search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்து குழந்தை கடத்தல் எதிரொலி - திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிர சோதனைக்கு பிறகு வெளியே செல்ல அனுமதி
    X

    குழந்தைகளுடன் வருகிறவர்களின் விவரங்கள் ஆய்வு செய்ய்பபட்ட காட்சி.

    அடுத்தடுத்து குழந்தை கடத்தல் எதிரொலி - திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிர சோதனைக்கு பிறகு வெளியே செல்ல அனுமதி

    • கமலினி கடந்த 22ந் தேதி பிரசவத்திற்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • எஸ்தர் மற்றும் உமா ஆகிய 2 பெண்கள் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தின் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார். இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். கர்ப்பிணியான கமலினி பிரசவ வலியால் கடந்த 22&ந் தேதி பிரசவத்திற்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கமலினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் குழந்தை பிறந்து 3 நாளே ஆன நிலையில் நேற்று உதவி செய்வது போல் நடித்து எஸ்தர் மற்றும் உமா ஆகிய 2 பெண்கள் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களை போலீசார் தேடிய நிலையில் அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக பலத்த பாதுகாப்பு போடப்படுள்ளது.அரசு மருத்துவமனைக்கு உள்ளே வருகிறவர்கள் விசா ரணை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்கிறவர்கள் விசாரணை நடத்தப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுடன் வருகிறவர்கள் அவர்களின் விவரங்கள் ஆய்வு செய்ய்பபட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இது குறித்து டீன் முருகேசன் கூறியதாவது:& அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் கமலியிடம், எஸ்தர் மற்றும் உமா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இதனால் அவர்களை நம்பி குழந்தையை கொடு த்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் ஒரு குழந்தை கடத்தப்பட்டதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தினோம். அதன்படி வார்டில் ஒரு நோயாளிகளுக்கு ஒருவர் மட்டுமே இருக்க அனுமதித்து வந்தோம். தற்போது அவர்கள் நெருங்கி பழகி குழந்தையை ஏமாற்றி கடத்தி சென்றுள்ளனர். விரைவாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்போம். என்றார்.

    Next Story
    ×