையில் இருந்து கீழ் திருப்பதிக்கு வந்தனர். அங்குள்ள ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.

    நள்ளிரவு ஆனதால் சென்னைக்கு பஸ்கள் இல்லை. இதனால் சந்திரசேகர், மீனா இருவரும் அவர்களது மகன் அருள் முருகனை அருகில் படுக்க வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் தூங்கினர்.

    நள்ளிரவு மர்மநபர் ஒருவர் தாயின் அருகில் படுத்திருந்த குழந்தை அருள் முருகனை நைசாக தோளில் தூக்கி கடத்திச் சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் கண்விழித்த மீனா அருகில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். அவரும், கணவரும் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினர்.

    அங்கிருந்தவர்கள் குழந்தையை ஒருவர் தூக்கிச் சென்றதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி அழுதபடி திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

    உடனடியாக திருப்பதி மாநகர் பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    திருப்பதி பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மர்மநபர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தபடி தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இரவு 2 மணி வரை நான் கண் விழித்திருந்தேன். 2.20 மணிக்கு பார்த்தபோது எனது குழந்தையை காணவில்லை.

    கடவுளே என் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து தந்து விடுங்கள். நான் என் குழந்தை இல்லாமல் ஊருக்கு போக மாட்டேன். பசித்தால் கூட எனது குழந்தைக்கு சொல்லத்தெரியாது. அவன் பசி தாங்க மாட்டான். என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.

    தயவு செய்து அனைவரும் சேர்ந்து என் குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள்" என்றார்.

    போலீசார் உடனடியாக பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 2.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    இதையடுத்து 5 தனிப்படைகளை அமைத்து ஆந்திர போலீசார், குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மர்மநபர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகளை வைத்து தொடர்ந்து கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஏரிபேடு மண்டலம் பகுதியில் குழந்தையுடன் மர்மநபர் சென்றது அந்த பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சிறுவனின் போட்டோவை காண்பித்து விசாரிக்க தொடங்கினர்.

    அப்போது மாதவமலை பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டில் குழந்தை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது குழந்தை அருள் முருகன் ஒரு பெண்ணிடம் இருந்தான். இதனை கண்டதும் போலீசார் பெண்ணை மடக்கி பிடித்தனர். மேலும் சிறுவனை அவரிடம் இருந்து மீட்டனர். குழந்தை கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    விசாரணையில் குழந்தையை மாத மலையை சேர்ந்த சுதாகர் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    விசாரணையில் சுதாகர் குழந்தையை கடத்திச் சென்று பின்னர் மாதவமலையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் குழந்தையை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில் குழந்தையை மீட்ட போலீசார் சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கண்டதும் அவரது தாயார் ஓடி சென்று கட்டி அணைத்து தூக்கி கதறி அழுதார்.

    அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராஜிபாளையம் பகுதியில் அழுக்கான கிழிந்த ஆடைகளை அணிந்த 2 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் பெரிய சாக்கு மூட்டைகளை தோளில் சுமந்தபடி சென்றனர்.

    இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    மேலும் பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் 2 வாலிபர்களும் அங்கிருந்து மூட்டைகளுடன் ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்த போது அதில் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    அவர்களை நெல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அழுக்கான கிழிந்த ஆடைகளுடன் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர்கள் போல் சென்று அவர்கள் குழந்தைகளை கடத்தி சென்றது தெரியவந்தது.

    குறிப்பாக தெருவில் விளையாடும் குழந்தைகளை மயக்க மருந்து தெளித்தும் கைக்குட்டையில் மயக்க பவுடர் வைத்து அதன் மூலமும் மயங்க செய்து சாக்கு மூட்டையில் கட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் இதுவரை 2 குழந்தைகளையும் மற்றொருவர் 10 குழந்தைகளையும் கடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

    கடத்தப்பட்ட குழந்தைகளை நெல்லூர் காவாலி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் வைத்து கடத்தல் கும்பல் தலைவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர். அதற்கு ரூ.5 ஆயிரம் முதல் பணம் வாங்கியுள்ளனர்.

    பணத்திற்கு பதிலாக மது பாட்டில்களையும் வாங்கியுள்ளனர்.

    இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் எங்கு உள்ளார்கள்? குழந்தைகளை வாங்கியவர்கள் யார்? என போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த குழந்தைகளை பிச்சை எடுக்கவும், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் உடல் உறுப்புகளை திருடி விற்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தற்போது மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல மாதங்களாக பயனற்று கிடக்கிறது
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    கருத்தடை செய்து கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர், சூரியகலாவின் ஆண் குழந்தையை கடத்திச் சென்றார்.

