என் மலர்
நீங்கள் தேடியது "Missing Child"
- ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
- குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறை அறிக்கையில், நவம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரையிலான 36 நாட்களில், குழந்தைகள் காணாமல் போனதாக 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர். ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.
இந்தக் காலகட்டகாத்தில் பச்சிளம் குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக, அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த காணாமல் போன சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு கடிதம் எழுதி உள்ளார்.
- நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்து முகம்மது பாருக் பிரார்த்தனை செய்தார்.
- கூட்ட நெரிசலில் முகம்மது பாருக் தனது குழந்தையை தொலைத்து விட்டார்.
நாகப்பட்டினம்:
திருவாருர் மாவட்டம் பூதமங்கலத்தை சேர்ந்தவர் முகம்மது பாருக்.
இவர் தனது குடும்பத்துடன் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்து பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர்கள் வெளியில் வந்தனர்.
அப்போது கூட்ட நெரிசலில் முகம்மது பாருக்தனது குழந்தையை தொலைத்து விட்டார்.
இந்நிலையில் குழந்தை தனியாக இருப்பதை கண்ட தர்கா காவலாளி அய்யப்பன் மற்றும் ஈஸ்வரன் தர்கா உள்துறை அலுவலகத்திற்கு குழந்தையை பாதுகாப்பாக கொண்டு வந்து ஒப்ப டைத்தனர்.
பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் பெற்றோர் மகிழ்ச்சிய டைந்தயனர்.
இதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் நாகூர் ஆண்டவர் தர்காவின் காவலாளிக்கும், நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.






