search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை கடத்தல்"

    • பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்பு.
    • வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசியபோது போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, கார்த்திக், செல்வம் என்ற இருவரை எண்ணூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை.
    • குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது34). இவர் தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு சந்தியா தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவரது குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

    இது தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் 150 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தியது ஆலங்குளம் அண்ணாநகர் தெருவை சேர்ந்த சாமி என்ற கருப்பசாமி (47), ஆலங்குளம் கரும்பனூரை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (53) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் சந்தியாவின் குழந்தை தவிர மேலும் 3 குழந்தைகளை கடத்தியது தெரியவந்தது. இவர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மற்றும் திருவிழாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களின் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    அதற்காக அவர்கள் முன்கூட்டியே ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டறிந்துள்ளனர். பின்னர் குழந்தையை கடத்திச் சென்று, இந்த குழந்தை மலைப்பகுதியை சேர்ந்தவர்களின் குழந்தை. அவர்களால் குழந்தையை வளர்க்க முடியாததால், கொடுப்பதாக கூறி விற்பனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட 4 குழந்தைகளையும் அவர்கள் மீட்டனர்.

    இதில் சந்தியாவின் குழந்தை மற்றும் திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட 3 குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 பேர் மீது சிறார் குற்ற தடுப்பு சட்டம் 80, 81, 84 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 363 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கருப்பசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட தனிப்படையினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.
    • குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப் படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீசார் வெளியிட்டனர்.

    தூத்துக்குடி:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தை கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப் படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீசார் வெளியிட்டனர்.

    அந்த புகைப்படங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி, ராஜன் என்பது தெரியவந்தது. உடனடியாக நேற்று மாலை கருப்பசாமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று காலை ராஜனும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது தூத்துக்குடியில் 4 மாத குழந்தையை கடத்தியது மட்டுமின்றி திருச்செந்தூரில் கடந்த 21.12.2022-ம் ஆண்டு நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த பாபநாசம் என்பவரது 2½ வயது குழந்தை முத்துப்பேச்சி மற்றும் குலசேகரன் பட்டினத்தில் கடந்த 21.10.2023-ம் ஆண்டு மற்றொரு குழந்தையையும், தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு குழந்தை என 4 குழந்தைகளை இவர்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 குழந்தைகளையும் தனிப்படை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களுக்கு வேறு ஏதேனும் கடத்தலிலும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

    • சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர்.
    • பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து இலையூர் கண்டியான் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி கனகா. நேற்று இவரது 8 வயது மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் சிறுவனை கையைப் பிடித்து அழைத்து சென்றதாக தெரிகிறது.

    இதை பார்த்த அந்த சிறுவனின் தாத்தா அவரிடம் இருந்து சிறுவனை மீட்டவாறு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயத்துடன் இருந்த அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அதனை தொடர்ந்து அவரிடமும் குழந்தையின் பெற்றோரிடமும் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    அவருக்கு அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    • குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    • மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    * மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    * 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை மக்கள் கேட்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
    • குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    புதுச்சேரி லாஸ் பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி விஜயலட்சுமி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை திடீர் என்று மாயமானது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, இரண்டு பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

    இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய மேலும் இருவரை புதுச்சேரியில் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள்.
    • கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 26). கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்கிறார். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஜன்னல்யா (4) என்ற மகள் உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி, விஜயலட்சுமி ஆகியோர் வழக்கம் போல் கடற்கரை சாலையில் நேரு சிலை அருகே பலூன் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து அவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று காரைக்காலுக்கு விரைந்தனர். அப்போது குழந்தையை கடத்தி வைத்திருந்த செல்லா (42) என்ற பெண்ணை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    இதுபற்றி காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் வந்தது. அதன்பின் குழந்தையை கடத்தியவர்கள் காரைக்காலுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். உடனே காரைக்கால் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் நள்ளிரவு 1.10 மணிக்கு குழந்தையுடன் இறங்கிய நபர்கள், ஆட்டோ பிடித்து லெமர் வீதிக்கு வந்து ஒரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர்.

    அந்த பெண்ணை நேற்று இரவு 8 மணியளவில் சுற்றி வளைத்து கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டோம். அந்த பெண்ணையும் கைது செய்துள்ளோம்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை கடத்தி வரப்பட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தை கடத்தலில் புதுச்சேரியில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி வந்தவரை தேடி வருகிறோம். குழந்தை கடத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7-வயது ப்ரைசன் டுவாங், ஆசிய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சிறுவன்
    • காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பித்த போது ப்ராண்டனின் வாகனம் விபத்துக்குள்ளானது

    அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள மாநிலம் அயோவா (Iowa). இதன் தலைநகரம் டெஸ் மாயின்ஸ் (Des Moines).