    இதனையடுத்து போலீசார் 8 மணி நேரத்தில் குழந்தையை காஞ்சிபுரத்தில் மீட்டு, பத்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தற்போது 2 கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் சித்தூர் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

    இங்கு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரே பதிவில் கொண்ட டேக் பொருத்தப்படும்.

    இந்த டேக் மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்.எப்.டி. சென்சார் கருவி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஆர்.எப்.டி. (ரேடியோ ஃப்ரீகுவன்சி டெக்னாலஜி மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடென்டிபை) டேக் பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது தாய் கட்டிடத்தை விட்டு வெளியேரினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன் மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ? அல்லது குழந்தையை கடத்தி செல்லவோ முடியாது.

    இந்நிலையில் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆர்.எப்.டி. என்ற தொழில் நுட்ப கருவி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பழைய மகப்பேறு கட்டிடத்தில் மட்டுமே இந்த ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை. மேலும் பழைய கட்டிடத்தில் உள்ள ஸ்கேனர் கருவியும் பல மாதங்களாக பழுதாகி பயனற்று கிடக்கிறது.

    இதனால்தான் குழந்தை கடத்தப்பட்ட போது, அதனை தடுக்க முடியவில்லை. எனவே உடனடியாக ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவியை பழுது பார்ப்பதோடு, புதிய கட்டிடத்திலும் ஆர்.எப்.டி. கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கணவன், மனைவி ஆசைப்பட்டு குழந்தையை கடத்தினர்
    • போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி பேட்டி

    வேலூர்:

    குழந்தை கடத்தல் குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தனிப்படை

    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி, ஏ.எஸ்.பி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பத்மா விட்டு சென்ற பொருளிலிருந்து அவரது பெயர் மற்றும் முகவரியை கண்டறிந்தோம். அவர் குழந்தையின் தாயுடன் 2 நாட்கள் சகஜமாக பழகி வந்துள்ளார்.

    பத்மாவின் புகைப்படத்தை வைத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இரவு ரோந்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டு அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினோம்.

    அப்போது காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பெண் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்த பிறகு குழந்தையை கடத்தி சென்ற பத்மா மற்றும் அவரது கணவனை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டோம். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பத்மாவுடன் பிடிபட்டவர் 2-வது கணவர் என்றும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் குழந்தையை பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார்.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவரால் சரியாக பேச முடியாது. காதும் கேட்காது. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது.

    மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண்கள் ஒருவர் மட்டுமே வார்டில் உடன் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா என்பவர் வந்தார்.

    சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமாகிவிட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுவிட்டார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர் கதறி அழுது துடித்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் தலைமையில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    போலீசார் ஆஸ்பத்திரியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மா, குழந்தையை கடத்திக்கொண்டு வேக வேகமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை கடத்தி சென்ற பத்மா திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிந்தது.

    பத்மா பயணம் செய்த வழித்தடங்களில் உள்ள அண்டை மாவட்டங்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.

    கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் பத்மா இருப்பதை கண்டுபிடித்தனர். விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பத்மா மற்றும் அவரது கணவர் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

    மேலும், குழந்தையை கடத்திய பத்மா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பத்மா போலீசில் சிக்காமல் இருக்க ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பின்னர் பஸ் மூலம் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் சென்றுள்ளார். அவர் தெளிவாக திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

    அதேபோல் காஞ்சிபுரத்தில் பத்மாவின் கணவரும் சுற்றித் திரிந்ததுள்ளார். பத்மா காஞ்சிபுரம் செல்லும் நேரத்தில், அவரது கணவர் தயார் நிலையில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவர்கள் தொடர் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களா அல்லது குழந்தை கடத்தல் கும்பலாக செயல்படுபவர்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    • பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர்.
    • குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. 2-வது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மூர்த்தியின் முதல் குழந்தை சக்திவேல் (வயது 3) தனது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில கடந்த 8-ந்தேதி இரவு 8 மணியளவில் குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை காணவில்லை.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில் காணாமல் போன 2 குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    விசாரணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் போன குழந்தைகளை அழைத்து செல்வதை போல் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் காஞ்சிபுரம் நகரத்தில் உளள பல்வேறு தெருக்கள், சந்துகள் வழியாக வாலாஜாபாத் தாலுகா அஞ்சூர் கிராமத்திற்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் துரிதமாக அஞ்சூர் கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.

    குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன்(60) கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது.
    • பெண்மணியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் தாலுக்கா, வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமுதாய கர்ப்பிணி பெண் காமாட்சி (வயது 28) என்பவருக்கு கடந்த செய்வாய் கிழமை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில், சுகப்பிரசவம் ஏற்பட்டது. காமாட்சியின் கணவர் மூர்த்தி , 4 வயது மகன் சக்திவேல் ,மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை, அவருடைய மனைவி குள்ளம்மா, அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோர் காமாட்சிக்கு உதவிகள் செய்வதற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு நலப்பிரிவு பிரிவு அருகே தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி ஒருவர், மூர்த்தி, ஏழுமலை, குள்ளம்மா மற்றும் சிறார்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். செவ்வாய் கிழமை மாலை 7 மணி அளவில் சிறார்களை அழைத்துக் கொண்டு உணவு வாங்கி தருவதாக அந்த பெண்மணி அழைத்து சென்றார். சென்று வந்த பின்னர் அந்த பெண்மணி, மூர்த்தி என அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர்.

    புதன் கிழமை காலை பிள்ளைகளை காணாததால் பதறி அடித்துக் கொண்டுபோய் , மனைவி காமாட்சி இடம் தகவல் கூறினர். காமாட்சி அங்குள்ள செவிலியர்கள் மூலமாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். அதன் பெயரில் விரைந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் மூர்த்தி கூறும் போது, மூன்று நாட்களாக ஒரு பெண்மணி எங்களுடன் பழகினார். அவர்தான் என் பிள்ளைகளை கடத்திச் சென்று விட்டார் என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து மகப்பேறு நலப்பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண்மணி சந்தேகத்துக்கடமான நிலையில் மகப்பேறு நலப்பிரிவு அருகே வந்து செல்வது கண்டறியப்பட்டது. அதில் அவருடைய முகம் சரியாக தெரியவில்லை. ரெயில்வே சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை சுற்றிலும் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள சுமார் 200 கேமராக்களை புதன் கிழமை மதியத்திலிருந்து காவல்துறையினர், ஆய்வு செய்தனர். பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கேமராக்களை ஆய்வு செய்த போது தான் ஒரு பெண்மணி இரண்டு சிறார்களையும் அழைத்து கொண்டு பேருந்து நிலையம் வழியாக ஆடிசன் பேட்டை வரை செல்லும் காட்சி கண்டறியப்பட்டது.

    அந்த கேமரா புட் பேஜில் கடத்திய பெண்மணியின் முகம் சரியாக தெரியாததால் முகத்தை கண்டறியும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது சிறார்களை கடத்திய அந்த பெண்மணியின் முகம் தெளிவாக காணப்பட்டது. அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து பெண்மணியின் புகைப்படத்தை நேற்று இரவு காவல்துறையினர் வெளியிட்டனர். அக்காட்சிகளை கொண்டு சிறார்களை கடத்திய பெண்மணியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையிலும், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் தலைமையிலும், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தல்காரியை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.

    கடத்திய பெண்மணி பற்றிய விவரங்கள் தெரிந்தால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் : 044-27236111, 9498181232.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 949810026.

    • குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
    • பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.

    இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

    காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.

    மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.

    இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

    உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.

    கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை.
    • பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் மேலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுடன் அவரது தாயார் இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை. மேலும் அவருடன் தங்கி இருந்த அவரது தாயாரையும் 2 வயது குழந்தையையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் குழந்தையை காணவில்லை என்று கூச்சலிட்டார்.அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்று எண்ணி கொண்டு விசாரித்தனர்.ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் அவர் அந்த குழந்தைகளை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பொதுமக்களிடமிருந்து இருந்து விடுவித்து அனுப்பி வைத்தனர். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோர் விடிய விடிய காவிரி ஆற்றங்கரையில் தேடினர்.
    • குழந்தையை கடத்திச் சென்று காவிரி ஆற்றில் வீசிய லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி அருகே உள்ள வெள்ளாளபாளையம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி லோகநாதன் (வயது 28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (43) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகநாதனின் 4 வயது மகன் சிவகார்த்திக், நேற்று மாலை திடீரென காணாமல் போனார்.

    வீட்டின் அருகே விளையாடிய கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் குழந்தையின் பெற்றோருக்கு, லட்சுமணன் மீது சந்தேகம் ஏற்பட்டு தேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை அடுத்து போலீசார் குழந்தையும், புகாருக்குள்ளான லட்சுமணனையும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் லட்சுமணனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், முன் விரோதத்தின் காரணமாக, லோகநாதனின் குழந்தையை கடத்திச் சென்று வெள்ளாளபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் வீசியதாக லட்சுமணன் தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோர் விடிய விடிய காவிரி ஆற்றங்கரையில் தேடினர்.

    இந்நிலையில் இன்று காலை வெள்ளாளபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதயில் உள்ள ஒரு வாழை தோப்பு அருகே குழந்தை சிவக்கார்திக் மயங்கி கிடந்ததை கண்ட காவல்துறையினர், குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    மேலும் குழந்தையை கடத்திச் சென்று காவிரி ஆற்றில் வீசிய லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக 4 வயது குழந்தையை கடத்தி சென்று காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது.

    ×