    அயோவாவின் க்ரீன் கவுன்டி பிராந்தியத்தில் உள்ள நகரம் ஜெஃபெர்சன். இங்குள்ள க்ரீன் கவுன்டி ஆரம்ப பள்ளியில் படித்து வந்தவர், ஆசிய வம்சாவளி சிறுவனான, 7 வயது ப்ரைசன் டுவாங் (Bryson Duong).

    நேற்று மதியம், ப்ரைசனின் தந்தை ப்ராண்டன் டுவாங் (34), சுமார் 12:40 மணியளவில், பள்ளிக்கு வந்து அங்கு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரைசன் டுவாங்கை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் மறுக்கவே, வாக்குவாதம் செய்து ப்ராண்டன் மகனை அழைத்து சென்றார். அவர்கள் இருவரும் டொயோட்டா டகோமா காரில் சென்றனர்.

    இதையடுத்து காவல்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

    இருவரும் வீடு திரும்பவில்லை.

    இதை தொடர்ந்து "ஆம்பர் அலர்ட்" எனும் எச்சரிக்கை வெளியிட்ட காவல்துறையினர், காணாமல் போன இருவரை குறித்தும் பொதுவெளியில் விவரங்களை வெளியிட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு உடனே தெரிவிக்குமாறு கோரினர்.

    நீண்ட தேடுதலுக்கு பிறகு அவர்கள் சென்ற வாகனத்தை கண்ட காவல்துறையினர், அதனை நிறுத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய ப்ராண்டன், சிறுவனை தூக்கி கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் ஓடினார்.

    ப்ராண்டனுடன் பேச்சுவார்த்த நடத்திய காவல்துறையினர், சிறுவனை மீட்டு, ப்ராண்டனை கைது செய்தனர்.

    அவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
    • குழந்தை கடத்திச்சென்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குட்லூருவை சார்ந்தவர் தேவரகொண்டா ஆனந்த ராவ்.

    இவரது மனைவி ரஜினி தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. தம்பதி இருவரும் ஊர் ஊராக சென்று வாத்து மேய்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொப்போலி மேம்பாலத்தின் அடியில் தற்காலிக கூடாரம் அமைத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இரவு 11 மணிக்கு ஒரு ஆண், பெண் பைக்கில் வந்தனர்.

    கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.

    குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை கடத்திச் சென்றது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

    மேலும் குழந்தை கடத்திச்சென்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

    விரைவில் குழந்தையை கடத்திச் சென்றவர்களை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
    • கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

    சென்னை:

    ஒடிசா மாநிலம், காந்தமால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர். இவரது மனைவி நந்தினி கன்ஹார். இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை ஆயூஸ். நேற்று இரவு லங்கேஷ்வர் குடும்பத்துடன் சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்டரல் ரெயில் நிலையம் வந்தடைந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு அங்கேயே தூங்கினர்.

    அதிகாலை 2.45 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் ஆயூஸ் மாயமாகி இருப்பதை கண்டு லங்கேஷ்வரும், அவரது மனைவி நந்தினி கன்ஹாரும் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாததால் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை ஆயூசை கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தையுடன் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிச்சென்ற டிரைவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் குழந்தையுடன் வந்த ஆணையும், பெண்ணையும் குன்றத்தூர் ஏரிக்கரை அருகே ஒரு வீட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஏரிக்கரை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தபோது அங்கு குழந்தை ஆயூஸ் பத்திரமாக இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.

    மேலும் குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியான பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இங்கு தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். குழந்தை இல்லாததால் அவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதலில் போலீசார் பரபாஸ் மண்டலிடம் விசாரித்தபோது மனைவியை சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரெயிலில் ஏற்றி விட வந்ததாக தெரிவித்தார். அவரிடம் சோதனை செய்தபோது ரெயிலுக்கான எந்த டிக்கெட்டும் இல்லை. நடைமேடை டிக்கெட் மட்டும் எடுத்து வந்து இருந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அங்கு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர். மீட்கப்பட்ட குழந்தை அயூசை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தபோது அவர்கள் கண்ணீர் சிந்தி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    கைதான தம்பதி பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது இதேபோல் வேறு இடத்தில் குழந்தை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தையை கடத்திய திலகவதி என்ற பெண்ணையும் அவரது கணவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.
    • குழந்தையை மீட்க அழைத்து சென்றபோது, திலகவதி மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ். இவரது மனைவி ரதி. இவர்களது 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ்.

    முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர்களுடன் 40 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். பின்னர் அதனை பயன்படுத்தி அந்த பெண், கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை கடத்தி சென்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரதி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண்ணுடன், ஒரு வாலிபரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை திருடிச் சென்றது தெரியவந்தது.

    பின்னர், குழந்தையை கடத்திய திலகவதி என்ற பெண்ணையும் அவரது கணவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், குழந்தையை கடத்தப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் கோவையில் பாண்டியன்- திலகவதி தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், திலகவதி உயிரிழந்துள்ளார்.

    குழந்தையை மீட்க அழைத்து சென்றபோது, திலகவதி மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர், திலகவதியை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×